திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயிற்றிருப்பதிகம் பரஞ்சோதி - என் உள்ளத்தில் எழுகின்ற மேலான ஒளிவடிவினை யுடைய நின் சொரூப இலக்கணத்தினை, உள்ள ஆ காண வந்தரு ளாய் - உள்ளபடியே காண அநுபவ வாயிலாக அறியும்படி வந்து அருள்செய்வாயாக. 919 தேறலின் தெளிவே, சிவபெருமானே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவனே. ஈறிலாப் பதங்கள் யாவற்றையும் கடந்த இன்பமே, என்னுடை அன்பே, மாறுபட்டு நின்று என் அறிவை மயங்கச் செய்கின்ற ஐம்புலன்களைக் கவரும் வழியை அடைத்து என் உள்ளத்தில் எழுகின்ற மேலான ஒளிவடிவினையுடைய நின் சொரூபலக்கணத்தினை உள்ளபடி நான் அனுபவவாயிலாக அறி யும்படி வந்து அருள் செய்வாயாக என்பதாம். மாறி நிற்றல்-என் நினைவிற்கு மாறுபட்டு நிற்றல். புலனைந்தின் வழி என்றது ஐம்பொறிகளை. புலனின்பமே மக்களை மயக்கிக் கேடுக ளில் ஈர்த்துச் செல்லுதலின் 'மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின்'' என்றார். புலனைந்தின் வழியடைத்து என்றது புலன் ஐந் தின் வழியே மனம் செல்லாமல் அவற்றை நிறுத்தி என்றது. அமுதம்- இனிமை குறித்தது என்னுள் - என்னுள்ளத்தில். பரஞ்சோதி - மேலான சோதி. உள்ளத்தில் எழுகின்ற சோதியைப் பரஞ்சோதி என்றது "எறிவளி யெடுப்பினும் சிறுநடுக்குறா புத்தேள் நிவந்த முத்த மாச்சுடராதலின்". காண என்பதன் செயப்படுபொருள் சோதி. உள்ளவாறு என்பது உள்ளவா என ஈறு கெட்டது. "எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம்" (திருவெம்பா.4) என்புழியும் இவ்வாறு வருதல் காண்சு. அது கடவுளின் சொரூப நிலையைக் குறிக்கும். இத்திருப்பதிகம் தில்லையில் அருளிச்செய்யப்பட்டதாகவும் ஒவ் வொரு திருப் பாடலிலும் திருப்பெருந்துறையுறை சிவனே என விளித் தமை, திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய ஞானாசாரிய வடிவமாகக் கூத்தப்பிரானை அடிகள் தரிசித்தமைபற்றியாகும். ஈறிலாப்பதங்கள் என்றது சிவதத்துவத்திலுள்ள அழிவற்ற பதவி களை. ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த என்றார். இறைவன் தத் துவாதீதனாதலின். இன்பம் - இன்பவுருவினன். அன்பே சிவமாதலின் 'என்னுடை அன்பே’ என்றார். இதன் கண், ''அமுதே ஊறி நின்றென்னுள் எழுபரஞ்சோதி யுள் ளவா காணவந்தருளாய்" என்பதனால் அனுபோக இலக்கணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 1
கோயிற்றிருப்பதிகம் பரஞ்சோதி - என் உள்ளத்தில் எழுகின்ற மேலான ஒளிவடிவினை யுடைய நின் சொரூப இலக்கணத்தினை உள்ள காண வந்தரு ளாய் - உள்ளபடியே காண அநுபவ வாயிலாக அறியும்படி வந்து அருள்செய்வாயாக . 919 தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவனே . ஈறிலாப் பதங்கள் யாவற்றையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே மாறுபட்டு நின்று என் அறிவை மயங்கச் செய்கின்ற ஐம்புலன்களைக் கவரும் வழியை அடைத்து என் உள்ளத்தில் எழுகின்ற மேலான ஒளிவடிவினையுடைய நின் சொரூபலக்கணத்தினை உள்ளபடி நான் அனுபவவாயிலாக அறி யும்படி வந்து அருள் செய்வாயாக என்பதாம் . மாறி நிற்றல் - என் நினைவிற்கு மாறுபட்டு நிற்றல் . புலனைந்தின் வழி என்றது ஐம்பொறிகளை . புலனின்பமே மக்களை மயக்கிக் கேடுக ளில் ஈர்த்துச் செல்லுதலின் ' மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் ' ' என்றார் . புலனைந்தின் வழியடைத்து என்றது புலன் ஐந் தின் வழியே மனம் செல்லாமல் அவற்றை நிறுத்தி என்றது . அமுதம் இனிமை குறித்தது என்னுள் - என்னுள்ளத்தில் . பரஞ்சோதி - மேலான சோதி . உள்ளத்தில் எழுகின்ற சோதியைப் பரஞ்சோதி என்றது எறிவளி யெடுப்பினும் சிறுநடுக்குறா புத்தேள் நிவந்த முத்த மாச்சுடராதலின் . காண என்பதன் செயப்படுபொருள் சோதி . உள்ளவாறு என்பது உள்ளவா என ஈறு கெட்டது . எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் ( திருவெம்பா .4 ) என்புழியும் இவ்வாறு வருதல் காண்சு . அது கடவுளின் சொரூப நிலையைக் குறிக்கும் . இத்திருப்பதிகம் தில்லையில் அருளிச்செய்யப்பட்டதாகவும் ஒவ் வொரு திருப் பாடலிலும் திருப்பெருந்துறையுறை சிவனே என விளித் தமை திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய ஞானாசாரிய வடிவமாகக் கூத்தப்பிரானை அடிகள் தரிசித்தமைபற்றியாகும் . ஈறிலாப்பதங்கள் என்றது சிவதத்துவத்திலுள்ள அழிவற்ற பதவி களை . ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த என்றார் . இறைவன் தத் துவாதீதனாதலின் . இன்பம் - இன்பவுருவினன் . அன்பே சிவமாதலின் ' என்னுடை அன்பே என்றார் . இதன் கண் ' ' அமுதே ஊறி நின்றென்னுள் எழுபரஞ்சோதி யுள் ளவா காணவந்தருளாய் என்பதனால் அனுபோக இலக்கணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 1