திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

21. கோயின் மூத்த திருப்பதிகம் அநாதியாகிய சற்காரியம் திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது கோயின் மூத்த திருப்பதிகம் என்பது சிதம்பரத்தில் இறைவ னது பழமையான அருளையடையும் குறிப்பினால் அருளிச் செய்யப் பட்ட திருப்பதிகம் எனப் பொருள்படும். இதன் உள்ளுறை அநா தியாகிய சற்காரியம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அஃதாவது என்று முள்ள பழமையான இறைவனின் திருவருட் செயல் எனப்பொருள் படும். ஆகவே அநாதியாய என்ற சொல்லால் மூத்த என்பது குறிக் கப்பட்டதாகும். ''மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே" (திருச்ரோற் றுத்துறை - திருப்பதிகம்) என அப்பர் தேவாரத்து வருவனகாண்சு. இப்பதிகம் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளது. 376 அறுசீர் ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேனுன் அடியார் நடுவுள் இருக்குமரு ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே யென்சருத்து முடியும் வண்ண முன்னின்றே. ப-ரை. பொன்னம்பலத்து எம் முடியா முதலே பொற்சபை யின்கண் ஆடும் எங்கள் அழிவற்ற முழுமுதல்வனே. உடையாள் உன் தன் நடுவு இருக்கும் - எல்லாவற்றையும் உடையாளாகிய சிவசத்தி உன்னுடைய உள்ளீடாக உள்ளாள், நீ உடையாள் நடுவுள் இருத்தி- நீயும் உடையாளாகிய அச் சிவசத்தியினது உள்ளீடாகக் கலந்திருக் கின்றாய். அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேனா கிய எனது உயிரின் உள்ளீடாக நீவிர் இருவீரும் கலந்திருப்பது உண் மையானால், அடியேன் கருத்து முடியும் வண்ணம் முன்னின்று - என் விருப்பம் நிறைவேறும் வண்ணம் எனக்கு முன் நின்று, அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் - அடியேன் உன் மெய் யடியார் நடுவுள் கலந்திருத்தற்குரிய பேற்றினைத் தந்தருள வேண்டும். பொன்னம்பலத்து ஆடும் அழிவற்ற முழுமுதல்வனே, உடையா ளாகிய சிவசத்தி உன்னுடைய உள்ளீடாக உள்ளாள்; நீயும் உடை
21. கோயின் மூத்த திருப்பதிகம் அநாதியாகிய சற்காரியம் திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது கோயின் மூத்த திருப்பதிகம் என்பது சிதம்பரத்தில் இறைவ னது பழமையான அருளையடையும் குறிப்பினால் அருளிச் செய்யப் பட்ட திருப்பதிகம் எனப் பொருள்படும் . இதன் உள்ளுறை அநா தியாகிய சற்காரியம் எனக் குறிக்கப்பட்டுள்ளது . அஃதாவது என்று முள்ள பழமையான இறைவனின் திருவருட் செயல் எனப்பொருள் படும் . ஆகவே அநாதியாய என்ற சொல்லால் மூத்த என்பது குறிக் கப்பட்டதாகும் . ' ' மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே ( திருச்ரோற் றுத்துறை - திருப்பதிகம் ) என அப்பர் தேவாரத்து வருவனகாண்சு . இப்பதிகம் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளது . 376 அறுசீர் ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேனுன் அடியார் நடுவுள் இருக்குமரு ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே யென்சருத்து முடியும் வண்ண முன்னின்றே . - ரை . பொன்னம்பலத்து எம் முடியா முதலே பொற்சபை யின்கண் ஆடும் எங்கள் அழிவற்ற முழுமுதல்வனே . உடையாள் உன் தன் நடுவு இருக்கும் - எல்லாவற்றையும் உடையாளாகிய சிவசத்தி உன்னுடைய உள்ளீடாக உள்ளாள் நீ உடையாள் நடுவுள் இருத்தி நீயும் உடையாளாகிய அச் சிவசத்தியினது உள்ளீடாகக் கலந்திருக் கின்றாய் . அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேனா கிய எனது உயிரின் உள்ளீடாக நீவிர் இருவீரும் கலந்திருப்பது உண் மையானால் அடியேன் கருத்து முடியும் வண்ணம் முன்னின்று - என் விருப்பம் நிறைவேறும் வண்ணம் எனக்கு முன் நின்று அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் - அடியேன் உன் மெய் யடியார் நடுவுள் கலந்திருத்தற்குரிய பேற்றினைத் தந்தருள வேண்டும் . பொன்னம்பலத்து ஆடும் அழிவற்ற முழுமுதல்வனே உடையா ளாகிய சிவசத்தி உன்னுடைய உள்ளீடாக உள்ளாள் ; நீயும் உடை