திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்" (சதகம் 25) "எம்பிரான் எல்லையில் லாததன் இணை மலர்க் கழல்காட்டி அறிவு தந்தெனை யாண்டுகொண் டருளிய அற்புதம்"(அற்புதப். 10) என இத் திருவாசகத்தும் வருவன காண்க. 866 Cana பாச மறுத்தெனை யாண்ட என்றது பாசமாகிய தளையிற் பட்டுக் கிடப்ப அத்தளையை யறுத்துத் தனக்குக் குற்றேவல் செய்ய என்னை அடிமைகொண்டருளிய என்றவாறு. "பாசத்தளை யறுத்தாண்டு கொண்டோன்" (திருக்கோவை 115) "பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால், ஆசைதீர்த்து'' (அற்புத 8 ) என் அடிகள் அருளியமையுங் காண்க. "பாசம் அறுத்திட்டவனெந்தை யாண்டருள் ஆதிப்பெருமான்" எனத் திருமந்திரத்து (2975)வருதலுங் காண்க. பாசம் - உயிரினைக்கட்டியுள்ள ஆணவம் கன்மம் மாயை. ஆர்-ஆத்தி, 'ஆரே தாதகி சல்லகி யாத்தி" (பிங். 9-88). இங்கே ஆகுபெயராய் ஆத்திமாலையையுணர்த்திற்று. ''ஆரானை ஆரூரிலம்மான் தன்னை" (நாவு.242-10) "தாருந் தண்கொன்றையுங் கூவிளந் தனி மத்தமும் ஆரு மளவறியாத வாதியும்" (சுந். 44-7) எனத் தேவாரத்தும் வருவன காண்க. ஆருடை - அரிய உடை. அருமை இன்மை குறித்தது எனக்கொண்டு திக்காடையுடையான் எனவும் உரைக்கலாம் inal இதன்கண், "குயிலே... அம்பொன் மேனியமுதினை நீ வரக்கூவாய்'' என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க. 9 355 கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிதுகேள்நீ அந்தண னாகிவந் திங்கே பழகிய சேவடி காட்டி எந்தம ராமிவ னென்றிங் கென்னையு மாட்கொண் டருளுஞ் செந்தழல் போற்றிரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய். ப- ரை. கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே - பூங் கொத்துக்கள் நெருங்கிய பொழிற் சோலையில் தங்கிக் கூவா நின்ற குயிலே, நீ இது கேள் - நீ நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக; இங்கே அந்தணன் ஆகி வந்து - இவ்வுலகத்தே வேதியனாகி வலிய எழுந் தருளிவந்து, அழகிய சே அடி காட்டி - அழகிய சிவந்த திருவடிகளைக் காட்டி, இவன் எம் தமராம் என்று - இவ்வடியவன் எமது அணுக் கன் தொண்டருள் ஒருவனாம் எனத் திருவுளங்கொண்டு, இங்கு என்னையும் ஆட்கொண்டருளும்-இவ்வுலகில் ஒன்றும் போதா நாயேனை யும் அடிமைகொண்டருளிய, செந்தழல் போல் திருமேனி தேவர்
திருவாசக ஆராய்ச்சியுரை மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் ( சதகம் 25 ) எம்பிரான் எல்லையில் லாததன் இணை மலர்க் கழல்காட்டி அறிவு தந்தெனை யாண்டுகொண் டருளிய அற்புதம் ( அற்புதப் . 10 ) என இத் திருவாசகத்தும் வருவன காண்க . 866 Cana பாச மறுத்தெனை யாண்ட என்றது பாசமாகிய தளையிற் பட்டுக் கிடப்ப அத்தளையை யறுத்துத் தனக்குக் குற்றேவல் செய்ய என்னை அடிமைகொண்டருளிய என்றவாறு . பாசத்தளை யறுத்தாண்டு கொண்டோன் ( திருக்கோவை 115 ) பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால் ஆசைதீர்த்து ' ' ( அற்புத 8 ) என் அடிகள் அருளியமையுங் காண்க . பாசம் அறுத்திட்டவனெந்தை யாண்டருள் ஆதிப்பெருமான் எனத் திருமந்திரத்து ( 2975 ) வருதலுங் காண்க . பாசம் - உயிரினைக்கட்டியுள்ள ஆணவம் கன்மம் மாயை . ஆர் - ஆத்தி ' ஆரே தாதகி சல்லகி யாத்தி ( பிங் . 9-88 ) . இங்கே ஆகுபெயராய் ஆத்திமாலையையுணர்த்திற்று . ' ' ஆரானை ஆரூரிலம்மான் தன்னை ( நாவு.242-10 ) தாருந் தண்கொன்றையுங் கூவிளந் தனி மத்தமும் ஆரு மளவறியாத வாதியும் ( சுந் . 44-7 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . ஆருடை - அரிய உடை . அருமை இன்மை குறித்தது எனக்கொண்டு திக்காடையுடையான் எனவும் உரைக்கலாம் inal இதன்கண் குயிலே ... அம்பொன் மேனியமுதினை நீ வரக்கூவாய் ' ' என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க . 9 355 கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிதுகேள்நீ அந்தண னாகிவந் திங்கே பழகிய சேவடி காட்டி எந்தம ராமிவ னென்றிங் கென்னையு மாட்கொண் டருளுஞ் செந்தழல் போற்றிரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய் . ப- ரை . கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே - பூங் கொத்துக்கள் நெருங்கிய பொழிற் சோலையில் தங்கிக் கூவா நின்ற குயிலே நீ இது கேள் - நீ நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக ; இங்கே அந்தணன் ஆகி வந்து - இவ்வுலகத்தே வேதியனாகி வலிய எழுந் தருளிவந்து அழகிய சே அடி காட்டி - அழகிய சிவந்த திருவடிகளைக் காட்டி இவன் எம் தமராம் என்று - இவ்வடியவன் எமது அணுக் கன் தொண்டருள் ஒருவனாம் எனத் திருவுளங்கொண்டு இங்கு என்னையும் ஆட்கொண்டருளும் - இவ்வுலகில் ஒன்றும் போதா நாயேனை யும் அடிமைகொண்டருளிய செந்தழல் போல் திருமேனி தேவர்