திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பள்ளியெழுச்சி 893 ப- ரை. அது பழம் சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் - அப்பரம்பொருளானது பழத் தின்கண் சுவை போல உலகெங்கும் பரந்துள்ளதெனவும், நரை திரை நோய் மூப்புச் சாக்காடுகளை நீக்கியருளுதலின் அமுதம் போன்ற தெனவும், தனது அருளாலன்றி அறிதற்கரியது எனவும், அன்பர் களுக்குத் தனது அருளால் எளிவந்து அருள் செய்வது எனவும், தேவர் களும் தமது போக மறைப்பினால் அதன் உண்மைத் தன்மையை அறியமாட்டார். இது அவன் திரு உரு - இதுவே அப்பெருமானின் திருவுருவம் ; இவன் அவன் - இத்திருவுருவங்கொண்டு வந்த பெரு மானே அப்பரம்பொருளாயுள்ளவன் என்று நாங்கள் கூறும்படியாக; இங்கு எழுந்தருளி - திருவடிவங்கொண்டு இவ்வுலகத்தில் வந்து, எங் களை ஆண்டு கொள்ளும்-அடியோங்களை ஆட்கொண்டருளிய,மது வளர் பொழில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய் - தேன் மிகு கின்ற சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே; திருப்பெருந்துறை மன்னா - திருப்பெருந் துறையிலுள்ள இறைவனே; எம்பெருமான் - எங்கள் தலைவனே; எமை பணிகொள்ளும் ஆறு எது அது கேட்போம் - எங்களை ஏவல் கொள்ளும் முறைமை யாது? யாங்கள் அதனைக் கேட்டறிந்து அம் முறையில் தொண்டு செய்வோம். பள்ளி எழுந்தருளாய் - ஆதலால் திருப்பள்ளியினின்று எழுந்தருள வேண்டும். ரூch. அப்பரம்பொருளானது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிது எனத் தேவரும் அறியமாட்டார்; இது அவன் திரு வுரு : இவன் அவன் என்று நாங்கள் கூறும்படியாகத் திருவுருவங் கொண்டு இவ்வுலகத்தில் எழுந்தருளி எங்களை ஆட்கொண்டருளிய திருவுத்தரகோசமங்கையுள்ளாய், திருப்பெருந்துறை மன்னா; எங்களை பணிகொள்ளும் முறைமையாது? யாங்கள் அதனைக் கேட்டறிந்து அம்முறையில் ஒழுகுவோம்; ஆதலால் திருப்பள்ளியினின்று எழுந்த ருள வேண்டும் என்பதாம். 45 அது என்பது *தத்துவமசி என்னும் மகாவாக்கியத்திலுள்ள 'தத்' என்பதன் தமிழாக்கம். பரம்பொருளைக் குறித்தது. பழச்சுவையென என்றது பழத்தின் சுவை அப்பழத்தில் எங்கும் நிறைந்திருப்பது போலப் பரம்பொருள் எங்கும் நிறைந்திருப்பதற்கு உவமானம். 'பூ வின் நாற்றம் போன்றுயர்ந்தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை' (திருவண்ட. 115-6) "எங்கும் செறிந்தானை(அம்மானை 13) 'ஒழிவற நிறைந்த ஒருவபோற்றி" (போற்.215) "ஒழிவற நிறைந்த யோகமே" (பிடித். 1) "பாலிற் றீநெய் பழத்தினின் சுவை *** தவமுறு தத்துவமசி" திருமந்திரம் 2571. தத்துவம் அசி - அது நீ ஆகிறாய். நீ யது வானாயென நின்ற பேருரை" திருமந் 2577.
திருப்பள்ளியெழுச்சி 893 ப- ரை . அது பழம் சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் - அப்பரம்பொருளானது பழத் தின்கண் சுவை போல உலகெங்கும் பரந்துள்ளதெனவும் நரை திரை நோய் மூப்புச் சாக்காடுகளை நீக்கியருளுதலின் அமுதம் போன்ற தெனவும் தனது அருளாலன்றி அறிதற்கரியது எனவும் அன்பர் களுக்குத் தனது அருளால் எளிவந்து அருள் செய்வது எனவும் தேவர் களும் தமது போக மறைப்பினால் அதன் உண்மைத் தன்மையை அறியமாட்டார் . இது அவன் திரு உரு - இதுவே அப்பெருமானின் திருவுருவம் ; இவன் அவன் - இத்திருவுருவங்கொண்டு வந்த பெரு மானே அப்பரம்பொருளாயுள்ளவன் என்று நாங்கள் கூறும்படியாக ; இங்கு எழுந்தருளி - திருவடிவங்கொண்டு இவ்வுலகத்தில் வந்து எங் களை ஆண்டு கொள்ளும் - அடியோங்களை ஆட்கொண்டருளிய மது வளர் பொழில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய் - தேன் மிகு கின்ற சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே ; திருப்பெருந்துறை மன்னா - திருப்பெருந் துறையிலுள்ள இறைவனே ; எம்பெருமான் - எங்கள் தலைவனே ; எமை பணிகொள்ளும் ஆறு எது அது கேட்போம் - எங்களை ஏவல் கொள்ளும் முறைமை யாது ? யாங்கள் அதனைக் கேட்டறிந்து அம் முறையில் தொண்டு செய்வோம் . பள்ளி எழுந்தருளாய் - ஆதலால் திருப்பள்ளியினின்று எழுந்தருள வேண்டும் . ரூ ch . அப்பரம்பொருளானது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிது எனத் தேவரும் அறியமாட்டார் ; இது அவன் திரு வுரு : இவன் அவன் என்று நாங்கள் கூறும்படியாகத் திருவுருவங் கொண்டு இவ்வுலகத்தில் எழுந்தருளி எங்களை ஆட்கொண்டருளிய திருவுத்தரகோசமங்கையுள்ளாய் திருப்பெருந்துறை மன்னா ; எங்களை பணிகொள்ளும் முறைமையாது ? யாங்கள் அதனைக் கேட்டறிந்து அம்முறையில் ஒழுகுவோம் ; ஆதலால் திருப்பள்ளியினின்று எழுந்த ருள வேண்டும் என்பதாம் . 45 அது என்பது * தத்துவமசி என்னும் மகாவாக்கியத்திலுள்ள ' தத் ' என்பதன் தமிழாக்கம் . பரம்பொருளைக் குறித்தது . பழச்சுவையென என்றது பழத்தின் சுவை அப்பழத்தில் எங்கும் நிறைந்திருப்பது போலப் பரம்பொருள் எங்கும் நிறைந்திருப்பதற்கு உவமானம் . ' பூ வின் நாற்றம் போன்றுயர்ந்தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை ' ( திருவண்ட . 115-6 ) எங்கும் செறிந்தானை ( அம்மானை 13 ) ' ஒழிவற நிறைந்த ஒருவபோற்றி ( போற் .215 ) ஒழிவற நிறைந்த யோகமே ( பிடித் . 1 ) பாலிற் றீநெய் பழத்தினின் சுவை *** தவமுறு தத்துவமசி திருமந்திரம் 2571. தத்துவம் அசி - அது நீ ஆகிறாய் . நீ யது வானாயென நின்ற பேருரை திருமந் 2577 .