திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பள்ளியெழுச்சி ப- ரை: விண் அகம் தேவரும் நண்ணவும் மாட்டா விழு பொருளே - வானுலகத்துள்ள தேவர்களும் அணுகவும் ஒண்ணாத மேலாகிய பொருளே, உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழ செய்தானே - உன்னுடைய அணுக்கன் தொண்டைச் செய் கின்ற அடியோங்களை மண்ணுலகில் வந்து இன்புற வாழும்படி செய்த வனே, வண் திருப்பெருந்துறையாய் - வளப்பம் பொருந்திய திருப் பெருந்துறையையுடையவனே, வழி அடியோம் கண் அகத்தே நின்று களி தரு தேனே - பரம்பரையான அடியோமாகிய எங்களுடைய கண் ணிடத்தும் நின்று இன்பமாகிய களிப்பைத் தருகின்ற தேன்போன்ற வனே, கடல் அமுதே - பிறப்பு இறப்பு அறுத்தலாற் கடலிற்றோன்றிய அமுதம் போன்றவனே, கரும்பே - இனிமையைத் தருதலாற் கரும்பு போன்றவனே, விரும்பு அடியார் எண் அகத்தாய்-நின்னை விரும்பு கின்ற அடியவர்களுடைய நினைவின்கண் உள்ளவனே, உலகுக்கு உயிர் ஆனாய் - உலகிலுள்ள உயிர்களுக்கு உயிராயுள்ளவனே, எம்பெரு மான் - எங்கள் தலைவனே, பள்ளி எழுந்தருளாய் - எல்லார்க்கும் அரு ளும் பொருட்டுத் திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக. 897 தேவரும் அணுகவொண்ணாத விழுப்பொருளே, உனது அணுக்கன் தொண்டைச் செய்கின்ற அடியோங்கள் மண்ணுலகில் வந்து இன்புற்று வாழும்படி செய்தவனே, வழியடியோமாகிய எங்களுடைய கண்ண கத்தே நின்று களிப்பைத் தருகின்ற தேனே, கடலமுதே,கரும்பே. நின்னை விரும்புகின்ற அடியவர்களுடைய நினைவின் கண் உள்ளவனே, உலகுக்கு உயிரானவனே, எம்பெருமானே, எல்லார்க்கும் அருளும் பொருட்டு நீ திருப்பள்ளி எழுந்தருள்வாயாக என்பதாம். தேவரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. நண்ணவும் என்பதில் அறியவும் முடியாத என எச்சவும்மை. விழுப்பொருள் - மேலாகிய பொருள் "மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்" (திருமந் 2824). உன என்பதில் ஆறாவதனுருபு உயர்திணையோடு வந்தது வழு வமைதி. தொழும்பு என்பது மோனை நயம்பற்றித் தொழுப்பு என வலித்தல் விகாரம் பெற்றது. ''தொழுப்படியோங்கண் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே" என்ற அகச்சான்றினால் அடிகள் அணுக் கன் தொண்டர் என்பதும் இறைவன் திருவருளாலே பூமியில் பிறந்து வாழ்ந்திருந்தனர் என்பதும் பெறப்படும். "நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து... ஆக்கி ஆணடுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே" (அதிசய.8) 87
திருப்பள்ளியெழுச்சி ப- ரை : விண் அகம் தேவரும் நண்ணவும் மாட்டா விழு பொருளே - வானுலகத்துள்ள தேவர்களும் அணுகவும் ஒண்ணாத மேலாகிய பொருளே உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழ செய்தானே - உன்னுடைய அணுக்கன் தொண்டைச் செய் கின்ற அடியோங்களை மண்ணுலகில் வந்து இன்புற வாழும்படி செய்த வனே வண் திருப்பெருந்துறையாய் - வளப்பம் பொருந்திய திருப் பெருந்துறையையுடையவனே வழி அடியோம் கண் அகத்தே நின்று களி தரு தேனே - பரம்பரையான அடியோமாகிய எங்களுடைய கண் ணிடத்தும் நின்று இன்பமாகிய களிப்பைத் தருகின்ற தேன்போன்ற வனே கடல் அமுதே - பிறப்பு இறப்பு அறுத்தலாற் கடலிற்றோன்றிய அமுதம் போன்றவனே கரும்பே - இனிமையைத் தருதலாற் கரும்பு போன்றவனே விரும்பு அடியார் எண் அகத்தாய் - நின்னை விரும்பு கின்ற அடியவர்களுடைய நினைவின்கண் உள்ளவனே உலகுக்கு உயிர் ஆனாய் - உலகிலுள்ள உயிர்களுக்கு உயிராயுள்ளவனே எம்பெரு மான் - எங்கள் தலைவனே பள்ளி எழுந்தருளாய் - எல்லார்க்கும் அரு ளும் பொருட்டுத் திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக . 897 தேவரும் அணுகவொண்ணாத விழுப்பொருளே உனது அணுக்கன் தொண்டைச் செய்கின்ற அடியோங்கள் மண்ணுலகில் வந்து இன்புற்று வாழும்படி செய்தவனே வழியடியோமாகிய எங்களுடைய கண்ண கத்தே நின்று களிப்பைத் தருகின்ற தேனே கடலமுதே கரும்பே . நின்னை விரும்புகின்ற அடியவர்களுடைய நினைவின் கண் உள்ளவனே உலகுக்கு உயிரானவனே எம்பெருமானே எல்லார்க்கும் அருளும் பொருட்டு நீ திருப்பள்ளி எழுந்தருள்வாயாக என்பதாம் . தேவரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு . நண்ணவும் என்பதில் அறியவும் முடியாத என எச்சவும்மை . விழுப்பொருள் - மேலாகிய பொருள் மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் ( திருமந் 2824 ) . உன என்பதில் ஆறாவதனுருபு உயர்திணையோடு வந்தது வழு வமைதி . தொழும்பு என்பது மோனை நயம்பற்றித் தொழுப்பு என வலித்தல் விகாரம் பெற்றது . ' ' தொழுப்படியோங்கண் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே என்ற அகச்சான்றினால் அடிகள் அணுக் கன் தொண்டர் என்பதும் இறைவன் திருவருளாலே பூமியில் பிறந்து வாழ்ந்திருந்தனர் என்பதும் பெறப்படும் . நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து ... ஆக்கி ஆணடுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே ( அதிசய .8 ) 87