திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

890 திருவாசக ஆராய்ச்சியுரை யோம் என்பது போதரும் நினைக்கண்டறிவாரை யாம் கண்டறியோம். அன்றி, இன்னவர் கண்டறிந்தவர் எனப் பிறர் சொல்லவும் கேட்டறி யோம் என்பார், "உனைக் கண்டறிவாரைக் கேட்டறியோம்" என் றார். இறைவன் பசுஞான பாசஞானங்களால் அறியவொண்ணாதவ னாதலின் அவற்றால் அறிந்தவரை யாம் கண்டறியோம் கேட்டறி யோம் என்க. "அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே" (நாவு.310:10) என்னும் அப்பரடிகள் திருவாக்கு இங்குச் சிந்திக்கத்தக்கது. சிந்தனைக் கும் என்னும் இறந்ததுதழீஇய எச்சவும்மையால் சொல்லுக்கும் அரி யாய் என வருவித்துக்கொள்க. எங்கள் முன்வந்து என்றதனால் அத்துணை அருமையையுடைய இறைவன் உருவத்திருமேனிகொண்டு அடியார்க்கு எளியனாய் வலிய முன்னிலையில் எழுந்தருளி வந்தமை அறியப்படும். ஏதங்கள் - மன மொழி மெய்களால் உளவாங் குற்றங்களும் ஆணவம் கன்மம் மாயை என்னும் உயிரிலுள்ள குற்றங்களுமாம். எம்பெருமான் - அண்மைவிளி. இத்திருப்பாட்டில் பள்ளி எழுந்தருளவேண்டும் என்னும் வேண்டு கோளுக்கு ஏதுவாக எங்கள் வழிபாட்டினை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு என்பது இயைபுபற்றி வருவித்துரைக்கப்பட்டது. இதன்கண், "எம்பெருமான் பள்ளி எழுந்தருளாய்' என்பதனால் திரோதானசுத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 371 பப்பற வீட்டிருந் துணருநின் னடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியா மானுடத் தியல்பின் வணங்குகின் றாரணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலரூந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை யாண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. 5 ப - ரை. டப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார் வந்து - மனவிரிவு நீங்கச் சீவன் முத்தநிலையிலிருந்து நின்னை உணர்ந்து
890 திருவாசக ஆராய்ச்சியுரை யோம் என்பது போதரும் நினைக்கண்டறிவாரை யாம் கண்டறியோம் . அன்றி இன்னவர் கண்டறிந்தவர் எனப் பிறர் சொல்லவும் கேட்டறி யோம் என்பார் உனைக் கண்டறிவாரைக் கேட்டறியோம் என் றார் . இறைவன் பசுஞான பாசஞானங்களால் அறியவொண்ணாதவ னாதலின் அவற்றால் அறிந்தவரை யாம் கண்டறியோம் கேட்டறி யோம் என்க . அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே ( நாவு .310 : 10 ) என்னும் அப்பரடிகள் திருவாக்கு இங்குச் சிந்திக்கத்தக்கது . சிந்தனைக் கும் என்னும் இறந்ததுதழீஇய எச்சவும்மையால் சொல்லுக்கும் அரி யாய் என வருவித்துக்கொள்க . எங்கள் முன்வந்து என்றதனால் அத்துணை அருமையையுடைய இறைவன் உருவத்திருமேனிகொண்டு அடியார்க்கு எளியனாய் வலிய முன்னிலையில் எழுந்தருளி வந்தமை அறியப்படும் . ஏதங்கள் - மன மொழி மெய்களால் உளவாங் குற்றங்களும் ஆணவம் கன்மம் மாயை என்னும் உயிரிலுள்ள குற்றங்களுமாம் . எம்பெருமான் - அண்மைவிளி . இத்திருப்பாட்டில் பள்ளி எழுந்தருளவேண்டும் என்னும் வேண்டு கோளுக்கு ஏதுவாக எங்கள் வழிபாட்டினை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு என்பது இயைபுபற்றி வருவித்துரைக்கப்பட்டது . இதன்கண் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாய் ' என்பதனால் திரோதானசுத்தி என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 371 பப்பற வீட்டிருந் துணருநின் னடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியா மானுடத் தியல்பின் வணங்குகின் றாரணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலரூந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை யாண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே . 5 - ரை . டப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார் வந்து - மனவிரிவு நீங்கச் சீவன் முத்தநிலையிலிருந்து நின்னை உணர்ந்து