திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

383 கோயின் மூத்த திருப்பதிகம் அருள தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆரிங்குப் பொருளா வென்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன் தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. ப -ரை. புகுந்து என்னை பொருளா ஆண்ட பொன்னே - என் பால் வலிய வந்து புகுந்து என்னைப் பொருளாக மதித்து ஆட்கொண்ட பொன்போன்றவனே, பொன்னம்பலக்கூத்தா- பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவஞ் செய்பவனே, அருளாது ஒழிந்தால்-நீ எனக்கு வீடு பேற்றினைத் தராதுவிடின், அடியேனை இங்கு அஞ்சேல் என்பார் ஆர்- அடியேனை இவ்வுலகில் அஞ்சற்க என்று அபயந்தர வல்லார் வேறு யாவருளர், உனைப் பிரிந்து மருள் ஆர் மனத்தோடு வருந்து வேனை -உன்னைப் பிரிந்ததனால் உளதாகிய மனமயக்கத்தோடு துன் பப்படுகின்ற என்னை, வா என்று உன் தெருளார் கூட்டம் காட்டாயேல் இங்கே வருக என்று அழைத்து உன்னுடைய தெளிந்த அறிவினை யுடைய மெய்யடியார் கூட்டத்தினைக் காட்டாதொழிந்தால், செத்தே போனால் சிரியாரோ-ஆற்றாமை மிகுதியால் யான் இறந்துபோனால் உலகினர் நின்னை எள்ளி நகையாடாரோ. 913 எனைப் பொருளா மதித்துப் புகுந்து ஆண்ட பொன்னே, பொன் னம்பலக் கூத்தனே, நீ எனக்கு வீடுபேற்றினைத் தந்தருளாதொழிந் தால் அடியேனை இவ்வுலகில் அஞ்சற்கவென்று அபயந்தரவல்லார் வேறு யாவருளர். உன்னைப் பிரிந்ததனால் மயக்கம் பொருந்திய மனத்தோடு துன்பப்படுகின்ற என்னை இங்கே வருகவென்று உன் தெளிந்த அறிவினையுடைய மெய்யடியார் கூட்டத்தினைக் தொழியின் ஆற்றாமை மிகுதியால் யான் இறந்துபட்டுப்போனால் உலகினர் நின்னை எள்ளிநகையாடாரோ? ஆதலால் அருளவேண் டும் என்பதாம். காட்டா அருளல் - வீடுபேற்றினைத் தருதல். இங்கு - இவ்வுலகில் பொருளா என்னை புகுந்து ஆண்ட - ஒரு பொருளென மதித்து இவ்வுலகிற் புகுந்து ஆட்கொண்ட என்றவாறு. 'பொய்யவ னேனைப் பொருளென ஆண்டு" ''அறிவிலாத வெனைப் புகுந்து ஆண்டுகொண்டு" 'பொருளாவெனைப் புகுந்தாண்டு'' என அடிகள் அருளியமை காண்க. நீத்.7 சத. 32 கோவை.73 88
383 கோயின் மூத்த திருப்பதிகம் அருள தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆரிங்குப் பொருளா வென்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன் தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ . -ரை . புகுந்து என்னை பொருளா ஆண்ட பொன்னே - என் பால் வலிய வந்து புகுந்து என்னைப் பொருளாக மதித்து ஆட்கொண்ட பொன்போன்றவனே பொன்னம்பலக்கூத்தா- பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவஞ் செய்பவனே அருளாது ஒழிந்தால் - நீ எனக்கு வீடு பேற்றினைத் தராதுவிடின் அடியேனை இங்கு அஞ்சேல் என்பார் ஆர்- அடியேனை இவ்வுலகில் அஞ்சற்க என்று அபயந்தர வல்லார் வேறு யாவருளர் உனைப் பிரிந்து மருள் ஆர் மனத்தோடு வருந்து வேனை -உன்னைப் பிரிந்ததனால் உளதாகிய மனமயக்கத்தோடு துன் பப்படுகின்ற என்னை வா என்று உன் தெருளார் கூட்டம் காட்டாயேல் இங்கே வருக என்று அழைத்து உன்னுடைய தெளிந்த அறிவினை யுடைய மெய்யடியார் கூட்டத்தினைக் காட்டாதொழிந்தால் செத்தே போனால் சிரியாரோ - ஆற்றாமை மிகுதியால் யான் இறந்துபோனால் உலகினர் நின்னை எள்ளி நகையாடாரோ . 913 எனைப் பொருளா மதித்துப் புகுந்து ஆண்ட பொன்னே பொன் னம்பலக் கூத்தனே நீ எனக்கு வீடுபேற்றினைத் தந்தருளாதொழிந் தால் அடியேனை இவ்வுலகில் அஞ்சற்கவென்று அபயந்தரவல்லார் வேறு யாவருளர் . உன்னைப் பிரிந்ததனால் மயக்கம் பொருந்திய மனத்தோடு துன்பப்படுகின்ற என்னை இங்கே வருகவென்று உன் தெளிந்த அறிவினையுடைய மெய்யடியார் கூட்டத்தினைக் தொழியின் ஆற்றாமை மிகுதியால் யான் இறந்துபட்டுப்போனால் உலகினர் நின்னை எள்ளிநகையாடாரோ ? ஆதலால் அருளவேண் டும் என்பதாம் . காட்டா அருளல் - வீடுபேற்றினைத் தருதல் . இங்கு - இவ்வுலகில் பொருளா என்னை புகுந்து ஆண்ட - ஒரு பொருளென மதித்து இவ்வுலகிற் புகுந்து ஆட்கொண்ட என்றவாறு . ' பொய்யவ னேனைப் பொருளென ஆண்டு ' ' அறிவிலாத வெனைப் புகுந்து ஆண்டுகொண்டு ' பொருளாவெனைப் புகுந்தாண்டு ' ' என அடிகள் அருளியமை காண்க . நீத் .7 சத . 32 கோவை .73 88