திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குயிற்பத்து 867 பிரான் வர கூவாய் - செந்தழலை ஒத்த திருமேனியையுடைய தேவர் பெருமானாகிய இறைவன் வரும்படி நீ கூவியழைப்பாயாக. பூங்கொத்துக்கள் நெருங்கிய சோலையிலுள்ள குயிலே, நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக. இந்நிலவுலகத்தில் அந்தணனாகி வலிய எழுந்தருளிவந்து தன் அழகிய சேவடியைக் காட்டி இவன் எந் தமராம் எனத் திருவுளங்கொண்டு இவ்வுலகில் என்னையும் அடிமை கொண்டருளிய செந்தழல்போலும் திருமேனியையுடைய தேவர்பிரா னாகிய இறைவன் வரும்படி நீ கூவி யழைப்பாயாக என்பதாம். கொந்தணவும் பொழில்- பூங்கொத்துக்கள் நெருங்கிய பொழில். ''கொந்தணவும் பொழில் சூழ் குளிர்மாமதில்" "கொந்தணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்" (சுந். 25-7; 85-4) எனத் தேவாரத் தும் வருதல் காண்க. கொத்து என்பது எதுகை நோக்கிக் கொந்து என மெலிந்து நின்றது. பொழிற்சோலை - பொழிலாகிய சோலை; இனி பெருமையையுடைய சோலை எனினுமாம். "புவியுஞ் சோலையும் பெருமையும் பொழிலே" என்பது பிங்கலந்தை (10-867). கூவும் என் பது கூம் எனக் குறுகிற்று. கூங்குயிலே யிதுகேள் நீ என்றது கூவுந்தொழிலையே இயல்பாகக் கொண்டிருக்கின்ற குயிலே கூவுதலைவிடுத்து நான் சொல்வதைக் கேட் டுத் தேவர்பிரான் வரக்கூவாய் எனத் தமது வேணவாவினைக் குயிலுக் குக் கூறியதாகும். அந்தணனாகி வந்தாட்கொண்டருளும் தேவர் பிரான் என இயையும். "அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே'' அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்" "அந்தண்னா பாண்டு கொண்டான்" என வருவன காண்க. சேவடி காட்டி யாண்டமை, பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானை' *நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை யாட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி" (கோத். 14) (திருப்பள்ளி.8) (தெள்.1) 'பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை பாண்ட ஆருடை யம்பொனின் மேனி அமுதினை' என வருவனவற்றாலுமறிக. (அம்.10) (பொற்.8) (குயிற்.9)
குயிற்பத்து 867 பிரான் வர கூவாய் - செந்தழலை ஒத்த திருமேனியையுடைய தேவர் பெருமானாகிய இறைவன் வரும்படி நீ கூவியழைப்பாயாக . பூங்கொத்துக்கள் நெருங்கிய சோலையிலுள்ள குயிலே நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக . இந்நிலவுலகத்தில் அந்தணனாகி வலிய எழுந்தருளிவந்து தன் அழகிய சேவடியைக் காட்டி இவன் எந் தமராம் எனத் திருவுளங்கொண்டு இவ்வுலகில் என்னையும் அடிமை கொண்டருளிய செந்தழல்போலும் திருமேனியையுடைய தேவர்பிரா னாகிய இறைவன் வரும்படி நீ கூவி யழைப்பாயாக என்பதாம் . கொந்தணவும் பொழில்- பூங்கொத்துக்கள் நெருங்கிய பொழில் . ' ' கொந்தணவும் பொழில் சூழ் குளிர்மாமதில் கொந்தணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் ( சுந் . 25-7 ; 85-4 ) எனத் தேவாரத் தும் வருதல் காண்க . கொத்து என்பது எதுகை நோக்கிக் கொந்து என மெலிந்து நின்றது . பொழிற்சோலை - பொழிலாகிய சோலை ; இனி பெருமையையுடைய சோலை எனினுமாம் . புவியுஞ் சோலையும் பெருமையும் பொழிலே என்பது பிங்கலந்தை ( 10-867 ) . கூவும் என் பது கூம் எனக் குறுகிற்று . கூங்குயிலே யிதுகேள் நீ என்றது கூவுந்தொழிலையே இயல்பாகக் கொண்டிருக்கின்ற குயிலே கூவுதலைவிடுத்து நான் சொல்வதைக் கேட் டுத் தேவர்பிரான் வரக்கூவாய் எனத் தமது வேணவாவினைக் குயிலுக் குக் கூறியதாகும் . அந்தணனாகி வந்தாட்கொண்டருளும் தேவர் பிரான் என இயையும் . அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே ' ' அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய் அந்தண்னா பாண்டு கொண்டான் என வருவன காண்க . சேவடி காட்டி யாண்டமை பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானை ' * நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை யாட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ( கோத் . 14 ) ( திருப்பள்ளி .8 ) ( தெள் .1 ) ' பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை பாண்ட ஆருடை யம்பொனின் மேனி அமுதினை ' என வருவனவற்றாலுமறிக . ( அம் .10 ) ( பொற் .8 ) ( குயிற் .9 )