திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

357 திருத்தசாங்கம் ஏதமிலா வின்சொன் மரகதமே யேழ்பொழிற்கும் நாதனமை யாளுடையா னாடுரையாய் - காதலவர்க் கன்பாண்டு மீளா வருள்புரிவா னாடென்றும் தென்பாண்டி நாடே தெளி. 871 ப-ரை. ஏதம் இலா இன்சொல் மரகதமே - குற்றமில்லாத இன்சொல்லையுடைய மரகதம்போலும் பசுங்கிளியே, ஏழ் பொழிற் கும் நாதன் - ஏழு உலகங்களுக்கும் தலைவனும், நமை ஆள் உடை யான் - நம்மை அடிமையாகவுடையவனுமாகிய இறைவனது, நாடு உரையாய் - நாட்டினை இன்னதென தெளிந்து கூறுவாயாக எனத் தலைவி வினாவ, காதலவர்க்கு அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு - தன் அன்புள்ளவர்க்கு அவ்வன்பினால் அவர்களை ஆட்கொண் கொண்டருளிப் பிறவிக்கு மீண்டும் வாராவண்ணம் திருவருளைச் செய் பவனது திருநாடு, என்றும் தென்பாண்டி நாடே தெளி -எக்காலத் தும் தெற்கின்கணுள்ள பாண்டிநாடே எனத் தெளிவாயாக எனக் கிளிகூறியது. 10g 5 ஏதமிலா இன்சொல்லையுடைய கிளியே! ஏழுலகங்களுக்கும் தலை வனும் நம்மை ஆளுடையானுமாகிய இறைவனது நாட்டினை இன்ன தெனத் தெளிந்து கூறுவாயாக என்று தலைவி வினாவ, தன்பால் அன் புள்ளவர்க்கு அன்பினால் ஆட்கொண்டருளிப் பிறவிக்கு மீண்டு வாரா வண்ணம் திருவருளைச் செய்பவனது திருநாடு எக்காலத்தும் தென் பாண்டி நாடே எனத் தெளிவாயாக எனக் கிளி கூறியது என்பதாம்; ஏதம் - குற்றம் இன்சொல் - இனிய பேச்சு. மரகதம் - பச்சை மணி. 'பாசார் மேனிப் பசுங்கதி ரொளியவும்" (சிலப். 14-185) என் வருதல் காண்க. அது பச்சை நிறத்தையுடைய கிளியை உணர்த்து தலின் ஆகுபெயர். ஏழ்பொழில் - ஏழுலகு. "ஏழுடையான் பொழில்" (திருக்கோவை.7). காதலவர்க்கு அருள்புரிவான் என இயையும். அன் பாண்டு - அவர்கள் அன்பினால் அவர்களை ஆட்கொண்டு, மீளா அருள்- பிறவிக்கு மீண்டு வாராத வீடுபேறாகிய பேரருள். தென்பாண்டி நாடே இறைவன் நாடு எனக்கூறியது, "தமரநீர்ப் புவன முழுதொருங் கின்றாள் தடாதகா தேவியென் றொருபெர் தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவும் குமரவேள் வழுதி யுக்கிர னெனப்பேர் கொண்டதும்" அத்தென்பாண்டி நாட்டிலே யாதலால் என்க. (மதுரைக் கலம்பகம் 196) இதன்கண், 'தென்பாண்டி நாடே தெளி" என்பதனால் இறைவன் நாடு கூறப்பட்டது. 2
357 திருத்தசாங்கம் ஏதமிலா வின்சொன் மரகதமே யேழ்பொழிற்கும் நாதனமை யாளுடையா னாடுரையாய் - காதலவர்க் கன்பாண்டு மீளா வருள்புரிவா னாடென்றும் தென்பாண்டி நாடே தெளி . 871 - ரை . ஏதம் இலா இன்சொல் மரகதமே - குற்றமில்லாத இன்சொல்லையுடைய மரகதம்போலும் பசுங்கிளியே ஏழ் பொழிற் கும் நாதன் - ஏழு உலகங்களுக்கும் தலைவனும் நமை ஆள் உடை யான் - நம்மை அடிமையாகவுடையவனுமாகிய இறைவனது நாடு உரையாய் - நாட்டினை இன்னதென தெளிந்து கூறுவாயாக எனத் தலைவி வினாவ காதலவர்க்கு அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு - தன் அன்புள்ளவர்க்கு அவ்வன்பினால் அவர்களை ஆட்கொண் கொண்டருளிப் பிறவிக்கு மீண்டும் வாராவண்ணம் திருவருளைச் செய் பவனது திருநாடு என்றும் தென்பாண்டி நாடே தெளி -எக்காலத் தும் தெற்கின்கணுள்ள பாண்டிநாடே எனத் தெளிவாயாக எனக் கிளிகூறியது . 10g 5 ஏதமிலா இன்சொல்லையுடைய கிளியே ! ஏழுலகங்களுக்கும் தலை வனும் நம்மை ஆளுடையானுமாகிய இறைவனது நாட்டினை இன்ன தெனத் தெளிந்து கூறுவாயாக என்று தலைவி வினாவ தன்பால் அன் புள்ளவர்க்கு அன்பினால் ஆட்கொண்டருளிப் பிறவிக்கு மீண்டு வாரா வண்ணம் திருவருளைச் செய்பவனது திருநாடு எக்காலத்தும் தென் பாண்டி நாடே எனத் தெளிவாயாக எனக் கிளி கூறியது என்பதாம் ; ஏதம் - குற்றம் இன்சொல் - இனிய பேச்சு . மரகதம் - பச்சை மணி . ' பாசார் மேனிப் பசுங்கதி ரொளியவும் ( சிலப் . 14-185 ) என் வருதல் காண்க . அது பச்சை நிறத்தையுடைய கிளியை உணர்த்து தலின் ஆகுபெயர் . ஏழ்பொழில் - ஏழுலகு . ஏழுடையான் பொழில் ( திருக்கோவை .7 ) . காதலவர்க்கு அருள்புரிவான் என இயையும் . அன் பாண்டு - அவர்கள் அன்பினால் அவர்களை ஆட்கொண்டு மீளா அருள் பிறவிக்கு மீண்டு வாராத வீடுபேறாகிய பேரருள் . தென்பாண்டி நாடே இறைவன் நாடு எனக்கூறியது தமரநீர்ப் புவன முழுதொருங் கின்றாள் தடாதகா தேவியென் றொருபெர் தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவும் குமரவேள் வழுதி யுக்கிர னெனப்பேர் கொண்டதும் அத்தென்பாண்டி நாட்டிலே யாதலால் என்க . ( மதுரைக் கலம்பகம் 196 ) இதன்கண் ' தென்பாண்டி நாடே தெளி என்பதனால் இறைவன் நாடு கூறப்பட்டது . 2