திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 495 சிவலோகனை " (சென்னி. 10) எனவருவன காண்க. அன்பர் ஆர் என்பதில் அர் விகுதி தொக்கது. யாமார் என மேல் வருதலும் இதனை வலியுறுத்தும். இத்திருப்பாட்டு சர்வபூததமனி சத்தி, பலப்பிரதமனி சத்தியை துயிலுணர்த்துதலாக கூறப்பட்டது என்பர். இதன்கண் ‘‘ விண்ணோர்க ளேத்துதற்கு கூசுமலர்ப்பாதம் என்றமையால் சத்தியை வியந்த தென்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க. 2. 157 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதி ரெழுந்தென் அத்தனா னந்தன் அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய் 99 UP ப- ரை. முத்து அன்ன வெள் நகையாய் முத்துப்போன்ற வெள்ளிய பற்களையுடைய பெண்ணே, முன் எழுந்து எதிர் வந்து - இதற்கு முன்பெல்லாம் யாங்கள் வருதற்கு முன் துயில் நீத்து எழுந்து எங்கள் எதிரில் வந்து, என் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி தித்திக்கப் பேசுவாய் - என் தந்தை இன்பவடிவினன் இறப்பினை நீக்கும் அமுதமானவன் என்று வாயூறி இனிக்கும் வண்ணம் பேசுவாய்; வந்து உன் கடைதிறவாய் இன்றோ எழுந்து வந்து உனது இல்லத்தின் புறவாயிற் கதவைத் தானும் திறக்கின்றாயில்லை (என்று துயிலெழுப்ப வந்த மகளிர் கூறக் கேட்டலும் எழுந்தவள் வந்து கதவைத் திறந்து) பத்துடையீர் - நீவிர் இறைவனிடத்துப் பேரன்புடையீர்; ஈசன் பழ அடியீர் - ஈச னுக்குப் பழமையான தொண்டுடையீர்; பாங்கு உடையீர் - எனக் கும் தகுந்த தோழமை யுடையீர் (இத்தகைமையையுடைய நீவிர்) புது அடியோம் புன்மை தீர்த்து ஆள் கொண்டால் பொல்லாதோ? புதிய தொண்டுடைய என் போன்றவர்களது குற்றத்தை நீக்கி அடிமைகொண்டால் அது உங்களுக்குத் தீங்காகுமோ? (என்று எதிராக வினாவுதலும் துயிலெழுப்பியவர்) 'நின் அன்பு டைமை எத்தோ - நினது அன்புடைமை வஞ்சனையோ? எல்லோம் அறியோமோ - உனது அன்பின் உயர்வை யாமெல்லாமும் அறிய மாட்டோமோ? சித்தம் அழகியார் நம் சிவனைப் பாடாரோ. உன்னைப்போன்ற மனத்தூய்மையுடையவர் நம் சிவபெருமானைப்
திருவெம்பாவை 495 சிவலோகனை ( சென்னி . 10 ) எனவருவன காண்க . அன்பர் ஆர் என்பதில் அர் விகுதி தொக்கது . யாமார் என மேல் வருதலும் இதனை வலியுறுத்தும் . இத்திருப்பாட்டு சர்வபூததமனி சத்தி பலப்பிரதமனி சத்தியை துயிலுணர்த்துதலாக கூறப்பட்டது என்பர் . இதன்கண் விண்ணோர்க ளேத்துதற்கு கூசுமலர்ப்பாதம் என்றமையால் சத்தியை வியந்த தென்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க . 2 . 157 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதி ரெழுந்தென் அத்தனா னந்தன் அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய் 99 UP ப- ரை . முத்து அன்ன வெள் நகையாய் முத்துப்போன்ற வெள்ளிய பற்களையுடைய பெண்ணே முன் எழுந்து எதிர் வந்து - இதற்கு முன்பெல்லாம் யாங்கள் வருதற்கு முன் துயில் நீத்து எழுந்து எங்கள் எதிரில் வந்து என் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி தித்திக்கப் பேசுவாய் - என் தந்தை இன்பவடிவினன் இறப்பினை நீக்கும் அமுதமானவன் என்று வாயூறி இனிக்கும் வண்ணம் பேசுவாய் ; வந்து உன் கடைதிறவாய் இன்றோ எழுந்து வந்து உனது இல்லத்தின் புறவாயிற் கதவைத் தானும் திறக்கின்றாயில்லை ( என்று துயிலெழுப்ப வந்த மகளிர் கூறக் கேட்டலும் எழுந்தவள் வந்து கதவைத் திறந்து ) பத்துடையீர் - நீவிர் இறைவனிடத்துப் பேரன்புடையீர் ; ஈசன் பழ அடியீர் - ஈச னுக்குப் பழமையான தொண்டுடையீர் ; பாங்கு உடையீர் - எனக் கும் தகுந்த தோழமை யுடையீர் ( இத்தகைமையையுடைய நீவிர் ) புது அடியோம் புன்மை தீர்த்து ஆள் கொண்டால் பொல்லாதோ ? புதிய தொண்டுடைய என் போன்றவர்களது குற்றத்தை நீக்கி அடிமைகொண்டால் அது உங்களுக்குத் தீங்காகுமோ ? ( என்று எதிராக வினாவுதலும் துயிலெழுப்பியவர் ) ' நின் அன்பு டைமை எத்தோ - நினது அன்புடைமை வஞ்சனையோ ? எல்லோம் அறியோமோ - உனது அன்பின் உயர்வை யாமெல்லாமும் அறிய மாட்டோமோ ? சித்தம் அழகியார் நம் சிவனைப் பாடாரோ . உன்னைப்போன்ற மனத்தூய்மையுடையவர் நம் சிவபெருமானைப்