திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை உகத்தல் - விரும்புதல். சகம்- உலகம். சகம் எனப் பொதுப்படக் கூறினும் உயர்ந்தோரையே கொள்க. 'உலகமென்பது உயர்ந்தோர் மேற்றே" என்பது (தொல்காப்பியம்.) முறையிட்டால் என்பது முறையிடேன் என்பது தோன்ற நின்றது. உயர்ந்தோர் தக்கவாறு அன்று எனல் அன்புடை அடிமைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவருக்கு அருள்செய்யாதிருத்தல் தகுதியுடைமையாகாது என்று முறையிட மாட்டாரோ என்றவாறு. 906 மகந்தான் செய்து வழிவந்தார் என்றது யாகங்களைச் செய்து இறைவன் அருள்வழி நின்று தொண்டு செய்யும் தில்லைவாழ் அந்த ணரைக் குறித்தது. "கற்றாங் கெரி யோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லை'' வருமுறை யெரிமூன் றோம்பி மன்னுயி ரருளான் மல்க எனத் தேவாரத்தும் திருநடம் புரிவார்க் காளாந திருவினாற் பொலிந்த சீரார்"தில்லைவாழ். 5 மறுவிலா மரபின் வந்து மாறிலா வொழுக்கம் பூண்டார்" தில்லைவாழ். 6 எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க. வாழ வாழ்ந்தாய் என்றது தில்லைவாழ் அந்தணர்கள் இன்புற்று வாழும் வண்ணம் அங்கு எழுந்தருளியிருந்தவனே என்றவாறு. அடியேற்கு உன்தன் முகந்தான் தாராவிடில் என்றது வீடுபேற் றினை அருளாதொழியினும் நின் அருட்டிருமேனியையாயினும் காட் டல் வேண்டும் என்னும் குறிப்புடையது. முகந்தரல் - திருவருள்செய் தலுமாம். அடிகள் தில்லையை அடைந்தபோது இறைவனின் பரமா சாரியத் திருவுருவக் காட்சி கிடைக்கப்பெறாமையின் அடியேற்குன் முகந்தான் தாராவிடின் முடிவேன்" என்றார். இதன்கண் 'அடியேற்கு உன் முகந்தரல் வேண்டும்" என்பதனால் அநாதியாகிய சற்காரியம் என்னும் பதிகநுதலிய பொருள் புலப்படுமாறு காண்க. 379 முழுமுத லேயைம் புலனுக்கும் மூவர்க் கும்என் றனக்கும் வழிமுத லேநின் பழவடியார் திரள் வான் குழுமிக் கெழுமுத லேயருள் தந்திருக்க இரங்குங் கொல்லோவென் றழுமது வேயன் றிமற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே 3
திருவாசக ஆராய்ச்சியுரை உகத்தல் - விரும்புதல் . சகம்- உலகம் . சகம் எனப் பொதுப்படக் கூறினும் உயர்ந்தோரையே கொள்க . ' உலகமென்பது உயர்ந்தோர் மேற்றே என்பது ( தொல்காப்பியம் . ) முறையிட்டால் என்பது முறையிடேன் என்பது தோன்ற நின்றது . உயர்ந்தோர் தக்கவாறு அன்று எனல் அன்புடை அடிமைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவருக்கு அருள்செய்யாதிருத்தல் தகுதியுடைமையாகாது என்று முறையிட மாட்டாரோ என்றவாறு . 906 மகந்தான் செய்து வழிவந்தார் என்றது யாகங்களைச் செய்து இறைவன் அருள்வழி நின்று தொண்டு செய்யும் தில்லைவாழ் அந்த ணரைக் குறித்தது . கற்றாங் கெரி யோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லை ' ' வருமுறை யெரிமூன் றோம்பி மன்னுயி ரருளான் மல்க எனத் தேவாரத்தும் திருநடம் புரிவார்க் காளாந திருவினாற் பொலிந்த சீரார் தில்லைவாழ் . 5 மறுவிலா மரபின் வந்து மாறிலா வொழுக்கம் பூண்டார் தில்லைவாழ் . 6 எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க . வாழ வாழ்ந்தாய் என்றது தில்லைவாழ் அந்தணர்கள் இன்புற்று வாழும் வண்ணம் அங்கு எழுந்தருளியிருந்தவனே என்றவாறு . அடியேற்கு உன்தன் முகந்தான் தாராவிடில் என்றது வீடுபேற் றினை அருளாதொழியினும் நின் அருட்டிருமேனியையாயினும் காட் டல் வேண்டும் என்னும் குறிப்புடையது . முகந்தரல் - திருவருள்செய் தலுமாம் . அடிகள் தில்லையை அடைந்தபோது இறைவனின் பரமா சாரியத் திருவுருவக் காட்சி கிடைக்கப்பெறாமையின் அடியேற்குன் முகந்தான் தாராவிடின் முடிவேன் என்றார் . இதன்கண் ' அடியேற்கு உன் முகந்தரல் வேண்டும் என்பதனால் அநாதியாகிய சற்காரியம் என்னும் பதிகநுதலிய பொருள் புலப்படுமாறு காண்க . 379 முழுமுத லேயைம் புலனுக்கும் மூவர்க் கும்என் றனக்கும் வழிமுத லேநின் பழவடியார் திரள் வான் குழுமிக் கெழுமுத லேயருள் தந்திருக்க இரங்குங் கொல்லோவென் றழுமது வேயன் றிமற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே 3