திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை னுள்ளேயுள்ள கருமணிப்பாவையாகிய வண்டுகள் நின்னைத் தரிசிக்க விரும்பி ஆரவாரஞ் செய்கின்றன. இந்நிகழ்ச்சிகளைக் கருதி, திருப் பெருந் துறையுறை சிவபெருமானே, திருவருட்செல்வத்தைத் தரும் பொருட்டு எழுந்தருளி வருகின்ற ஆனந்தமலையே, அலைகடலே, திருப் பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும் என்பதாம். 884 அருணன் - செந்நிறமுடைய சூரியன். இந்திரன் திசை-கீழ்த் திசை. அணுகினன் - நெருங்கினன். இருள் அகன்று போயது என விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது. உதயமலர் - உதயகாலத்து அலர்ந்த தாமரை மலர். "கன்னி விடியற் கனைக்கா லாம்பல் தாமரை போல மலருமூர வவை (ஐங். 68) என வருதல் காண்க.முகத்தின்கண் என ஏழாவது விரிக்க. கருணையின் சூரியன் - கருணையாகிய சூரியன். இன் தவிர்வழி வந்தது. நயனக்கடி மலர்-நயனமாகிய காவலையுடைய பூ: காவல் - இமைக்காவல். மற்று என்பது முற்கூறிய நயனத்தினுள்ளேயுள்ள கருமணிப்பாவையைக் குறித்தலால் பிறிது என்னும் பொருளில் வந்தது. அண்ணல் - பெருமை. கண் என்றது ஈண்டுப் பார்க்கும் கருவியாகிய கருமணிப்பாவையை உணர்த்தியது. கண்ணாம் அறுபதம் என இயையும். கண் வண்டினம்- கண்ணாகிய வண்டினம். (கோவை. 66 பேர்) ''குவளைக்கண் வண்டினம் வாழுஞ் செந்தாமரை வாய்" (கோவை. 66). "மொய் குழல் வண்டு நின்மைவிழி வண்டின் முயங்கி மயங்கியிட"(மீனாட்சி. 80) என வருவன காண்க. அறுபதம் - ஆறு கால்களையுடைய வண்டுக்கு ஆகுபெயர். அன்மொழித்தொகையென்பாருமுளர். முரல்தல் - ஒலித்தல்; ஆர வாரஞ் செய்தல். அன்பர்கள் இறைவனைத் தரிசிக்க விரும்பிச் செய் யும் ஆரவாரத்தினைக் கண்ணின்மேல் ஏற்றிக் கூறியது உசாரம்.ஓர் தல் - நினைதல் ; கருதுதல். ஓர் என்னும் இறுதிகெட்ட முன்னிலை வினைமுற்று ஓர்ந்து என எச்சப்பொருளதாய் எழுந்தருளாய் என்பத னோடு முடிந்தது. 'நயனக்கடிமலர்";'கண்ணாம் அறுபதம்" என்னும் உருவகங்களை உவமானமாகக்கொண்டு கண்போல் கடிமலர் எனவும், கண்போல் அறுபதம் எனவும் பொருளுரைப்பாருமுளர். அருள்நிதி- அருளாகிய செல்வம். 'அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்'' (குறள் 241).அருள்நிதி தரவரும் மலை என இயையும். "தாயிலாகிய இன்னருள் புரிந்தவென் தலைவனை" சதகம் 39) "அருள் நனி சுரக்கும் அமுதே' (அண்ட 59) "ஆனந்தங் காணுடையான் ஆறு எனத் தசாங்கத்துள் (4) கூறினமையின் அந்த ஆறு தோன்றுதற்கிடமான இறைவனை 'மலையே" என்றார். "மருவிய கருணை மலையே" (போற்றி. 194) "மாலமுதப் பெருங்கடலே மலையே" (சதகம். 26) எனப் பிற விடங்களிலும் இறைவனை மலை எனக் கூறியமை காண்க.
திருவாசக ஆராய்ச்சியுரை னுள்ளேயுள்ள கருமணிப்பாவையாகிய வண்டுகள் நின்னைத் தரிசிக்க விரும்பி ஆரவாரஞ் செய்கின்றன . இந்நிகழ்ச்சிகளைக் கருதி திருப் பெருந் துறையுறை சிவபெருமானே திருவருட்செல்வத்தைத் தரும் பொருட்டு எழுந்தருளி வருகின்ற ஆனந்தமலையே அலைகடலே திருப் பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும் என்பதாம் . 884 அருணன் - செந்நிறமுடைய சூரியன் . இந்திரன் திசை - கீழ்த் திசை . அணுகினன் - நெருங்கினன் . இருள் அகன்று போயது என விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது . உதயமலர் - உதயகாலத்து அலர்ந்த தாமரை மலர் . கன்னி விடியற் கனைக்கா லாம்பல் தாமரை போல மலருமூர வவை ( ஐங் . 68 ) என வருதல் காண்க.முகத்தின்கண் என ஏழாவது விரிக்க . கருணையின் சூரியன் - கருணையாகிய சூரியன் . இன் தவிர்வழி வந்தது . நயனக்கடி மலர் - நயனமாகிய காவலையுடைய பூ : காவல் - இமைக்காவல் . மற்று என்பது முற்கூறிய நயனத்தினுள்ளேயுள்ள கருமணிப்பாவையைக் குறித்தலால் பிறிது என்னும் பொருளில் வந்தது . அண்ணல் - பெருமை . கண் என்றது ஈண்டுப் பார்க்கும் கருவியாகிய கருமணிப்பாவையை உணர்த்தியது . கண்ணாம் அறுபதம் என இயையும் . கண் வண்டினம் கண்ணாகிய வண்டினம் . ( கோவை . 66 பேர் ) ' ' குவளைக்கண் வண்டினம் வாழுஞ் செந்தாமரை வாய் ( கோவை . 66 ) . மொய் குழல் வண்டு நின்மைவிழி வண்டின் முயங்கி மயங்கியிட ( மீனாட்சி . 80 ) என வருவன காண்க . அறுபதம் - ஆறு கால்களையுடைய வண்டுக்கு ஆகுபெயர் . அன்மொழித்தொகையென்பாருமுளர் . முரல்தல் - ஒலித்தல் ; ஆர வாரஞ் செய்தல் . அன்பர்கள் இறைவனைத் தரிசிக்க விரும்பிச் செய் யும் ஆரவாரத்தினைக் கண்ணின்மேல் ஏற்றிக் கூறியது உசாரம்.ஓர் தல் - நினைதல் ; கருதுதல் . ஓர் என்னும் இறுதிகெட்ட முன்னிலை வினைமுற்று ஓர்ந்து என எச்சப்பொருளதாய் எழுந்தருளாய் என்பத னோடு முடிந்தது . ' நயனக்கடிமலர் ; ' கண்ணாம் அறுபதம் என்னும் உருவகங்களை உவமானமாகக்கொண்டு கண்போல் கடிமலர் எனவும் கண்போல் அறுபதம் எனவும் பொருளுரைப்பாருமுளர் . அருள்நிதி அருளாகிய செல்வம் . ' அருட் செல்வம் செல்வத்துட் செல்வம் ' ' ( குறள் 241 ) .அருள்நிதி தரவரும் மலை என இயையும் . தாயிலாகிய இன்னருள் புரிந்தவென் தலைவனை சதகம் 39 ) அருள் நனி சுரக்கும் அமுதே ' ( அண்ட 59 ) ஆனந்தங் காணுடையான் ஆறு எனத் தசாங்கத்துள் ( 4 ) கூறினமையின் அந்த ஆறு தோன்றுதற்கிடமான இறைவனை ' மலையே என்றார் . மருவிய கருணை மலையே ( போற்றி . 194 ) மாலமுதப் பெருங்கடலே மலையே ( சதகம் . 26 ) எனப் பிற விடங்களிலும் இறைவனை மலை எனக் கூறியமை காண்க .