திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

904 திருவாசக ஆராய்ச்சியுரை நின்று பிற்பட்டொழிந்த என்னைப் பார்த்து இவன் யார் என்று தம் முள் வினவி நகையாடமாட்டாரோ? அது நின் பெருமைக்குப் போதுமோ? அங்ஙனம் நிகழாதருள் செய்க என்பதாம். எனை முன்னம் முன்னின்று ஆண்டாய் என மாறிக் கூட்டுக. முன் னம் ஆண்டாய் என்றது தகுதியற்ற என்னைத் தகுதி வருந்தனையும் தாழ்த்தாது தகுதி வருதற்கு முன்னரேயே ஆண்டாய் என்றவாறு. "கள்ளேன் ஒழியவுங் கண்டுகொண்டாண்ட எக்காரணமே'' நீத்.2 'நம்மை யகப்படுத் தாட்கொண் டருமை காட்டும் பொய்யர் தம் பொய்யனை" பொற்.12 'கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்ட பின் என்னட்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி" கோத். 4 "வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட அம்பலவன்" கோத். 11 "நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்து தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத் தாண்டான்' 'வினைப்பிறவி யென்கின்ற வேதனையி லகப்பட்டுத் தனைச் சிறிது நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை எனைப் பெரிதும் ஆட்கொண்டு'' என அடிகள் அருளியமை ஈண்டறியற்பாலன. (பூவல்லி.3) கண்ட. 2 முன்னின்று - திருவருட் குருவாய் முன்னின்று. அது என்று சுட்டி யது அத்தகுதியை. பின் நிற்றல் - திருவருளைப் பின்பற்றி நிற்றல். ஏவல் செய்கின்றேன் பிற்பட்டொழிந்தேன் என்றது நின் தொண்டி செய்தும் தகுதியின்மையால் பின்னடைந்துவிட்டேன் என்ற வாறு. நின்றருளி - நின்று. போந்திடு என்றல் -வருகவென்று அருள் புரிதல். இங்ஙனம் அருள் புரித்தமை, னைச் 1- 'வருவென்று மணித்தனை வானுளோர்க்கு ஒருவனே" "அடியேனை வருகவென்று அஞ்சேலென் றருளியவாறு'' (அச்சோ.5) என வருவனவற்றாலுமறிக. சத. 41 அடியார் இவன் யார் என்னாரோ என்றது அங்ஙனம் வருகவென் றருளாதொழியில் நின்பாலுள்ள மெய்வடியார் பிற்பட்டு நிற்கும் என்னைப் பார்த்து இவன் யாரோ எனத் தம்முள் வினாவி நகையாரோ
904 திருவாசக ஆராய்ச்சியுரை நின்று பிற்பட்டொழிந்த என்னைப் பார்த்து இவன் யார் என்று தம் முள் வினவி நகையாடமாட்டாரோ ? அது நின் பெருமைக்குப் போதுமோ ? அங்ஙனம் நிகழாதருள் செய்க என்பதாம் . எனை முன்னம் முன்னின்று ஆண்டாய் என மாறிக் கூட்டுக . முன் னம் ஆண்டாய் என்றது தகுதியற்ற என்னைத் தகுதி வருந்தனையும் தாழ்த்தாது தகுதி வருதற்கு முன்னரேயே ஆண்டாய் என்றவாறு . கள்ளேன் ஒழியவுங் கண்டுகொண்டாண்ட எக்காரணமே ' ' நீத் .2 ' நம்மை யகப்படுத் தாட்கொண் டருமை காட்டும் பொய்யர் தம் பொய்யனை பொற் .12 ' கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்ட பின் என்னட்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி கோத் . 4 வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட அம்பலவன் கோத் . 11 நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்து தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத் தாண்டான் ' ' வினைப்பிறவி யென்கின்ற வேதனையி லகப்பட்டுத் தனைச் சிறிது நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை எனைப் பெரிதும் ஆட்கொண்டு ' ' என அடிகள் அருளியமை ஈண்டறியற்பாலன . ( பூவல்லி .3 ) கண்ட . 2 முன்னின்று - திருவருட் குருவாய் முன்னின்று . அது என்று சுட்டி யது அத்தகுதியை . பின் நிற்றல் - திருவருளைப் பின்பற்றி நிற்றல் . ஏவல் செய்கின்றேன் பிற்பட்டொழிந்தேன் என்றது நின் தொண்டி செய்தும் தகுதியின்மையால் பின்னடைந்துவிட்டேன் என்ற வாறு . நின்றருளி - நின்று . போந்திடு என்றல் -வருகவென்று அருள் புரிதல் . இங்ஙனம் அருள் புரித்தமை னைச் 1 ' வருவென்று மணித்தனை வானுளோர்க்கு ஒருவனே அடியேனை வருகவென்று அஞ்சேலென் றருளியவாறு ' ' ( அச்சோ .5 ) என வருவனவற்றாலுமறிக . சத . 41 அடியார் இவன் யார் என்னாரோ என்றது அங்ஙனம் வருகவென் றருளாதொழியில் நின்பாலுள்ள மெய்வடியார் பிற்பட்டு நிற்கும் என்னைப் பார்த்து இவன் யாரோ எனத் தம்முள் வினாவி நகையாரோ