திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பள்ளியெழுச்சி நாடும்பொழுது மறைப்பு நீங்கும்; அம்மறைப்பினை இறைவனின் உறக்கமாகக்கொண்டு அதனின் நீங்கி எங்களுக்கு அருள்செய்ய வேண்டுமென்பது இத்திருப்பள்ளியெழுச்சியாகும். திருப்பெருந் துறைப் புராணகாரர் இத்திருப்பதிகத்தின் உட்பொருள், "ஏர்மருவு திருப்பள்ளி யெழுச்சிபணி விடைகேட்டு ஆர்வமுடன் ஆண்டஅரற் கன்புசெயும் இயல்பே" எனக் கூறியுள்ளார். அது உயிர் இறைவனின் அருட்பணிக்கு அனுமதி பெற்று அவ்வழிநின்று அவர்க்கு அன்பு செய்வது எனப் பொருள்தருத லால், அதனுடன் மறைப்பு நீக்கத்தையும் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். இது எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என்னும் பாவகையால் அமைந்தது. 366. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் போற்றியென் வாழ்முத லாகிய பொருளே! புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் றிருமுகத் தெமக்கருண் மலரும் எழினகை கொண்டுநின் றிருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கண் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை யாயெனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. 881 ப-ரை. என் வாழ் முதல் ஆகிய பொருளே போற்றி - என் வாழ்வுக்கு முதன்மையான நிமித்தகாரணமாயுள்ள பரம்பொருளே உனக்கு வணக்கம் ; புலர்ந்தது - பொழுது விடிந்து விட்டது; பூங்கழற்கு இணை துணை மலர் கொண்டு ஏற்றி - உன்னுடைய அழகிய வீரக்கழ லணிந்த திருவடிகளுக்கு ஒப்பனவும் வழிபாட்டிற்கு உதவுவனவு மாகிய பூக்களைக் கைகளில் தாங்கிக்கொண்டு துதித்து; நின் திரு முகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கொண்டு - உன் திருமுகத் தில் எங்களுக்கு அருள் விரிகின்ற அழகிய புன்முறுவலைப் பெற்று, நின் திருவடி தொழுகேரம் - உன்னுடைய திருவடிகளில் அம்மலர்களைச் சொரிந்து வணங்க விரும்புகின்றோம்; (ஆதலால்) சேற்று இதழ் கம லங்கள் மலரும் தண் வயல் சூழ் - சேற்றையுடைய நீரின்கண் இதழ் களையுடைய தாமரை அரும்புகள் விரிகின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறை உறை சிவபெருமானே திருப்பெருந் P 86
திருப்பள்ளியெழுச்சி நாடும்பொழுது மறைப்பு நீங்கும் ; அம்மறைப்பினை இறைவனின் உறக்கமாகக்கொண்டு அதனின் நீங்கி எங்களுக்கு அருள்செய்ய வேண்டுமென்பது இத்திருப்பள்ளியெழுச்சியாகும் . திருப்பெருந் துறைப் புராணகாரர் இத்திருப்பதிகத்தின் உட்பொருள் ஏர்மருவு திருப்பள்ளி யெழுச்சிபணி விடைகேட்டு ஆர்வமுடன் ஆண்டஅரற் கன்புசெயும் இயல்பே எனக் கூறியுள்ளார் . அது உயிர் இறைவனின் அருட்பணிக்கு அனுமதி பெற்று அவ்வழிநின்று அவர்க்கு அன்பு செய்வது எனப் பொருள்தருத லால் அதனுடன் மறைப்பு நீக்கத்தையும் சேர்த்துக்கொள்ளல் வேண்டும் . இது எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என்னும் பாவகையால் அமைந்தது . 366 . எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் போற்றியென் வாழ்முத லாகிய பொருளே ! புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் றிருமுகத் தெமக்கருண் மலரும் எழினகை கொண்டுநின் றிருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கண் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ! ஏற்றுயர் கொடியுடை யாயெனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே . 881 - ரை . என் வாழ் முதல் ஆகிய பொருளே போற்றி - என் வாழ்வுக்கு முதன்மையான நிமித்தகாரணமாயுள்ள பரம்பொருளே உனக்கு வணக்கம் ; புலர்ந்தது - பொழுது விடிந்து விட்டது ; பூங்கழற்கு இணை துணை மலர் கொண்டு ஏற்றி - உன்னுடைய அழகிய வீரக்கழ லணிந்த திருவடிகளுக்கு ஒப்பனவும் வழிபாட்டிற்கு உதவுவனவு மாகிய பூக்களைக் கைகளில் தாங்கிக்கொண்டு துதித்து ; நின் திரு முகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கொண்டு - உன் திருமுகத் தில் எங்களுக்கு அருள் விரிகின்ற அழகிய புன்முறுவலைப் பெற்று நின் திருவடி தொழுகேரம் - உன்னுடைய திருவடிகளில் அம்மலர்களைச் சொரிந்து வணங்க விரும்புகின்றோம் ; ( ஆதலால் ) சேற்று இதழ் கம லங்கள் மலரும் தண் வயல் சூழ் - சேற்றையுடைய நீரின்கண் இதழ் களையுடைய தாமரை அரும்புகள் விரிகின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை உறை சிவபெருமானே திருப்பெருந் P 86