திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை யாளாகிய அச்சிவசத்தியினது உள்ளீடாகக் கலந்திருக்கின்றாய்; அடி யேன் நடுவுள் இருவீரும் இருப்பது உண்மையானால் என்கருத்து நிறை வேறும் வண்ணம் முன்னின்று அடியேன் உன்மெய்யடியார் நடுவுள் கலந்திருத்தற்குரிய பேற்றினைத் தந்தருள வேண்டும் என்பதாம். 902 சிவமும் சத்தியும் பிரிவற்ற அத்துவிதமாகிய இரு முழுமுதற் பொருள்களாதலின் 'உடையாள் உன்றன் நடுவிருக்கும்' எனவும், "உடையாள் நடுவுள் நீயிருத்தி" எனவும் அருளிச்செய்தார். 'பேதை தடமார் பதிடமாக வுறைகின்ற பெருமான்" (ஞான.328:4) எனத் தேவாரத்தும் வருதல் காண்க: சூக்கும பஞ்சாக்கரத்து 'சிவ' என் பதை எடுத்துக்கொண்டு சிவத்துட் சத்தியடங்கியிருத்தலையும், அதனை 'வசி' என மாறிச் சத்தியுள் சிவம் அடங்கியிருத்தலையும் 'சிவய' எனக் கொண்டு ஆன்மாவுக்குள்ளீடாக சிவமும் சத்தியும் இருத லையும் உணர்த்தியது இத்திருப்பாடலின் 'உடையாள் உன்றன் நடுவிருக் கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப் பதானால்' என்னும் பகுதி உணர்த்தியது எனத் தத்துவ ஞானிகள் (உண்மை உணர்வார்) கூறுவர். இருவீரும் எனக் கூறினமை கொண்டு சிவமும் சத்தியும் இரு முழு முதற் பொருள்கள் என்பது உணரப் படும். இருப்பதானால் என்றது இருப்பது உண்மையாக அதன் பயன் எய் தும் பக்குவநிலை எனக்குளதாயின் என்றவாறு. எனக்குளதாயின் அரு ளைப் புரியாய் என இயையும் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் என வேண்டிக் கொண்டது வாசனா மலநீக்கத்தின் பொருட்டு அடியார் கூட்டம் இன் றியமையாது வேண்டப்படுதலினாகும். பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி மடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர் கற்றாங்கவன் கழல் பேணின ரொடுங்கூடுமின் கலந்தே' உயிருண் .5 என இத் திருவாசகத்தும், *செம்மலர் நோன்றாள் சேர லொட்டா வம்மலங் கழிஇ வன்பரொடு மரீஇ மாலற நேய மலிந்தவர் வேடமு மாலயத் தானு மரனெனத் தொழுமே" சூத். 12 எனச் சிவஞானபோதத்தும் வருவன காண்க. இனி தாம் முன்னர் அணுக்கன் தொண்டர் கூட்டத்துள் ஒருவராய் இருந்த நிலைமையை எண்ணி அந்நிலையினை அருளுமாறு வேண்டியதுமாம்.
திருவாசக ஆராய்ச்சியுரை யாளாகிய அச்சிவசத்தியினது உள்ளீடாகக் கலந்திருக்கின்றாய் ; அடி யேன் நடுவுள் இருவீரும் இருப்பது உண்மையானால் என்கருத்து நிறை வேறும் வண்ணம் முன்னின்று அடியேன் உன்மெய்யடியார் நடுவுள் கலந்திருத்தற்குரிய பேற்றினைத் தந்தருள வேண்டும் என்பதாம் . 902 சிவமும் சத்தியும் பிரிவற்ற அத்துவிதமாகிய இரு முழுமுதற் பொருள்களாதலின் ' உடையாள் உன்றன் நடுவிருக்கும் ' எனவும் உடையாள் நடுவுள் நீயிருத்தி எனவும் அருளிச்செய்தார் . ' பேதை தடமார் பதிடமாக வுறைகின்ற பெருமான் ( ஞான .328 : 4 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க : சூக்கும பஞ்சாக்கரத்து ' சிவ ' என் பதை எடுத்துக்கொண்டு சிவத்துட் சத்தியடங்கியிருத்தலையும் அதனை ' வசி ' என மாறிச் சத்தியுள் சிவம் அடங்கியிருத்தலையும் ' சிவய ' எனக் கொண்டு ஆன்மாவுக்குள்ளீடாக சிவமும் சத்தியும் இருத லையும் உணர்த்தியது இத்திருப்பாடலின் ' உடையாள் உன்றன் நடுவிருக் கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப் பதானால் ' என்னும் பகுதி உணர்த்தியது எனத் தத்துவ ஞானிகள் ( உண்மை உணர்வார் ) கூறுவர் . இருவீரும் எனக் கூறினமை கொண்டு சிவமும் சத்தியும் இரு முழு முதற் பொருள்கள் என்பது உணரப் படும் . இருப்பதானால் என்றது இருப்பது உண்மையாக அதன் பயன் எய் தும் பக்குவநிலை எனக்குளதாயின் என்றவாறு . எனக்குளதாயின் அரு ளைப் புரியாய் என இயையும் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் என வேண்டிக் கொண்டது வாசனா மலநீக்கத்தின் பொருட்டு அடியார் கூட்டம் இன் றியமையாது வேண்டப்படுதலினாகும் . பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி மடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர் கற்றாங்கவன் கழல் பேணின ரொடுங்கூடுமின் கலந்தே ' உயிருண் .5 என இத் திருவாசகத்தும் * செம்மலர் நோன்றாள் சேர லொட்டா வம்மலங் கழிஇ வன்பரொடு மரீஇ மாலற நேய மலிந்தவர் வேடமு மாலயத் தானு மரனெனத் தொழுமே சூத் . 12 எனச் சிவஞானபோதத்தும் வருவன காண்க . இனி தாம் முன்னர் அணுக்கன் தொண்டர் கூட்டத்துள் ஒருவராய் இருந்த நிலைமையை எண்ணி அந்நிலையினை அருளுமாறு வேண்டியதுமாம் .