திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயிற் றிருப்பதிகம் 931 மறிக. நினைவதேல் - நினைக்க முயன்றால். அருள் வெள்ளச் சீர் உறு சிந்தை - திருவருட்பெருக்காற் செம்மை பொருந்திய அடியார் உள் ளம். சோதி - அண்மை விளிபாதலின் இயல்பாயிற்று எனக்கு இங்கு உறவுயார்? அயலவராயுள்ளவர் யார் என்றதனால் உறவினரும் அப லவரும் ஒருவருமிலர் எனப் பொருள்கொள்ளின் மெப்படிபார்க ளாகிய உறவினர்களையும் அவர்களைச் சார்ந்த அன்பர்களையும் விளக்குவதாகும். ஆதலின் உறவினரும் அபலவரும் ஆகிய யாவ ரும் ஒரே தன்மையான அன்புக்குரியவரே எனப் பொருள்கொள் ளுதலே இயைபுடைத்தாகும். இதன் கண், 'யாருற வெனக்கிங் காரய லுள்ளார்' என்றதனால் அனுபவ இலக்கணம் புலப்படும். 394 சோதியாய்த் தோன்றும் உருவமே யருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்குமா னந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே திருப்பெருந் துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய் வந்துநின் னிணையடி தந்தே. 8 ப - ரை சோதியாய் தோன்றும் உருவமே - ஒளியுடைத்தாகத் தோன்றும் திருமேனியையுடையவனே. அருவாம் ஒருவனே - உருவம் இல்லாத ஒப்பற்றவனே, சொல்லுதற்கு அரிய ஆதியே நடுவே அந் தமே - வாக்கினாலே சொல்லுதற்கு முடியாத பெருமையினையுடைய எப்பொருள்களுக்கும் தோற்றம் நிலை இறுதிகளைச் செய்பவனே, பந் தம் அறுக்கும் ஆனந்தமா கடலே -உயிர்களின் பாச பந்தத்தினை நீக்கு கின்ற பேரின்பப் பெருங்கடலே, தீது இலா நன்மை திரு அருள் குன்றே - குற்றமற்ற நன்மையைச் செய்கின்ற திருவருள் மலையே, திருப்பெருந்துறை உறை சிவனே. திருப்பெருந்துறையின் கண்ணே எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, வந்து நின் இணை அடி தந்து - அருட்குருவடிவாய் வலிய எழுந்தருளி வந்து நின் திருவடிகள் இரண் டனையும் எனக்கு அளித்த பின்னர், நீ போவது ஓர் வகை யாது எனக்கு அருளாய் - நீ என்னைக் கைவிட்டுப் போவதற்கு ஒரு முறைமை யாது? அதனை எனக்கு அருளிச் செய்க. சோதியாய்த் தோன்றும் உருவமே, அருவாம் ஒருவனே, சொல்லு தற்கரிய ஆதியே நடுவே அந்தமே, பந்தத்தினை நீக்குகின்ற பேரின்பப் பெருங்கடலே, திருவருட் குன்றே, திருப்பெருந்துறையுறை சிவனே, எழுந்தருளி வந்து நின் திருவடிகள் இரண்டினையும் எனக்கு அளித்த
கோயிற் றிருப்பதிகம் 931 மறிக . நினைவதேல் - நினைக்க முயன்றால் . அருள் வெள்ளச் சீர் உறு சிந்தை - திருவருட்பெருக்காற் செம்மை பொருந்திய அடியார் உள் ளம் . சோதி - அண்மை விளிபாதலின் இயல்பாயிற்று எனக்கு இங்கு உறவுயார் ? அயலவராயுள்ளவர் யார் என்றதனால் உறவினரும் அப லவரும் ஒருவருமிலர் எனப் பொருள்கொள்ளின் மெப்படிபார்க ளாகிய உறவினர்களையும் அவர்களைச் சார்ந்த அன்பர்களையும் விளக்குவதாகும் . ஆதலின் உறவினரும் அபலவரும் ஆகிய யாவ ரும் ஒரே தன்மையான அன்புக்குரியவரே எனப் பொருள்கொள் ளுதலே இயைபுடைத்தாகும் . இதன் கண் ' யாருற வெனக்கிங் காரய லுள்ளார் ' என்றதனால் அனுபவ இலக்கணம் புலப்படும் . 394 சோதியாய்த் தோன்றும் உருவமே யருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்குமா னந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே திருப்பெருந் துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய் வந்துநின் னிணையடி தந்தே . 8 - ரை சோதியாய் தோன்றும் உருவமே - ஒளியுடைத்தாகத் தோன்றும் திருமேனியையுடையவனே . அருவாம் ஒருவனே - உருவம் இல்லாத ஒப்பற்றவனே சொல்லுதற்கு அரிய ஆதியே நடுவே அந் தமே - வாக்கினாலே சொல்லுதற்கு முடியாத பெருமையினையுடைய எப்பொருள்களுக்கும் தோற்றம் நிலை இறுதிகளைச் செய்பவனே பந் தம் அறுக்கும் ஆனந்தமா கடலே -உயிர்களின் பாச பந்தத்தினை நீக்கு கின்ற பேரின்பப் பெருங்கடலே தீது இலா நன்மை திரு அருள் குன்றே - குற்றமற்ற நன்மையைச் செய்கின்ற திருவருள் மலையே திருப்பெருந்துறை உறை சிவனே . திருப்பெருந்துறையின் கண்ணே எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே வந்து நின் இணை அடி தந்து - அருட்குருவடிவாய் வலிய எழுந்தருளி வந்து நின் திருவடிகள் இரண் டனையும் எனக்கு அளித்த பின்னர் நீ போவது ஓர் வகை யாது எனக்கு அருளாய் - நீ என்னைக் கைவிட்டுப் போவதற்கு ஒரு முறைமை யாது ? அதனை எனக்கு அருளிச் செய்க . சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லு தற்கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தத்தினை நீக்குகின்ற பேரின்பப் பெருங்கடலே திருவருட் குன்றே திருப்பெருந்துறையுறை சிவனே எழுந்தருளி வந்து நின் திருவடிகள் இரண்டினையும் எனக்கு அளித்த