திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

22. கோயிற்றிருப்பதிகம் அனுபோகவிலக்கணம் திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது கோயில் எனப்படும் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமானைத் திருப்பெருந்துறையில் தமக்கு அருள் செய்த ஞானாசாரியத் திருவுருவாகக் கண்ட அடிகள் தில்லைத்திருச்சிற்றம்ப லப்பெருமானைத் திருப்பெருந்துறை யுறை சிவனே எனவே அழைத்து முன்னிலைப்படுத்தி இப்பதிகத்தினை அருளிச்செய்வாராயினர். இதன் உள்ளுறை அனுபோக இலக்கணம். அனுபோக இலக்கண மென்பது சிவபெருமானை அனுபவ வாயிலாக அறிவதற்கு அறிகுறி எனப் பொருள்படுவதாகும். இக்கருத்து அமையவே திருவாசகச் சிறப்புடையார் 'கோயிற்றிருப்பதிகம் பெருந்துறைத்தேசிகர் மோக மியம்பலாகும்" என்பாராயினர். இது எழுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம். இப்பதிகம் அந்தாதியாக அமைந்துள்ளது. எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 386 திருச்சிற்றம்பலம் மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் டலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுவரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் பாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே. ப -ரை. தேறலின் தெளிவே - தேனின் தெளிவு போன்ற தூய இனிமையுடையவனே, சிவபெருமானே - சிவபிரானே, திருப்பெருந் துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவனே, ஈறு இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே - அழிவற்ற மேற்பதவிகள் எல்லாவற்றையுங் கடந்த நிலையிலுள்ள இன்ப வடிவி னனே, என்னுடை அன்பே - என்னுடைய அன்புருவானவனே, மாறி நின்று - மாறுபட்டு நின்று, என்னை மயக்கிடும் - என் அறிவை மயங்கச் செய்கின்ற, வஞ்ச புலன் ஐந்தின் வழி அடைத்து - வஞ்சகத்தினை யுடைய ஐம்புலன்களைக் கவரும் வழிகளாகிய ஐம்பொறிகளையும் அவை எண்ணியவாறு செல்லவொட்டாது தடுத்து, அமுதே ஊறி நின்று - அமுதம் போன்ற இனிமையே சுரந்து நின்று, என் உள் எழு
22. கோயிற்றிருப்பதிகம் அனுபோகவிலக்கணம் திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது கோயில் எனப்படும் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமானைத் திருப்பெருந்துறையில் தமக்கு அருள் செய்த ஞானாசாரியத் திருவுருவாகக் கண்ட அடிகள் தில்லைத்திருச்சிற்றம்ப லப்பெருமானைத் திருப்பெருந்துறை யுறை சிவனே எனவே அழைத்து முன்னிலைப்படுத்தி இப்பதிகத்தினை அருளிச்செய்வாராயினர் . இதன் உள்ளுறை அனுபோக இலக்கணம் . அனுபோக இலக்கண மென்பது சிவபெருமானை அனுபவ வாயிலாக அறிவதற்கு அறிகுறி எனப் பொருள்படுவதாகும் . இக்கருத்து அமையவே திருவாசகச் சிறப்புடையார் ' கோயிற்றிருப்பதிகம் பெருந்துறைத்தேசிகர் மோக மியம்பலாகும் என்பாராயினர் . இது எழுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம் . இப்பதிகம் அந்தாதியாக அமைந்துள்ளது . எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 386 திருச்சிற்றம்பலம் மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் டலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுவரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் பாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே . -ரை . தேறலின் தெளிவே - தேனின் தெளிவு போன்ற தூய இனிமையுடையவனே சிவபெருமானே - சிவபிரானே திருப்பெருந் துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவனே ஈறு இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே - அழிவற்ற மேற்பதவிகள் எல்லாவற்றையுங் கடந்த நிலையிலுள்ள இன்ப வடிவி னனே என்னுடை அன்பே - என்னுடைய அன்புருவானவனே மாறி நின்று - மாறுபட்டு நின்று என்னை மயக்கிடும் - என் அறிவை மயங்கச் செய்கின்ற வஞ்ச புலன் ஐந்தின் வழி அடைத்து - வஞ்சகத்தினை யுடைய ஐம்புலன்களைக் கவரும் வழிகளாகிய ஐம்பொறிகளையும் அவை எண்ணியவாறு செல்லவொட்டாது தடுத்து அமுதே ஊறி நின்று - அமுதம் போன்ற இனிமையே சுரந்து நின்று என் உள் எழு