திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 491 கிடந்தாள்'' என்பார், "கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து ஏதேனுமாகாள் கிடந்தாள்" என்றார், மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் என்று துயி லெழுப்ப வந்த கன்னியர் தம் தோழியை வினாவுதலும் அதற்கு மறு மாற்றமின்மையின் அத்தோழியின் வீட்டின் பள்ளியறைக்கே சென்று, விம்மி விம்மி மெய்ம்மறந்து யாதொன்றுஞ் செய்ய இயலாதவளாய்ப் பரவசமாய்க் கிடந்தமையைக் கண்டனராதலின், 'இங்ஙன் ஏதேனு மாகாள் கிடந்தாள்' என்றனர். இங்ஙன் - இவ்வாறு. ஈதே எந்தோழி பரிசு என்றது, துயிலெழுப்பச் சென்ற கன்னி யர் மாதேவன் வார்கழல் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதி வாய்க் கேட்ட அளவிலேயே விம்மி விம்மி மெய்ம்மறந்து ஏதேனு மாகாளாய்க் கிடந்த தம் தோழியின் தலையாய அன்பின் திறங்கண்டு இதுவா எங்கள் தோழியின் தன்மையென அவள் பத்தித் திறத்தை வியந்து தம்முட் கூறியதாகும். பரிசு - தன்மை. ஏதேனு மாகாள் கிடந்தாள் துயிலெழுப்பப்பட்டவளேயாவள். அவளை மற்றொரு வீட்டுப்பெண்ணாகக்கொண்டு, ஏதேனுமாகாள் கிடந் தாள் எந்தோழி பரிசு ஈதே என்பதற்கு இறைவன் திருவடியை வாழ்த்திய வாழ்த்தொலியைக் கேட்ட அளவிலேயே மெய்ம்மறந்து எச்செயற்கும் ஆளாகாமல் இவ்வாறு கிடந்தாள்; இவள் செயல் இவ்வாறாக எங்கள் தோழியாகிய நின்தன்மை இவ்வாறு உளது எனின்; துயிலெழுப்பியவர் இதற்குமுன் ஒரு வீட்டினுட் புக்கு பத்தியால் ஏதேனுமாகாது கிடத்தாளை உடன் அழைத்துச்சென்று அவள் நிலையைச் சுட்டிக்காட்டியதாகவும் எழுப்பப்பட்ட தோழி ஒரு சிறிதும் பத்தி இல்லாதவளாகவும் அமையுமாதலின் அங்ஙனம் கோடல் பொருந்தா தென்க. ஏலோரெம்பாவாய் என்பதில் ஏல், ஓர் என்பன அசை நிலை கள். சிலப்பதிகார வாழ்த்துக்காதையில் பாடேலோரம்மானை என் புழி ஏலும்,ஓரும் அசையென அரும்பதவுரைகாரர் கூறியிருத்தலுங் காண்க. எம்பாவாய் என்பது கன்னியர் மேற்கொண்ட பாவை நோன்பிற்கு அதிதெய்வமாகிய பார்வதிதேவியைக் குறிப்பதாகும். எம்பாவாய் என விளித்தமைக் கேற்ப எங்களுக்கும் இவள்போன்ற பத்தித் திறத்தை அருள்வாயாக என சில சொற்கள் வருவித்து முடிக்க. இப்பாட்டு மனோன்மணி என்னும் சத்தி சர்வபூததமனி என் னும் சத்தியைத் துயிலுணர்த்துதலாகக் கூறப்பட்டது என்க. இதன்கண், எம்பாவாய் என்பதனால் சத்தியை வியந்தது என் னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க. இவ்வாறே ஏனைய திருப்பாடல்களுக்கும் கொள்க. 1.
திருவெம்பாவை 491 கிடந்தாள் ' ' என்பார் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து ஏதேனுமாகாள் கிடந்தாள் என்றார் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் என்று துயி லெழுப்ப வந்த கன்னியர் தம் தோழியை வினாவுதலும் அதற்கு மறு மாற்றமின்மையின் அத்தோழியின் வீட்டின் பள்ளியறைக்கே சென்று விம்மி விம்மி மெய்ம்மறந்து யாதொன்றுஞ் செய்ய இயலாதவளாய்ப் பரவசமாய்க் கிடந்தமையைக் கண்டனராதலின் ' இங்ஙன் ஏதேனு மாகாள் கிடந்தாள் ' என்றனர் . இங்ஙன் - இவ்வாறு . ஈதே எந்தோழி பரிசு என்றது துயிலெழுப்பச் சென்ற கன்னி யர் மாதேவன் வார்கழல் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதி வாய்க் கேட்ட அளவிலேயே விம்மி விம்மி மெய்ம்மறந்து ஏதேனு மாகாளாய்க் கிடந்த தம் தோழியின் தலையாய அன்பின் திறங்கண்டு இதுவா எங்கள் தோழியின் தன்மையென அவள் பத்தித் திறத்தை வியந்து தம்முட் கூறியதாகும் . பரிசு - தன்மை . ஏதேனு மாகாள் கிடந்தாள் துயிலெழுப்பப்பட்டவளேயாவள் . அவளை மற்றொரு வீட்டுப்பெண்ணாகக்கொண்டு ஏதேனுமாகாள் கிடந் தாள் எந்தோழி பரிசு ஈதே என்பதற்கு இறைவன் திருவடியை வாழ்த்திய வாழ்த்தொலியைக் கேட்ட அளவிலேயே மெய்ம்மறந்து எச்செயற்கும் ஆளாகாமல் இவ்வாறு கிடந்தாள் ; இவள் செயல் இவ்வாறாக எங்கள் தோழியாகிய நின்தன்மை இவ்வாறு உளது எனின் ; துயிலெழுப்பியவர் இதற்குமுன் ஒரு வீட்டினுட் புக்கு பத்தியால் ஏதேனுமாகாது கிடத்தாளை உடன் அழைத்துச்சென்று அவள் நிலையைச் சுட்டிக்காட்டியதாகவும் எழுப்பப்பட்ட தோழி ஒரு சிறிதும் பத்தி இல்லாதவளாகவும் அமையுமாதலின் அங்ஙனம் கோடல் பொருந்தா தென்க . ஏலோரெம்பாவாய் என்பதில் ஏல் ஓர் என்பன அசை நிலை கள் . சிலப்பதிகார வாழ்த்துக்காதையில் பாடேலோரம்மானை என் புழி ஏலும் ஓரும் அசையென அரும்பதவுரைகாரர் கூறியிருத்தலுங் காண்க . எம்பாவாய் என்பது கன்னியர் மேற்கொண்ட பாவை நோன்பிற்கு அதிதெய்வமாகிய பார்வதிதேவியைக் குறிப்பதாகும் . எம்பாவாய் என விளித்தமைக் கேற்ப எங்களுக்கும் இவள்போன்ற பத்தித் திறத்தை அருள்வாயாக என சில சொற்கள் வருவித்து முடிக்க . இப்பாட்டு மனோன்மணி என்னும் சத்தி சர்வபூததமனி என் னும் சத்தியைத் துயிலுணர்த்துதலாகக் கூறப்பட்டது என்க . இதன்கண் எம்பாவாய் என்பதனால் சத்தியை வியந்தது என் னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க . இவ்வாறே ஏனைய திருப்பாடல்களுக்கும் கொள்க . 1 .