திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை உணர்ந்த மாமுனிவர் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக் கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்த பெரிய முனிவர். முனிவர் என்றது தேவ இருடிகளையும் மனித இருடிகளையும் குறிக்கும். உம்பர் - தேவர். 'உம்பர்கட்கரசே" (பிடித்.1) என வருதல் காண்க. ஒழிந்தார் - அன் பர்கள். பசுஞான பாசஞானங்களால் அறியப்படும் பொருள் சுட்டு ணர்விற்கும் அழிவுபாடுடைத்தாகும். இறைவன் சுட்டியறியப்படு வானல்லனாதலின் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே " என்றார். 924 போற்றி.124. உரையுணர் விறந்த வொருவ போற்றி உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே'' கோயிற்றிரு.3. என அருளியவாறுங் காண்க. <6 இணங்குதல் - ஒத்தல். பிறப்பறுக்கும் மருந்து என்றது ஏகதேச வுருவகம்; பிறவிப்பிணியை அறுக்கும் மருந்து என்பது கருத்து. மருந்தின னேபிற விப்பீணி பட்டு மடங்சீனர்க்கே " நீத். 18. es .. "2 பிறவிப் பிணிக்கோர் மருந்தே புணர்ச்சி 9. என அடிகள் அருளியமையும் காண்க. திணிந்ததோர் இருள் என்றது ஆணவவல்லிருளை. கண்ணிருள் பொருள்களை மறைத்துத் தன்னைக் காட்டும். ஆணவவிருள் தன்னை யுங் காட்டாது பொருளையும் காட்டாது. ஆதலின் ஆணவத்தை 5 . ஓர் இருள் " என்றார். இருளில் என்னும் ஐந்தாவது நீக்கற் பொருட்டு. தெளிந்த என்னும் எச்சம் ஏதுப்பொருட்டு. குணங்கள் - சாத்துவிக, இராசத, தாமதம். இக்குணங் கள் தொடர்பாக உண்டாகும் இன்பம் அறிவுடைத்தாதலின் 'குணங்கள் தாமில்லா இன்பமே' என்றார். குறுகுதல் - அடைதல். என்றது இடைவிடாதுணர்தல். உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறை என்றது இறைவன் குறைவிலா நிறைவுடையவனாதல் பற்றி யாகும். குறைவிலா நிறைவே கோதிலா அமுதே (கோயிற்.5) என அடிகள் அருளியமை காண்க. 68 இதன் கண். ''உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே ' என்பதனால் அனுபோக இலக்கணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க: 4 390 குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே
திருவாசக ஆராய்ச்சியுரை உணர்ந்த மாமுனிவர் - இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக் கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்த பெரிய முனிவர் . முனிவர் என்றது தேவ இருடிகளையும் மனித இருடிகளையும் குறிக்கும் . உம்பர் - தேவர் . ' உம்பர்கட்கரசே ( பிடித் .1 ) என வருதல் காண்க . ஒழிந்தார் - அன் பர்கள் . பசுஞான பாசஞானங்களால் அறியப்படும் பொருள் சுட்டு ணர்விற்கும் அழிவுபாடுடைத்தாகும் . இறைவன் சுட்டியறியப்படு வானல்லனாதலின் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே என்றார் . 924 போற்றி .124 . உரையுணர் விறந்த வொருவ போற்றி உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே ' ' கோயிற்றிரு .3 . என அருளியவாறுங் காண்க . < 6 இணங்குதல் - ஒத்தல் . பிறப்பறுக்கும் மருந்து என்றது ஏகதேச வுருவகம் ; பிறவிப்பிணியை அறுக்கும் மருந்து என்பது கருத்து . மருந்தின னேபிற விப்பீணி பட்டு மடங்சீனர்க்கே நீத் . 18 . es .. 2 பிறவிப் பிணிக்கோர் மருந்தே புணர்ச்சி 9 . என அடிகள் அருளியமையும் காண்க . திணிந்ததோர் இருள் என்றது ஆணவவல்லிருளை . கண்ணிருள் பொருள்களை மறைத்துத் தன்னைக் காட்டும் . ஆணவவிருள் தன்னை யுங் காட்டாது பொருளையும் காட்டாது . ஆதலின் ஆணவத்தை 5 . ஓர் இருள் என்றார் . இருளில் என்னும் ஐந்தாவது நீக்கற் பொருட்டு . தெளிந்த என்னும் எச்சம் ஏதுப்பொருட்டு . குணங்கள் - சாத்துவிக இராசத தாமதம் . இக்குணங் கள் தொடர்பாக உண்டாகும் இன்பம் அறிவுடைத்தாதலின் ' குணங்கள் தாமில்லா இன்பமே ' என்றார் . குறுகுதல் - அடைதல் . என்றது இடைவிடாதுணர்தல் . உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறை என்றது இறைவன் குறைவிலா நிறைவுடையவனாதல் பற்றி யாகும் . குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ( கோயிற் .5 ) என அடிகள் அருளியமை காண்க . 68 இதன் கண் . ' ' உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே ' என்பதனால் அனுபோக இலக்கணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க : 4 390 குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே