திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயிற் றிருப்பதிகம் சிறைபெறா நீர்போற் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நியென் னுடலிடங் கொண்டாய் இனியுன்னை யென்னிரக் கேனே. 925 வரென் ப - ரை: குறைவு இலா நிறைவே - கொடுக்குந்தொறும் குறைவு படாத நிறைந்த திருவருட் செல்வத்தையுடையவனே, கோது இலா அமுதே - குற்றமற்ற அமுதம் போன்றவனே, ஈறு இலா கொழு சுடர் குன்றே - முடிவடைதலில்லாத செழுமையாகிய சோதி மலையே, மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என் மனத் திடை மன்னிய மன்னே - ஐந்தெழுத்து மந்திரமாகியும் அம்மந்தி ரத்தின் பொருளாகியும் வலிய எழுந்தருளி வந்து என் மனத்தின் கண்ணே நிலைபெற்ற இறைவனே, சிறை பெறா நீர் போல் சிந்தை வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே - கரையில்லாத நீர்ப் பெருக்குப் போல என் உள்ளத்தின் கண்ணே அளவு கடந்து பாய்ந்து கொண்டிருக்கின்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய்-தலை வனே நீ என்னை நினக்கு உடலாகக் கொண்டனை. இனி உன்னை என் இரக்கேன் - இனியான் உன்னை எதனை இரந்து பெறக்கடவேன் ஒன்றுமில்லை. குறைவிலா நிறைவே, குற்றமில்லாத அமுது போன்றவனே, ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே. மறையும் மறையின் பொருளு மாய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே, சிறை பெறாநீர் போல் மனத்தின் கண் அளவு கடந்து பாய்ந்து கொண்டிருக்கின்ற திருப்பெருந்துறையுறை சிவனே, நீ என்னை நினக்கு உடலாக கொண்டனை,இனி யான் உன்னை எந்தப் பொருளை இரந்து பெறக் கடவேன்? ஒன்றுமில்லை என்றபடி. இறைவனது திருவருட்செல்வம் கொடுக்குந்தோறும் குறைத லில்லாத நிறைவுடைத்தாகலின் '' குறைவிலா நிறைவே " என்றார். 2007 20 'குறைவிலா நிறைவே குணமில் குணமே" தே.ஞான.146-4 குறைவிலா நிறைவே குணக் குன்றே கூத்தனே" தே.சுந். 70 - 6 எனவருவனவும் காண்க, தேவரமுது நஞ்சுடன் தோன்றியமையும் உண்ணக் குறைதலுமாகிய குற்றமுடைமையின் அக் குற்றமற்ற இறைவனை 'கோதிலா அமுதே' என்றார். 'கோதிலா வமுதே' தே. சுந். 70-8.) என்பது காண்க. ஈறிலாக் கொழுஞ்சுடர்க்குன்றே என் றது திருமாலும் பிரமனும் அடி முடி தேட அறியப்படாது நின்ற இறைவனது சோதியுருவத்தைக் குறிக்கும். மறை - மந்திரம்; அது ஐந்தெழுத்து மகாமந்திரத்தைக் குறிக்கும்.
கோயிற் றிருப்பதிகம் சிறைபெறா நீர்போற் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நியென் னுடலிடங் கொண்டாய் இனியுன்னை யென்னிரக் கேனே . 925 வரென் - ரை : குறைவு இலா நிறைவே - கொடுக்குந்தொறும் குறைவு படாத நிறைந்த திருவருட் செல்வத்தையுடையவனே கோது இலா அமுதே - குற்றமற்ற அமுதம் போன்றவனே ஈறு இலா கொழு சுடர் குன்றே - முடிவடைதலில்லாத செழுமையாகிய சோதி மலையே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என் மனத் திடை மன்னிய மன்னே - ஐந்தெழுத்து மந்திரமாகியும் அம்மந்தி ரத்தின் பொருளாகியும் வலிய எழுந்தருளி வந்து என் மனத்தின் கண்ணே நிலைபெற்ற இறைவனே சிறை பெறா நீர் போல் சிந்தை வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே - கரையில்லாத நீர்ப் பெருக்குப் போல என் உள்ளத்தின் கண்ணே அளவு கடந்து பாய்ந்து கொண்டிருக்கின்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் - தலை வனே நீ என்னை நினக்கு உடலாகக் கொண்டனை . இனி உன்னை என் இரக்கேன் - இனியான் உன்னை எதனை இரந்து பெறக்கடவேன் ஒன்றுமில்லை . குறைவிலா நிறைவே குற்றமில்லாத அமுது போன்றவனே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே . மறையும் மறையின் பொருளு மாய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே சிறை பெறாநீர் போல் மனத்தின் கண் அளவு கடந்து பாய்ந்து கொண்டிருக்கின்ற திருப்பெருந்துறையுறை சிவனே நீ என்னை நினக்கு உடலாக கொண்டனை இனி யான் உன்னை எந்தப் பொருளை இரந்து பெறக் கடவேன் ? ஒன்றுமில்லை என்றபடி . இறைவனது திருவருட்செல்வம் கொடுக்குந்தோறும் குறைத லில்லாத நிறைவுடைத்தாகலின் ' ' குறைவிலா நிறைவே என்றார் . 2007 20 ' குறைவிலா நிறைவே குணமில் குணமே தே.ஞான.146-4 குறைவிலா நிறைவே குணக் குன்றே கூத்தனே தே.சுந் . 70 - 6 எனவருவனவும் காண்க தேவரமுது நஞ்சுடன் தோன்றியமையும் உண்ணக் குறைதலுமாகிய குற்றமுடைமையின் அக் குற்றமற்ற இறைவனை ' கோதிலா அமுதே ' என்றார் . ' கோதிலா வமுதே ' தே . சுந் . 70-8 . ) என்பது காண்க . ஈறிலாக் கொழுஞ்சுடர்க்குன்றே என் றது திருமாலும் பிரமனும் அடி முடி தேட அறியப்படாது நின்ற இறைவனது சோதியுருவத்தைக் குறிக்கும் . மறை - மந்திரம் ; அது ஐந்தெழுத்து மகாமந்திரத்தைக் குறிக்கும் .