திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பள்ளியெழுச்சி இதன்கண், ''பள்ளி எழுந்தருளாயே" என்பதனால் திரோதான சுத்தி என்னும் பதிகத்தின் கருத்துப் புலப்படுதல் காண்க. 368. கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை யொளியொளி யுதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழற் றாளிணை காட்டாய் கு திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாயெமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே! 885 2 கூவுகின்றன; ப-ரை. பூங்குயில் கூவின - அழகிய குயில்கள் கோழி கூவின - கோழிகள் கூவுகின்றன; குருகுகள் இயம்பின - மற் றைப் பறவைகள் ஒலிசெய்கின்றன; சங்கம் இயம்பின - திருக்கோயில் களில் சங்குகள் ஒலிக்கின்றன; தாரகை ஒளி ஓவின - விண்மீன்களின் ஒளி மறைகின்றன; ஒளி உதயத்து விருப்பொடு ஒருப்படுகின்றது இந் நிகழ்ச்சிகளையுடைய ஒளிபொருந்திய உதயகாலத்தில் எங்களுக்கு மனம் நின்னை வழிபாடு செய்ய விருப்பத்தினோடும் ஒருவழிப்படுகின் றது ; தேவ - தேவனே; நல்செறி கழல் தாள் இணை காட்டாய்- நல்ல செறிந்த வீரக்கழலையுடைய திருவடிகள் இரண்டினையும் காட்ட, திருப்பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் வீற் றிருக்கின்ற சிவபெருமானே; யாவரும் அறிவு அரியாய் - எவ் வகை மேம்பாட்டினராலும் அறிதற்கரியவனே; எமக்கு எளியாய்- அடியோங்களுக்கு எளிவந்து அருள்செய்பவனே, எம்பெருமான் - எம் பெருமானே; பள்ளி எழுந்தருளாய் திருப்பள்ளியினின்றும் எழுந் தருள்வாயாக. குயில்கள் கூவுகின்றன, கோழிகள் கூவுகின்றன; குருகுகள் ஒலி செய்கின்றன; விண்மீன்களின் ஒளி மறைகின்றன; இந் நிகழ்ச்சிகளை யுடைய ஒளி பொருந்திய உதயகாலத்தில் எங்களுக்கு மனம் நின்னை வழிபாடுசெய்ய ஒருப்படுகின்றது; தேவ, தாளிணை காட்ட, திருப் பெருந்துறை உறை சிவபெருமானே; யாவரும் அறிவரியாய்; எமக் கெளியாய்; எம்பெருமானே; திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வா யாக என்பதாம். Corgi கூவின இயம்பின ஓவின என இறந்த காலத்தால் நிகழ்காலத் தைக்கூறியது விரைவுபற்றியாகும். குருகுகள் என்றது குயில் கோழி ஒழிந்த, வைகறையில் ஒலிக்கும் பலவகைப் பறவைகளை. அவை பல வேறு வகையாக ஒலித்தலின் 'இயம்பின' என்னும் பொதுவினையாற் கூறினார். ஓவுதல் - ஒழிதல். ஒளி உதயம் - ஞாயிற்றின் ஒளிபொருந் திய உதயகாலம். ஒருப்படுதற்கு இயைபுடைய மனம் என்னும் எழு
திருப்பள்ளியெழுச்சி இதன்கண் ' ' பள்ளி எழுந்தருளாயே என்பதனால் திரோதான சுத்தி என்னும் பதிகத்தின் கருத்துப் புலப்படுதல் காண்க . 368 . கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை யொளியொளி யுதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழற் றாளிணை காட்டாய் கு திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாயெமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே ! 885 2 கூவுகின்றன ; - ரை . பூங்குயில் கூவின - அழகிய குயில்கள் கோழி கூவின - கோழிகள் கூவுகின்றன ; குருகுகள் இயம்பின - மற் றைப் பறவைகள் ஒலிசெய்கின்றன ; சங்கம் இயம்பின - திருக்கோயில் களில் சங்குகள் ஒலிக்கின்றன ; தாரகை ஒளி ஓவின - விண்மீன்களின் ஒளி மறைகின்றன ; ஒளி உதயத்து விருப்பொடு ஒருப்படுகின்றது இந் நிகழ்ச்சிகளையுடைய ஒளிபொருந்திய உதயகாலத்தில் எங்களுக்கு மனம் நின்னை வழிபாடு செய்ய விருப்பத்தினோடும் ஒருவழிப்படுகின் றது ; தேவ - தேவனே ; நல்செறி கழல் தாள் இணை காட்டாய் நல்ல செறிந்த வீரக்கழலையுடைய திருவடிகள் இரண்டினையும் காட்ட திருப்பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் வீற் றிருக்கின்ற சிவபெருமானே ; யாவரும் அறிவு அரியாய் - எவ் வகை மேம்பாட்டினராலும் அறிதற்கரியவனே ; எமக்கு எளியாய் அடியோங்களுக்கு எளிவந்து அருள்செய்பவனே எம்பெருமான் - எம் பெருமானே ; பள்ளி எழுந்தருளாய் திருப்பள்ளியினின்றும் எழுந் தருள்வாயாக . குயில்கள் கூவுகின்றன கோழிகள் கூவுகின்றன ; குருகுகள் ஒலி செய்கின்றன ; விண்மீன்களின் ஒளி மறைகின்றன ; இந் நிகழ்ச்சிகளை யுடைய ஒளி பொருந்திய உதயகாலத்தில் எங்களுக்கு மனம் நின்னை வழிபாடுசெய்ய ஒருப்படுகின்றது ; தேவ தாளிணை காட்ட திருப் பெருந்துறை உறை சிவபெருமானே ; யாவரும் அறிவரியாய் ; எமக் கெளியாய் ; எம்பெருமானே ; திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வா யாக என்பதாம் . Corgi கூவின இயம்பின ஓவின என இறந்த காலத்தால் நிகழ்காலத் தைக்கூறியது விரைவுபற்றியாகும் . குருகுகள் என்றது குயில் கோழி ஒழிந்த வைகறையில் ஒலிக்கும் பலவகைப் பறவைகளை . அவை பல வேறு வகையாக ஒலித்தலின் ' இயம்பின ' என்னும் பொதுவினையாற் கூறினார் . ஓவுதல் - ஒழிதல் . ஒளி உதயம் - ஞாயிற்றின் ஒளிபொருந் திய உதயகாலம் . ஒருப்படுதற்கு இயைபுடைய மனம் என்னும் எழு