திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அரிய கற்பனை கற்பித்து ஆட்கொண்டருளினை. அங்ஙனம் ஆட்கொள் ளப்பட்டும் நான் ஆள்வாரில்லாத மாடு போலாவேனோ, நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று விளையாடுமிடத்தின் பக்கலிலே சார்ந்து வரும்படி என்னை வாவென்று அழைத்தருள வேண்டும் என்பதாம். " அருங்கற் அம்பலக் கூத்தன் எனப் படர்க்கையாற் கூறினும் பனை கற்பித்தாண்டாய்" என முன்னிலையாற் கூறுதலின் அம்பலக் கூத்தனாகிய நீ என முன்னிலையாக்கி அதற்கேற்ப இரங்கும் என்னும் செய்யுமென்னும் முற்றை இரங்குவாய் என முன்னிலை வினையாக்கிப் பொருளுரைக்கப்பட்டது. அம்பலக்கூத்தன் "கூடுவதம்பலக்கூத் தன்" (கோயில் திருப்பண்ணி. 52) என வருதல் காண்க. ஏமாந்திருத் தல் - ஆசைப்பட்டிருத்தல். "அருந்தேமாந்த நெஞ்சம்" (புற 101-9) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 912 மற்றைத் தொண்டர் எவர்க்கும் செய்திராத வகையில் ஞானவதி யாகிய நிருவாணதீக்கையினைச் செய்தும் சமய சாஸ்திர உண்மைகள் பலவற்றை உபதேசித்தும் ஆட்கொண்டமையின் "அருங்கற்பனை கற் பித்தாண்டாய்' என்றார். 'அத்த னார்திரு வாய்மலர்ந் தருளு மமல வாசகங் கேட்டக மகிழும் திருப்பெருந்துறை. 75 பத்தனார்" எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதல்கான்க. அருமை - இன்மை குறித்து நின்றது. "அருங்கேட னென்ப கட்டளை தறிக (குறள்) என்புழிப்போல. கற்பனை கற்பித்து ஏற்படுத்தி, முத்தியும் ஞானமும் வானவ ரறியா முறை முறை பல பல நெறிகளும் காட்டிக், கற்பனை கற்பித்த கடவுளை" (சுந். 58:2) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. கற்பனை கற்பித்தாண்டாய் என்றதன் நோக்கம் அங்ஙனம் ஆட்கொள்ளப்பட்ட யான் ஆள்வாரிலி மாடாவது தகுமோ என்பதைப் புலப்படுத்தற் பொருட்டென்க. ஆள்வாரிலிமாடு - மேய்த்துப் பாதுகாப்பவரில்லாத மாடு. மாடா வேனோ என்புழி ஆக்கச்சொல் உவமப்பொருள் குறித்து நின்றது. "நிட்டை புரிந்துளோர்கள் பூதலத்திற் புகழ் சீவன் முத்தராகி" (சிவஞான: சூ. 8 செ.29) என்றாற்போல ஆவேனோ என்பதில் ஓகாரம் - எதிர்மறை. நெருங்கும் அடியார் என்றது அணுக்கன் தொண்டரை. விளையா டல் - இன்பக்கூத்தாடல் மருங்கு - பக்கம். சார்ந்துவரல் - அப்பக் கலைச் சார்வாகக்கொண்டு நின்னை அடைதல். - இதன்கண் 'நெருங்குமடியார்களும் நீயும் நின்று விளையாடும் மருங்கே சார்ந்துவர அருளாயே" என்பதனால் அநாதியாகிய சற்காரி யம் என்னும் பதிக நுதலிய பொருள் புலப்படுமாறு காண்க. 7
திருவாசக ஆராய்ச்சியுரை அரிய கற்பனை கற்பித்து ஆட்கொண்டருளினை . அங்ஙனம் ஆட்கொள் ளப்பட்டும் நான் ஆள்வாரில்லாத மாடு போலாவேனோ நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று விளையாடுமிடத்தின் பக்கலிலே சார்ந்து வரும்படி என்னை வாவென்று அழைத்தருள வேண்டும் என்பதாம் . அருங்கற் அம்பலக் கூத்தன் எனப் படர்க்கையாற் கூறினும் பனை கற்பித்தாண்டாய் என முன்னிலையாற் கூறுதலின் அம்பலக் கூத்தனாகிய நீ என முன்னிலையாக்கி அதற்கேற்ப இரங்கும் என்னும் செய்யுமென்னும் முற்றை இரங்குவாய் என முன்னிலை வினையாக்கிப் பொருளுரைக்கப்பட்டது . அம்பலக்கூத்தன் கூடுவதம்பலக்கூத் தன் ( கோயில் திருப்பண்ணி . 52 ) என வருதல் காண்க . ஏமாந்திருத் தல் - ஆசைப்பட்டிருத்தல் . அருந்தேமாந்த நெஞ்சம் ( புற 101-9 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . 912 மற்றைத் தொண்டர் எவர்க்கும் செய்திராத வகையில் ஞானவதி யாகிய நிருவாணதீக்கையினைச் செய்தும் சமய சாஸ்திர உண்மைகள் பலவற்றை உபதேசித்தும் ஆட்கொண்டமையின் அருங்கற்பனை கற் பித்தாண்டாய் ' என்றார் . ' அத்த னார்திரு வாய்மலர்ந் தருளு மமல வாசகங் கேட்டக மகிழும் திருப்பெருந்துறை . 75 பத்தனார் எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதல்கான்க . அருமை - இன்மை குறித்து நின்றது . அருங்கேட னென்ப கட்டளை தறிக ( குறள் ) என்புழிப்போல . கற்பனை கற்பித்து ஏற்படுத்தி முத்தியும் ஞானமும் வானவ ரறியா முறை முறை பல பல நெறிகளும் காட்டிக் கற்பனை கற்பித்த கடவுளை ( சுந் . 58 : 2 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . கற்பனை கற்பித்தாண்டாய் என்றதன் நோக்கம் அங்ஙனம் ஆட்கொள்ளப்பட்ட யான் ஆள்வாரிலி மாடாவது தகுமோ என்பதைப் புலப்படுத்தற் பொருட்டென்க . ஆள்வாரிலிமாடு - மேய்த்துப் பாதுகாப்பவரில்லாத மாடு . மாடா வேனோ என்புழி ஆக்கச்சொல் உவமப்பொருள் குறித்து நின்றது . நிட்டை புரிந்துளோர்கள் பூதலத்திற் புகழ் சீவன் முத்தராகி ( சிவஞான : சூ . 8 செ .29 ) என்றாற்போல ஆவேனோ என்பதில் ஓகாரம் - எதிர்மறை . நெருங்கும் அடியார் என்றது அணுக்கன் தொண்டரை . விளையா டல் - இன்பக்கூத்தாடல் மருங்கு - பக்கம் . சார்ந்துவரல் - அப்பக் கலைச் சார்வாகக்கொண்டு நின்னை அடைதல் . - இதன்கண் ' நெருங்குமடியார்களும் நீயும் நின்று விளையாடும் மருங்கே சார்ந்துவர அருளாயே என்பதனால் அநாதியாகிய சற்காரி யம் என்னும் பதிக நுதலிய பொருள் புலப்படுமாறு காண்க . 7