திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயின் மூத்த திருப்பதிகம் என்றவாறு. அது நின் பெருமைக்கு ஒவ்வாது. அங்ஙனம் நிகழாது அருள் செய்க என்பது குறிப்பெச்சம். இதன்கண் ''போந்திடு என்னாவிடில் அடியார் இவனாரென்னாரோ" அது நிகழாமை அருள் செய்க" என்பதினால் அநாதியாகிய சற்காரியம் என்னும் பதிக நுதலிய பொருள் புலப்படுதல் காண்க. 2 378 உகந்தா னேயன் புடையடிமைக் குருகா வுள்ளத் துணர்விலியேன் சகந்தான் அறிய முறையிட்டால் தக்க வாறன் றென்னாரோ மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன் முகந்தான் தாரா விடின் முடிவேன் 905 பொன்னம் பலத்தெம் முழுமுதலே. ப-ரை : பொன்னம்பலத்து எம் முழுமுதலே - பொன்னம்பலத் தின்ரண் என்றும் திருநடனஞ் செய்கின்ற எங்கள் முழுமுதற் கட வுளே, அன்பு உடை அடிமைக்கு உகந்தானே - தகுதியற்ற என்னை அன்பினோடு செய்யும் திருவடித் தொண்டினுக்கு விரும்பி ஏற்றுக் கொண்டவனே, உருகா உள்ளத்து உணர்வு இலியேன் - அன்பினால் உருகாத வன்னெஞ்சினையுடைய அறிவில்லாதவனாகிய யான், சகம் தான் அறிய முறையிட்டால் - உலகினர் அறியும்படி முகந்தரவேண்டு மென நின்னை அழைத்து முறையிட்டால், தக்க ஆறு அன்று என் னாரோ - இறைவன் அருள் செய்யாதிருத்தல் தகுதிக்கேற்ற வழியன்று என உலகினர் நின்னைக் குறைசொல்லமாட்டாரோ? மகம் தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் - யாகஞ் செய்து நின் அருள் வழி ஒழுகும் அன்பர்கள் இன்புற்று வாழும்படி எழுந்தருளியிருப்ப வனே, அடியேற்கு உன்முகம் தான் தாராவிடில் முடிவேன் - அடியே னுக்கு உன்னுடைய திருமுகக் காட்சியேனும் காட்டா தொழிந்தால் இறந்தொழிவேன். பொன்னம்பலத்துத் திருநடஞ்செய்யும் எங்கள் முழுமுதற் கட வுளே, தகுதியற்ற என்னை அன்பினோடு செய்யும் திருவடித் தொண் டினுக்கு விரும்பி ஏற்றுக்கொண்டவனே, உருகாத மனத்தையுடைய உணர்வில்லாதவனாகிய யான் உலகினர் அறியும்படி முறையிட்டால் இறைவன் அருள் செய்யாதிருத்தல் தகுதிக்கேற்ற வழியன்று என்று உலகினர் நின்னைக் குறைசொல்ல மாட்டாரோ? யாகஞ்செய்து நின் அருள்வழியொழுகும் அன்பர்கள் இன்புற்று வாழும்படி எழுந்தருளி யிருப்பவனே; அடியேற்கு உன் தன் முகந்தான் தாராவிடின் இறந்தொ ழிவேன். அங்ஙனம் இறந்துபடாமல் அருள் செய்க என்பதாம்.
கோயின் மூத்த திருப்பதிகம் என்றவாறு . அது நின் பெருமைக்கு ஒவ்வாது . அங்ஙனம் நிகழாது அருள் செய்க என்பது குறிப்பெச்சம் . இதன்கண் ' ' போந்திடு என்னாவிடில் அடியார் இவனாரென்னாரோ அது நிகழாமை அருள் செய்க என்பதினால் அநாதியாகிய சற்காரியம் என்னும் பதிக நுதலிய பொருள் புலப்படுதல் காண்க . 2 378 உகந்தா னேயன் புடையடிமைக் குருகா வுள்ளத் துணர்விலியேன் சகந்தான் அறிய முறையிட்டால் தக்க வாறன் றென்னாரோ மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன் முகந்தான் தாரா விடின் முடிவேன் 905 பொன்னம் பலத்தெம் முழுமுதலே . - ரை : பொன்னம்பலத்து எம் முழுமுதலே - பொன்னம்பலத் தின்ரண் என்றும் திருநடனஞ் செய்கின்ற எங்கள் முழுமுதற் கட வுளே அன்பு உடை அடிமைக்கு உகந்தானே - தகுதியற்ற என்னை அன்பினோடு செய்யும் திருவடித் தொண்டினுக்கு விரும்பி ஏற்றுக் கொண்டவனே உருகா உள்ளத்து உணர்வு இலியேன் - அன்பினால் உருகாத வன்னெஞ்சினையுடைய அறிவில்லாதவனாகிய யான் சகம் தான் அறிய முறையிட்டால் - உலகினர் அறியும்படி முகந்தரவேண்டு மென நின்னை அழைத்து முறையிட்டால் தக்க ஆறு அன்று என் னாரோ - இறைவன் அருள் செய்யாதிருத்தல் தகுதிக்கேற்ற வழியன்று என உலகினர் நின்னைக் குறைசொல்லமாட்டாரோ ? மகம் தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் - யாகஞ் செய்து நின் அருள் வழி ஒழுகும் அன்பர்கள் இன்புற்று வாழும்படி எழுந்தருளியிருப்ப வனே அடியேற்கு உன்முகம் தான் தாராவிடில் முடிவேன் - அடியே னுக்கு உன்னுடைய திருமுகக் காட்சியேனும் காட்டா தொழிந்தால் இறந்தொழிவேன் . பொன்னம்பலத்துத் திருநடஞ்செய்யும் எங்கள் முழுமுதற் கட வுளே தகுதியற்ற என்னை அன்பினோடு செய்யும் திருவடித் தொண் டினுக்கு விரும்பி ஏற்றுக்கொண்டவனே உருகாத மனத்தையுடைய உணர்வில்லாதவனாகிய யான் உலகினர் அறியும்படி முறையிட்டால் இறைவன் அருள் செய்யாதிருத்தல் தகுதிக்கேற்ற வழியன்று என்று உலகினர் நின்னைக் குறைசொல்ல மாட்டாரோ ? யாகஞ்செய்து நின் அருள்வழியொழுகும் அன்பர்கள் இன்புற்று வாழும்படி எழுந்தருளி யிருப்பவனே ; அடியேற்கு உன் தன் முகந்தான் தாராவிடின் இறந்தொ ழிவேன் . அங்ஙனம் இறந்துபடாமல் அருள் செய்க என்பதாம் .