திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குயிற்பத்து மாண் வருதல் காண்க. அவ்விறைவனைச் சேரன் என்றும் சோழன் என்றும் கூறியது சேர அரசர்களும் சோழ அரசர்களும் சிவபெருமானிடத் துப் பேரன்புடையவர்களாயும் தண்ணார் தமிழ் அளிக்கும் புடையவர்களாயும் வாழ்ந்து அவ்விறைவன் திருவருளால் தம்மர சு நிலைபெறப் பெற்றமை பற்றியாம். தென்னவன் சேரலன் சோழன் என முடிமன்னர் மூவரை மட்டும் கூறியது அடிகள் காலத்துத் தமிழ் கூறு நல்லுலகம் அம்மூவரது ஆட்சிக்குட்பட்டு இருந்தமை பற்றியா கும். புயங்கன் - அரவாபரணன், புயங்கம் என்னும் கூத்தையுடையன் என்பாருமுளர். இதன்கண், ''உன்னையுகப்பன் குயிலே உன்றுணைத் தோழியுமா வன் புயங்கன் வரக்கூவாய்" என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 7 353 863 வாவிங்கே நீ குயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி ஓவி யவருன்னி நிற்ப வொண்டழல் விண்பிளந் தோங்கி மேவியன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன் தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய். ப -ரை குயிற் பிள்ளாய் நீ இங்கே வா - குயிற்பிள்ளையே நீ இவ் விடத்துக்கு வருவாயாக. நான்சொல்வதனைக்கேள்; அன்று மாலொடு நான்முகன் தேடி அக்காலத்துத் திருமாலொடு பிரம னும் அடிமுகளைத் தேடி, ஓவி அவர் உன்னி நிற்ப-பின்னர் அவை அறியமுடியாமையின் அஃதொழிந்து அவ்விருவரும் இது யாதோ வென்று எண்ணி நிற்கும்படியாக, ஒள் தழல் விண்பிளந்து ஓங்கி மேவி - ஒள்ளிய அனற் பிழம்பாய் வானைப்பிளந்து உயர்ந்து பொருந்தி, அண்டம் கடந்து - அண்டங்களைக் கடந்து, விரிசுடராய் நின்ற மெய் யன் - பரந்த ஒளியுருவாகி நின்ற திருமேனியையுடையவனும், தாவி வரும் பரிபாகன் - பாய்ந்து வரும் குதிரைமேல் ஏறிவந்தவனும், தாழ் சடையோன் - தொங்குகின்ற சடையையுடையவனுமாகிய இறை வனை, வரகூவாய் - வரும்படி கூவி அழைப்பாயாக. . காடு பிடிப்புக குயிற்பிள்ளாய்! நீ இங்கே வா. திருமாலும் பிரமனும் தேடி அறியமுடியாமையால் அஃதொழிந்து இது யாதோ என்று சிந்தித்து நிற்கும்படியாக ஒள்ளிய அனற்பிழம்பாய் விண்பிளந்து உயர்ந்து பொருந்தி அண்டங்களைக் கடந்து பரந்த ஒளியுருவாகி நின்ற மெய் யனும் குதிரைமேல் ஏறிவந்தவனும் தாழ்சடையையுடையவனுமா கிய இறைவனை இங்கே வரும்படி கூவி அழைப்பாயாக என்பதாம்.
குயிற்பத்து மாண் வருதல் காண்க . அவ்விறைவனைச் சேரன் என்றும் சோழன் என்றும் கூறியது சேர அரசர்களும் சோழ அரசர்களும் சிவபெருமானிடத் துப் பேரன்புடையவர்களாயும் தண்ணார் தமிழ் அளிக்கும் புடையவர்களாயும் வாழ்ந்து அவ்விறைவன் திருவருளால் தம்மர சு நிலைபெறப் பெற்றமை பற்றியாம் . தென்னவன் சேரலன் சோழன் என முடிமன்னர் மூவரை மட்டும் கூறியது அடிகள் காலத்துத் தமிழ் கூறு நல்லுலகம் அம்மூவரது ஆட்சிக்குட்பட்டு இருந்தமை பற்றியா கும் . புயங்கன் - அரவாபரணன் புயங்கம் என்னும் கூத்தையுடையன் என்பாருமுளர் . இதன்கண் ' ' உன்னையுகப்பன் குயிலே உன்றுணைத் தோழியுமா வன் புயங்கன் வரக்கூவாய் என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 7 353 863 வாவிங்கே நீ குயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி ஓவி யவருன்னி நிற்ப வொண்டழல் விண்பிளந் தோங்கி மேவியன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன் தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய் . -ரை குயிற் பிள்ளாய் நீ இங்கே வா - குயிற்பிள்ளையே நீ இவ் விடத்துக்கு வருவாயாக . நான்சொல்வதனைக்கேள் ; அன்று மாலொடு நான்முகன் தேடி அக்காலத்துத் திருமாலொடு பிரம னும் அடிமுகளைத் தேடி ஓவி அவர் உன்னி நிற்ப - பின்னர் அவை அறியமுடியாமையின் அஃதொழிந்து அவ்விருவரும் இது யாதோ வென்று எண்ணி நிற்கும்படியாக ஒள் தழல் விண்பிளந்து ஓங்கி மேவி - ஒள்ளிய அனற் பிழம்பாய் வானைப்பிளந்து உயர்ந்து பொருந்தி அண்டம் கடந்து - அண்டங்களைக் கடந்து விரிசுடராய் நின்ற மெய் யன் - பரந்த ஒளியுருவாகி நின்ற திருமேனியையுடையவனும் தாவி வரும் பரிபாகன் - பாய்ந்து வரும் குதிரைமேல் ஏறிவந்தவனும் தாழ் சடையோன் - தொங்குகின்ற சடையையுடையவனுமாகிய இறை வனை வரகூவாய் - வரும்படி கூவி அழைப்பாயாக . . காடு பிடிப்புக குயிற்பிள்ளாய் ! நீ இங்கே வா . திருமாலும் பிரமனும் தேடி அறியமுடியாமையால் அஃதொழிந்து இது யாதோ என்று சிந்தித்து நிற்கும்படியாக ஒள்ளிய அனற்பிழம்பாய் விண்பிளந்து உயர்ந்து பொருந்தி அண்டங்களைக் கடந்து பரந்த ஒளியுருவாகி நின்ற மெய் யனும் குதிரைமேல் ஏறிவந்தவனும் தாழ்சடையையுடையவனுமா கிய இறைவனை இங்கே வரும்படி கூவி அழைப்பாயாக என்பதாம் .