திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குயிற்பத்து யுடைய செந்தாமரைமலர் போல விளங்குகின்ற செவ்விய திருமேனி யையுடைய திருவருட் செல்வனும், பார் இடை பாதங்கள் காட்டி- இந்நிலவுலகத்தின் கண்ணே தன் திருவடிகளை எனக்குக்காட்டி, பாசம் அறுத்து எனை ஆண்ட - எனது பாசத்தளையை அறுத்து என்னை அடிமை கொண்டருளிய, ஆர் உடை - திருவாத்திமாலையையுடைய, அம் பொன் மேனி அமுதினை அழகிய பொன்போலும் திருமேனியை யுடைய அமுதம் போன்றவனுமாகிய இறைவனை, நீ வர கூவாய் - நீ இங்கே வரும்படி கூவியழைப்பாயாக. - கரிய நிறத்தையுடைய பொன்போல விளங்குகின்ற மேனியை யுடைய குயிலே, செந்தாமரை மலர்போல விளங்கும் செவ்விய திரு மேனியையுடைய செல்வனும், இந்நிலவுலகின்கண்ணே தன் திருவடி களைக் காட்டிப் பாசம்அறுத்து என்னை அடிமைகொண்டருளிய, பொன் போலுந் திருமேனியையுடைய அமுதம் போன்றவனுமாகிய இறை வனை நீ இங்கே வரும்படி அழைப்பாயாக என்பதாம். BRENS குயில் 865 கருநிறமுடைத்தாயினும் பொன்னின் பசுமை திகழும் மேனி யுடைத்தாகலின் "காருடைப்பொன் றிகழ் மேனி" என்றார். இவ்வாறு அழைத்தது அதனை மகிழ்வித்துத் தன் தலைவனை அழைப்பித் தற்கு முகங்கொண்டவாறாகும். கடியென்பது ஈண்டு மணத்தையுணர்த் தியது. "கடிமலர்" (கலி: 135-6) என்புழிப்போல. சீருடைச் செல் வன் என இயையும். "ஒப்பாடாச் சீருடையான்" (தசாங். 6)"யாவர்க் கும் மேலாம் அளவிலாச் சீருடையான்" (திருவெண். 8) என வருவன காண்க. இனி, சீருடைச் செங்கமலம் எனக்கூட்டினுமமையும். திருவருட்செல்வனாகிய இறைவன் செந்தாமரைமலர் போல விளங்கும் திருமேனியையுடையனாகலின், "செங்கமலத் திகழுருவாகிய செல்வன்" என்றார்."அலங்கலந் தாமரை மேனியப்பா" (நீத் 29 "செந் தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே” (சத. 26) என அடிகள் பிறாண்டும் அருளியமையுங் காண்க. செல்வன் - வீடுபேறாகிய செல் வத்தையுடையவன் எனினுமாம். ற்றுக் பாரிடைப் பாதங்கள் காட்டி எனையாண்ட அமுது என்றது இந் நிலவுலகத்தில் பரமாசாரியனாய் எழுந்தருளி வந்து தனது திருவடி யைக் காட்டி எனை ஆட்கொண்டருளிய இறைவன் என்றவாறு. "அந்தணனாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி எந்தம ராமிவ னென்றிங் கென்னையுமாட்கொண் டருளும் ...... பிரான்" "நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி" (குயிற்.10) (பொற்.8) 85
குயிற்பத்து யுடைய செந்தாமரைமலர் போல விளங்குகின்ற செவ்விய திருமேனி யையுடைய திருவருட் செல்வனும் பார் இடை பாதங்கள் காட்டி இந்நிலவுலகத்தின் கண்ணே தன் திருவடிகளை எனக்குக்காட்டி பாசம் அறுத்து எனை ஆண்ட - எனது பாசத்தளையை அறுத்து என்னை அடிமை கொண்டருளிய ஆர் உடை - திருவாத்திமாலையையுடைய அம் பொன் மேனி அமுதினை அழகிய பொன்போலும் திருமேனியை யுடைய அமுதம் போன்றவனுமாகிய இறைவனை நீ வர கூவாய் - நீ இங்கே வரும்படி கூவியழைப்பாயாக . - கரிய நிறத்தையுடைய பொன்போல விளங்குகின்ற மேனியை யுடைய குயிலே செந்தாமரை மலர்போல விளங்கும் செவ்விய திரு மேனியையுடைய செல்வனும் இந்நிலவுலகின்கண்ணே தன் திருவடி களைக் காட்டிப் பாசம்அறுத்து என்னை அடிமைகொண்டருளிய பொன் போலுந் திருமேனியையுடைய அமுதம் போன்றவனுமாகிய இறை வனை நீ இங்கே வரும்படி அழைப்பாயாக என்பதாம் . BRENS குயில் 865 கருநிறமுடைத்தாயினும் பொன்னின் பசுமை திகழும் மேனி யுடைத்தாகலின் காருடைப்பொன் றிகழ் மேனி என்றார் . இவ்வாறு அழைத்தது அதனை மகிழ்வித்துத் தன் தலைவனை அழைப்பித் தற்கு முகங்கொண்டவாறாகும் . கடியென்பது ஈண்டு மணத்தையுணர்த் தியது . கடிமலர் ( கலி : 135-6 ) என்புழிப்போல . சீருடைச் செல் வன் என இயையும் . ஒப்பாடாச் சீருடையான் ( தசாங் . 6 ) யாவர்க் கும் மேலாம் அளவிலாச் சீருடையான் ( திருவெண் . 8 ) என வருவன காண்க . இனி சீருடைச் செங்கமலம் எனக்கூட்டினுமமையும் . திருவருட்செல்வனாகிய இறைவன் செந்தாமரைமலர் போல விளங்கும் திருமேனியையுடையனாகலின் செங்கமலத் திகழுருவாகிய செல்வன் என்றார் . அலங்கலந் தாமரை மேனியப்பா ( நீத் 29 செந் தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே ( சத . 26 ) என அடிகள் பிறாண்டும் அருளியமையுங் காண்க . செல்வன் - வீடுபேறாகிய செல் வத்தையுடையவன் எனினுமாம் . ற்றுக் பாரிடைப் பாதங்கள் காட்டி எனையாண்ட அமுது என்றது இந் நிலவுலகத்தில் பரமாசாரியனாய் எழுந்தருளி வந்து தனது திருவடி யைக் காட்டி எனை ஆட்கொண்டருளிய இறைவன் என்றவாறு . அந்தணனாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி எந்தம ராமிவ னென்றிங் கென்னையுமாட்கொண் டருளும் ...... பிரான் நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ( குயிற் .10 ) ( பொற் .8 ) 85