திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

23. செத்திலாப்பத்து சிவானந்தம் அளவறுக்கொணாமை திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது செத்திலாப்பத்து என்பது இறைவன் அடியினைப் பிரிந்த அடிகள் பிரிவாற்றாமையால் இறந்துபடாதிருத்தலைக் கூறும் பத்துப் பாடல் களையுடைய பகுதி என்றவாறு. இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது. இதன் உட்பொருள் சிவானந்தம் அளவறுக் கொணாமை எனக் கூறப்பட்டது. சிவானந்தத்தை அளவறுத்துக் கொள்ள முடியாதிருக்கும் தன்மை. இதனைத் திருவாசகச் சிறப்புடை யார் "ஆய பசுபோதம் முற்றுங் கெடவேண்டலே செத்திலாப் பத் தாகும்'" என்பர். இது செத்திலாமையை ஆதாரமாகக் கொண்டு உரைக்கப்பட்டதுபோலும். இது எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத் தம். எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 396 பொய்யனேன் அகநெகப் புகுந்தமு தூறும் புதும லர்க்கழ லிணையடி பிரிந்தும் கைடனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரசே அருட்பெருங் கடலே அத்தனே அயன்ழாற் கறியொண்ணாச் செய்யமே னியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேளிய சிவனே. அயன் ப - ரை: ஐயனே -தலைவனே, அரசே-அரசனே, பெரும் அருள் கடலே - பெருங் கருணைக் கடலே, அத்தனே -தந்தையே, மாற்கு அறி ஒண்ணா செய்ய மேனியனே - பிரமனுக்கும் திருமாலுக் கும் முடி அடி அறியமுடியாத சிவந்த திருமேனியையுடையலனே. திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தரு ளிய சிவபெருமானே, பொய்யனேன் அகம் நெக புகுந்து - பொய்யனா கிய என்னுடைய மனம் நெகிழுப்படி புகுந்து, அமுது ஊறும் புது மலர் கழல் இணை அடி பிரிந்தும் - இன்ப ஞானமாகிய அமுது ஊறு தற்கேதுவாகிய புதிய தாமரை மலர் போன்ற வீரக்கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் யான் பிரிந்திருந்தும், கையனேன் இன்னும் செத்திலேன் - சிறுமையுடைய யான் இறந்திலேன், அந்தோ - ஐயோ!
23. செத்திலாப்பத்து சிவானந்தம் அளவறுக்கொணாமை திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது செத்திலாப்பத்து என்பது இறைவன் அடியினைப் பிரிந்த அடிகள் பிரிவாற்றாமையால் இறந்துபடாதிருத்தலைக் கூறும் பத்துப் பாடல் களையுடைய பகுதி என்றவாறு . இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது . இதன் உட்பொருள் சிவானந்தம் அளவறுக் கொணாமை எனக் கூறப்பட்டது . சிவானந்தத்தை அளவறுத்துக் கொள்ள முடியாதிருக்கும் தன்மை . இதனைத் திருவாசகச் சிறப்புடை யார் ஆய பசுபோதம் முற்றுங் கெடவேண்டலே செத்திலாப் பத் தாகும் ' என்பர் . இது செத்திலாமையை ஆதாரமாகக் கொண்டு உரைக்கப்பட்டதுபோலும் . இது எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத் தம் . எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 396 பொய்யனேன் அகநெகப் புகுந்தமு தூறும் புதும லர்க்கழ லிணையடி பிரிந்தும் கைடனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரசே அருட்பெருங் கடலே அத்தனே அயன்ழாற் கறியொண்ணாச் செய்யமே னியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேளிய சிவனே . அயன் - ரை : ஐயனே -தலைவனே அரசே - அரசனே பெரும் அருள் கடலே - பெருங் கருணைக் கடலே அத்தனே -தந்தையே மாற்கு அறி ஒண்ணா செய்ய மேனியனே - பிரமனுக்கும் திருமாலுக் கும் முடி அடி அறியமுடியாத சிவந்த திருமேனியையுடையலனே . திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தரு ளிய சிவபெருமானே பொய்யனேன் அகம் நெக புகுந்து - பொய்யனா கிய என்னுடைய மனம் நெகிழுப்படி புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை அடி பிரிந்தும் - இன்ப ஞானமாகிய அமுது ஊறு தற்கேதுவாகிய புதிய தாமரை மலர் போன்ற வீரக்கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் யான் பிரிந்திருந்தும் கையனேன் இன்னும் செத்திலேன் - சிறுமையுடைய யான் இறந்திலேன் அந்தோ - ஐயோ !