திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப - ரை: விடை பாகா - இடபவாகனத்தை யுடையவனே, சங் கரா - உயிர்களுக்குச் சுகத்தைச் செய்பவனே, எண் இல் வானவர்க்கு எல்லாம் நிலையனே - அளவில்லாத தேவர்களுக்கு எல்லாம் நிலைக்கள் மானவனே, அலை நீர் விடம் உண்ட நித்தனே - கடலில் எழுந்த விடத் தினையுண்ட அழிவற்றவனே, அடையார் புரம் எரித்த சிலையனே - பகைவருடைய முப்புரங்களை எரித்து நீறாக்கின மலைவில்லையுடைய வனே. திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவனே, புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள் புரிந்தனை - இழிவுடையேனாகிய என்னையும் ஒரு பொருளாக நினைத்து உனது அரிய திருவருளை விரும்பித் தந்தனை, புரிதலும் களித்து தலையினால் நடந்தேன் - அங்ஙனம் அருள் தருதலும் மகிழ்ச் சியினால் செருக்குக் கொண்டு தலைகீழாக நடந்தேன், எனை செத்திட பணியாய் - எனது மகிழ்ச்சிச் செருக்குக் கெட்டொழியும்படி செய் தருள்க. 938 விடைப்பாகா, சங்கரா, வானவர்க்கெல்லாம் நிலைக்களமாயிருப் பவனே, கடல் நஞ்சுண்ட நித்தனே, பகைவரது முப்புரமெரித்த மலை வில்லையுடையவனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவனே, புலையனேனையும் ஒரு பொருளாக நினைந்து உன் திருவருளைப் புரிந் தனை, அருள் புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன் என் மகிழ்ச் சிச் செருக்குக் கெட்டொழியும்படி செய்தருள்க என்பதாம். புலையனேனையும் பொருளென மதித்து என்றது ஒரு பொருளாக மதித்தற்குத் தகுதியற்ற கீழ்மையுடைய என்னையும் ஒரு பொருளாக மதித்து என்றவாறு "பொய்யவ னேனைப்பொருளென ஆண்டு" (நீத் தல். 7) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. தலையினால் நடத்தல் - தலைகீழாக நடத்தல் என்றது இங்கே இறைவன் அருளால் தமக்குக் களிப்பு மிக அதனால் இறைவனை மறந்தமையைக் குறித் தது. 'தனித்துணை நீநிற்க யான்தருக் சித்தலை பால்நடந்த வினைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை யேனுடைய மனத்துணை யேயென்றன் வாழ்முத லேயெனக் கெய்ப்பில் வைப்பே தீனைத்துனை யேனும் பொறேன்றுய ராக்கையின் திண்வலையே” நீத். 39 களிப்புக் காரணமாக இறைவனை மறத்தற்குக் காரணமாகிய செருக்குண்டாதலின் அதனை அடங்கும்படி அருள்செய்ய வேண்டு மெனப் பின்னர் வேண்டுவாராயினர். வானவர்க்கெல்லாம் நிலையன் என்றது தேவர்களுக்கெல்லாம் ஆதாரமாயுள்ளவன். அலைநீர் விட முண்ட நித்தன் என்றது இயல்பாகவே அநாதி நித்தியனாகிய இறை
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை : விடை பாகா - இடபவாகனத்தை யுடையவனே சங் கரா - உயிர்களுக்குச் சுகத்தைச் செய்பவனே எண் இல் வானவர்க்கு எல்லாம் நிலையனே - அளவில்லாத தேவர்களுக்கு எல்லாம் நிலைக்கள் மானவனே அலை நீர் விடம் உண்ட நித்தனே - கடலில் எழுந்த விடத் தினையுண்ட அழிவற்றவனே அடையார் புரம் எரித்த சிலையனே - பகைவருடைய முப்புரங்களை எரித்து நீறாக்கின மலைவில்லையுடைய வனே . திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவனே புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள் புரிந்தனை - இழிவுடையேனாகிய என்னையும் ஒரு பொருளாக நினைத்து உனது அரிய திருவருளை விரும்பித் தந்தனை புரிதலும் களித்து தலையினால் நடந்தேன் - அங்ஙனம் அருள் தருதலும் மகிழ்ச் சியினால் செருக்குக் கொண்டு தலைகீழாக நடந்தேன் எனை செத்திட பணியாய் - எனது மகிழ்ச்சிச் செருக்குக் கெட்டொழியும்படி செய் தருள்க . 938 விடைப்பாகா சங்கரா வானவர்க்கெல்லாம் நிலைக்களமாயிருப் பவனே கடல் நஞ்சுண்ட நித்தனே பகைவரது முப்புரமெரித்த மலை வில்லையுடையவனே திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவனே புலையனேனையும் ஒரு பொருளாக நினைந்து உன் திருவருளைப் புரிந் தனை அருள் புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன் என் மகிழ்ச் சிச் செருக்குக் கெட்டொழியும்படி செய்தருள்க என்பதாம் . புலையனேனையும் பொருளென மதித்து என்றது ஒரு பொருளாக மதித்தற்குத் தகுதியற்ற கீழ்மையுடைய என்னையும் ஒரு பொருளாக மதித்து என்றவாறு பொய்யவ னேனைப்பொருளென ஆண்டு ( நீத் தல் . 7 ) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க . தலையினால் நடத்தல் - தலைகீழாக நடத்தல் என்றது இங்கே இறைவன் அருளால் தமக்குக் களிப்பு மிக அதனால் இறைவனை மறந்தமையைக் குறித் தது . ' தனித்துணை நீநிற்க யான்தருக் சித்தலை பால்நடந்த வினைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை யேனுடைய மனத்துணை யேயென்றன் வாழ்முத லேயெனக் கெய்ப்பில் வைப்பே தீனைத்துனை யேனும் பொறேன்றுய ராக்கையின் திண்வலையே நீத் . 39 களிப்புக் காரணமாக இறைவனை மறத்தற்குக் காரணமாகிய செருக்குண்டாதலின் அதனை அடங்கும்படி அருள்செய்ய வேண்டு மெனப் பின்னர் வேண்டுவாராயினர் . வானவர்க்கெல்லாம் நிலையன் என்றது தேவர்களுக்கெல்லாம் ஆதாரமாயுள்ளவன் . அலைநீர் விட முண்ட நித்தன் என்றது இயல்பாகவே அநாதி நித்தியனாகிய இறை