திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

878 364 திருவாசக ஆராய்ச்சியுரை - ஆய மொழிக்கிள்ளா யள்ளூறு மன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த்தாரென் தீயவினை நாளுமணு காவண்ணம் நாயேனை யாளுடையான் தாளியறு காமுவந்த தார். ப-ரை. ஆய மொழி கிள்ளாய் - இனிமையாகிய மொழிகளைப் பேசுகின்ற கிள்ளையே, அள்ளூறும் அன்பர் பால் மேய பெருந்துறை யான் மெய்தார் என் - தன்னை விரும்பி வாயூறுகின்ற மெய்யன்பர் களின் உள்ளத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பெருந்துறையையுடை யவனது திருமார்பில் அணிந்த திருமாலை யாது எனத் தலைவி வினாவ, தீய வினை நாளும் அணுகாவண்ணம் - கொடிய வினைப் பயனாகிய துன் பம் ஒருநாளும் என்னை அடையாதபடி, நாயேனை ஆளுடையான் - இழி வுடைய என்னை ஆளாகவுடைய இறைவன், உவந்த தார் தாளி அறு காம் - விரும்பியமாலை தாளியறுகின் மாலையேயாகும் என்று கிளி கூறியது. இனிமையாகிய மொழிகளைப் பேசுகின்ற கிள்ளையே! தன்னை விரும்பி அள்ளூறும் மெய்யன்பர்களின் உள்ளத்தில் எழுந்தருளியிருக் கின்ற திருப்பெருந்துறையை உடைய இறைவனது திருமார்பில் அணிந்த மாலை யாது என்று தலைவி வினாவ, தீவினைப்பயனாகிய துன்பம் ஒருநாளும் என்னையடையாதபடி நாயேனை ஆளாகவுடைய இறைவன் விரும்பிய மாலை தாளி அறுகாலாகிய மாலையே என்று கிளி கூறியது. ஆய - இனிமையாகிய. ஆய என்னும் ஆக்கவினைக்கு இனிமை என் னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது. அள்ளூறுதல் - வாயூறுதல். 'அள் ளூறித் தித்திக்கப் பேசுவாய்" (திருவெம்பா.3) என வந்தமையுங் காண்க. அது ஒரு பொருளின்மேல் வைத்த பெருவிருப்பால் உளதாவ தாகலின் "அள்ளூறும் அன்பர்' என்றார். தார் எனக் கூறினமையின் மெய்த்தார் என்பதற்கு திருமார்பின் திருமாலை என உரைக்கப்பட் டது. தீயவினை என்றது தீயவினையின் பயனாகிய துன்பத்தைக் குறித் தது. நாளும் - ஒருநாளும். தாளியறுகு - ஒருவகையறுகு. இறைவ னுக்குத் தாளியறுகுமாலையே தாராதல் தாளியறுகின் தாராய் போற்றி" (போற்றி. 101) என்பதனாலுமறிக. Ge இதன்கண், "தாளியறு காம் உவந்ததார்" என்பதனால் இறைவன் தார் கூறப்பட்டது. 9 365 சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியுங் கொடி கூறாய் - சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி யேர்காட்டுங் கோதிலா வேறாங் கொடி. ப-ரை. சோலை பசு கிளியே - சோலையில் வாழ்கின்ற பச்சை றமுடைய கிளியே,தூ நீர் பெருந்துறைக்கோன் - நல்ல நீர்வளத்
878 364 திருவாசக ஆராய்ச்சியுரை - ஆய மொழிக்கிள்ளா யள்ளூறு மன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த்தாரென் தீயவினை நாளுமணு காவண்ணம் நாயேனை யாளுடையான் தாளியறு காமுவந்த தார் . - ரை . ஆய மொழி கிள்ளாய் - இனிமையாகிய மொழிகளைப் பேசுகின்ற கிள்ளையே அள்ளூறும் அன்பர் பால் மேய பெருந்துறை யான் மெய்தார் என் - தன்னை விரும்பி வாயூறுகின்ற மெய்யன்பர் களின் உள்ளத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பெருந்துறையையுடை யவனது திருமார்பில் அணிந்த திருமாலை யாது எனத் தலைவி வினாவ தீய வினை நாளும் அணுகாவண்ணம் - கொடிய வினைப் பயனாகிய துன் பம் ஒருநாளும் என்னை அடையாதபடி நாயேனை ஆளுடையான் - இழி வுடைய என்னை ஆளாகவுடைய இறைவன் உவந்த தார் தாளி அறு காம் - விரும்பியமாலை தாளியறுகின் மாலையேயாகும் என்று கிளி கூறியது . இனிமையாகிய மொழிகளைப் பேசுகின்ற கிள்ளையே ! தன்னை விரும்பி அள்ளூறும் மெய்யன்பர்களின் உள்ளத்தில் எழுந்தருளியிருக் கின்ற திருப்பெருந்துறையை உடைய இறைவனது திருமார்பில் அணிந்த மாலை யாது என்று தலைவி வினாவ தீவினைப்பயனாகிய துன்பம் ஒருநாளும் என்னையடையாதபடி நாயேனை ஆளாகவுடைய இறைவன் விரும்பிய மாலை தாளி அறுகாலாகிய மாலையே என்று கிளி கூறியது . ஆய - இனிமையாகிய . ஆய என்னும் ஆக்கவினைக்கு இனிமை என் னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது . அள்ளூறுதல் - வாயூறுதல் . ' அள் ளூறித் தித்திக்கப் பேசுவாய் ( திருவெம்பா .3 ) என வந்தமையுங் காண்க . அது ஒரு பொருளின்மேல் வைத்த பெருவிருப்பால் உளதாவ தாகலின் அள்ளூறும் அன்பர் ' என்றார் . தார் எனக் கூறினமையின் மெய்த்தார் என்பதற்கு திருமார்பின் திருமாலை என உரைக்கப்பட் டது . தீயவினை என்றது தீயவினையின் பயனாகிய துன்பத்தைக் குறித் தது . நாளும் - ஒருநாளும் . தாளியறுகு - ஒருவகையறுகு . இறைவ னுக்குத் தாளியறுகுமாலையே தாராதல் தாளியறுகின் தாராய் போற்றி ( போற்றி . 101 ) என்பதனாலுமறிக . Ge இதன்கண் தாளியறு காம் உவந்ததார் என்பதனால் இறைவன் தார் கூறப்பட்டது . 9 365 சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியுங் கொடி கூறாய் - சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி யேர்காட்டுங் கோதிலா வேறாங் கொடி . - ரை . சோலை பசு கிளியே - சோலையில் வாழ்கின்ற பச்சை றமுடைய கிளியே தூ நீர் பெருந்துறைக்கோன் - நல்ல நீர்வளத்