திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

872 358 திருவாசக ஆராய்ச்சியுரை தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தன் வாழ்பதியென் - கோதாட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம் போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர். ப-ரை. தாது ஆடு பூ சோலை தத்தாய் - பூந்தாது சொரிகின்ற அழகிய சோலைக்கணுள்ள கிளியே, நமை ஆளும் மாது ஆடு பாகத்தன் வாழ் பதி என் - நம்மை ஆட்கொண்டருளும் உமை அமர்ந்த பாகத் தான் எழுந்தருளியிருக்கும் திருப்பதி யாது என்று தலைவி வினாவ, பத் தர் எல்லாம் பார்மேல் சிவபுரம்போல் கோதாட்டி கொண்டாடும்- அன்பரெல்லாரும் நிலவுலகத்தில் சிவபுரம்போலச் சீராட்டிக்கொண் டாடும், உத்தரகோசமங்கை ஊர் - திருவுத்தரகோசமங்கையே அவ் விறைவன் வாழ்பதியாகும் எனக் கிளி கூறியது. பூஞ்சோலையிலுள்ள கிளியே! எம்மை ஆட்கொண்டருளும் உமை யமர்ந்த பாகத்தான் எழுந்தருளியிருக்கும் திருப்பதி யாது என்று தலைவி வினாவ, அன்பரெல்லாம் இவ்வுலகத்தில் சிவபுரம்போல் பாராட்டிக் கொண்டாடும் திருவுத்தரகோசமங்கையே அவ்விறைவன் வாழ்பதியாகும் என்று கிளி கூறியது என்பதாம். தாது - பூந்தாது, மகரந்தம். தத்தை - கிளி. 'தத்தைக்கிளவி முகத்தாமரைத் தழல்வேன் மிளிர்ந்து" (388) என்னும் திருக்கோவை யாரினும் இப்பொருட்டாதல் காண்க. மாதாடும் பாகத்தன் - உமை யமர்ந்த பாகத்தன் "மாதாடு பாகத்தன் உத்தரகோசமங்கைத் தாதாடு கொன்றைச் சடையான்" (பொன்னூசல். 6) என வந்தமை யுங் காண்க. பதி - ஊர். கோதாட்டிக் கொண்டாடும் எனக் கூட்டுக. கோதாட்டுதல் சீராட்டுதல். 'குருவி பறவாமற் கோதாட்டி" (பட்டினத். திருப்பா. 17-8) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. கோதாட்டிப் பத்தரெல்லாம் எனக் கிடந்தவாறே கூட்டி, தகுதியில் ராயினும் இறைவனால் ஏற்றுக்கொண்டருளப்பெற்று அதனால் உயர் வடைந்த அன்பரெல்லாரும் எனவும் உரைக்கலாம். ஈண்டு, கோதாட் டுதல் - தகுதியில்லாரையும் அருளால் ஏற்றுக்கொள்ளுதல் எனவும் கோதாட்டி என்னும் செய்தெனெச்சம் செயப்பாட்டு வினையெச்சப் பொருளில் வந்தது எனவும் கொண்டு பத்தரெல்லாம் கொண்டாடும் உத்தரகோசமங்கையூர் என இயையும். இறைவன் அமரும் ஊர்கள் பலவுளவாகவும் திருவுத்தரகோச மங்கையை ஊராகக் கூறியது இறைவன், உயிர்களுக்குச் சிறந்த உண்மையறிவினை உணர்த்தும் உத்தரகோசம் என்னும் ஆகமத் தினை உபதேசித்ததனாலாகும் 'உத்தரகோசமங்கை யூராகவும்' (120) எனக்கீர்த்தித் திருவகவலில் வந்தமை காண்க. இதன்கண் 'உத்தரகோசமங்கையூர்" என்பதனால் இறைவன் ஊர் கூறப்பட்டது. - 3
872 358 திருவாசக ஆராய்ச்சியுரை தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தன் வாழ்பதியென் - கோதாட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம் போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர் . - ரை . தாது ஆடு பூ சோலை தத்தாய் - பூந்தாது சொரிகின்ற அழகிய சோலைக்கணுள்ள கிளியே நமை ஆளும் மாது ஆடு பாகத்தன் வாழ் பதி என் - நம்மை ஆட்கொண்டருளும் உமை அமர்ந்த பாகத் தான் எழுந்தருளியிருக்கும் திருப்பதி யாது என்று தலைவி வினாவ பத் தர் எல்லாம் பார்மேல் சிவபுரம்போல் கோதாட்டி கொண்டாடும் அன்பரெல்லாரும் நிலவுலகத்தில் சிவபுரம்போலச் சீராட்டிக்கொண் டாடும் உத்தரகோசமங்கை ஊர் - திருவுத்தரகோசமங்கையே அவ் விறைவன் வாழ்பதியாகும் எனக் கிளி கூறியது . பூஞ்சோலையிலுள்ள கிளியே ! எம்மை ஆட்கொண்டருளும் உமை யமர்ந்த பாகத்தான் எழுந்தருளியிருக்கும் திருப்பதி யாது என்று தலைவி வினாவ அன்பரெல்லாம் இவ்வுலகத்தில் சிவபுரம்போல் பாராட்டிக் கொண்டாடும் திருவுத்தரகோசமங்கையே அவ்விறைவன் வாழ்பதியாகும் என்று கிளி கூறியது என்பதாம் . தாது - பூந்தாது மகரந்தம் . தத்தை - கிளி . ' தத்தைக்கிளவி முகத்தாமரைத் தழல்வேன் மிளிர்ந்து ( 388 ) என்னும் திருக்கோவை யாரினும் இப்பொருட்டாதல் காண்க . மாதாடும் பாகத்தன் - உமை யமர்ந்த பாகத்தன் மாதாடு பாகத்தன் உத்தரகோசமங்கைத் தாதாடு கொன்றைச் சடையான் ( பொன்னூசல் . 6 ) என வந்தமை யுங் காண்க . பதி - ஊர் . கோதாட்டிக் கொண்டாடும் எனக் கூட்டுக . கோதாட்டுதல் சீராட்டுதல் . ' குருவி பறவாமற் கோதாட்டி ( பட்டினத் . திருப்பா . 17-8 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . கோதாட்டிப் பத்தரெல்லாம் எனக் கிடந்தவாறே கூட்டி தகுதியில் ராயினும் இறைவனால் ஏற்றுக்கொண்டருளப்பெற்று அதனால் உயர் வடைந்த அன்பரெல்லாரும் எனவும் உரைக்கலாம் . ஈண்டு கோதாட் டுதல் - தகுதியில்லாரையும் அருளால் ஏற்றுக்கொள்ளுதல் எனவும் கோதாட்டி என்னும் செய்தெனெச்சம் செயப்பாட்டு வினையெச்சப் பொருளில் வந்தது எனவும் கொண்டு பத்தரெல்லாம் கொண்டாடும் உத்தரகோசமங்கையூர் என இயையும் . இறைவன் அமரும் ஊர்கள் பலவுளவாகவும் திருவுத்தரகோச மங்கையை ஊராகக் கூறியது இறைவன் உயிர்களுக்குச் சிறந்த உண்மையறிவினை உணர்த்தும் உத்தரகோசம் என்னும் ஆகமத் தினை உபதேசித்ததனாலாகும் ' உத்தரகோசமங்கை யூராகவும் ' ( 120 ) எனக்கீர்த்தித் திருவகவலில் வந்தமை காண்க . இதன்கண் ' உத்தரகோசமங்கையூர் என்பதனால் இறைவன் ஊர் கூறப்பட்டது . - 3