திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மற்று, ஈரிடத்தும் பிறிது பொருளில் வந்தது. முயல்வார்-முற்று. அயனும் மாலும் அன்பராகி அருந்தவ முயல்வார் எனவும், மற்று எனைப்பலர் அழலுறு மெழுகாம் என்பராய் நினைவார் எனவும் இயைத் துப் பொருள் கொள்க. 940 அழலுறு மெழுகாம் என்பராய் என்றது நெருப்பைச் சேர்ந்த மெழுகு போன்று உருகுகின்ற என்பினையுடையராய் என்றவாறு; என் றது அன்பின் மிகுதியினால் உள்ளமுருகுதல் மாத்திரமன்றி உடலின் திண்பொருளாகிய என்பும் உருகுபவராய் என்றவாறு. "என்பெலாம் உருக நோக்கி" "என்பே யுருக நின்னருள் அளித்து" என வருவன காண்க. (அச்ச.3) (எண்ணப்.3) எனை - எத்துணை . ' எனைப்பகை யுற்றாரு முய்வர்" (குறள் 207) என்புழிப் போல. நிற்க என்றது அயனும் மாலும் எனைப் பலரும் நினது அருளுக்குரியராய் நீன்திருமுன் நிற்கவும் என்றவாறு. எனை என்றது அன்பு. என்புருகுதல் முதலிய இயல்புகள் ஒன்றுமில் லாத என்னை என்றவாறு. என்னியல்பு கூறின் என் சிந்தை வன்பராய் முருடு ஒக்கும்; என் கண் மரக்கண் போன்று இரங்குதலில்லாதது; என் செவி இரும்பினும் வலிது என்றது என் சிந்தை இளகுதலில்லாதது, கண் இரங்கி நீர் வாரும் தன்மையில்லாதது என் செவி நின் புகாழக் கேட்டவில் பரா முகமுடையது என்றவாறு. இவ்வியல்புடைய என்னை எக்காரணத் தால் ஆண்டனை. பராய் - பராய்மரம். இது வன்மை மிக்கதாதலின் 'வன் ராய்' என்றார். முருடு - கட்டை; விற்கு எனினுமமையுர். மரக்கண் - என் கண் பரக்கண்ணை ஒக்கும் எனவுரைக்க. ‘'கண் ணிணையும் மரமாம்" (சத. 21) "மரக்கணேனையும்" (செத். 9) என வருவன காண்க. பராய்த்துறை - திருப்பராய்த்துறை என்னும் தலம். பராங்மரம் தலவிருட்சமாதலின் இப்பெயர் பெற்றது. 'பராய்த்துறை மேவிய பரனே போற்றி" போற்றி, 153) என வருதல் காண்க இதன் கண் ''இங்கு எனை எற்றினுக் காண்டாய்" என்பதனால் சிவானந்தம் அளவறுக்கெ‘ணாமை என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க, 4
திருவாசக ஆராய்ச்சியுரை மற்று ஈரிடத்தும் பிறிது பொருளில் வந்தது . முயல்வார் - முற்று . அயனும் மாலும் அன்பராகி அருந்தவ முயல்வார் எனவும் மற்று எனைப்பலர் அழலுறு மெழுகாம் என்பராய் நினைவார் எனவும் இயைத் துப் பொருள் கொள்க . 940 அழலுறு மெழுகாம் என்பராய் என்றது நெருப்பைச் சேர்ந்த மெழுகு போன்று உருகுகின்ற என்பினையுடையராய் என்றவாறு ; என் றது அன்பின் மிகுதியினால் உள்ளமுருகுதல் மாத்திரமன்றி உடலின் திண்பொருளாகிய என்பும் உருகுபவராய் என்றவாறு . என்பெலாம் உருக நோக்கி என்பே யுருக நின்னருள் அளித்து என வருவன காண்க . ( அச்ச .3 ) ( எண்ணப் .3 ) எனை - எத்துணை . ' எனைப்பகை யுற்றாரு முய்வர் ( குறள் 207 ) என்புழிப் போல . நிற்க என்றது அயனும் மாலும் எனைப் பலரும் நினது அருளுக்குரியராய் நீன்திருமுன் நிற்கவும் என்றவாறு . எனை என்றது அன்பு . என்புருகுதல் முதலிய இயல்புகள் ஒன்றுமில் லாத என்னை என்றவாறு . என்னியல்பு கூறின் என் சிந்தை வன்பராய் முருடு ஒக்கும் ; என் கண் மரக்கண் போன்று இரங்குதலில்லாதது ; என் செவி இரும்பினும் வலிது என்றது என் சிந்தை இளகுதலில்லாதது கண் இரங்கி நீர் வாரும் தன்மையில்லாதது என் செவி நின் புகாழக் கேட்டவில் பரா முகமுடையது என்றவாறு . இவ்வியல்புடைய என்னை எக்காரணத் தால் ஆண்டனை . பராய் - பராய்மரம் . இது வன்மை மிக்கதாதலின் ' வன் ராய் ' என்றார் . முருடு - கட்டை ; விற்கு எனினுமமையுர் . மரக்கண் - என் கண் பரக்கண்ணை ஒக்கும் எனவுரைக்க . ' கண் ணிணையும் மரமாம் ( சத . 21 ) மரக்கணேனையும் ( செத் . 9 ) என வருவன காண்க . பராய்த்துறை - திருப்பராய்த்துறை என்னும் தலம் . பராங்மரம் தலவிருட்சமாதலின் இப்பெயர் பெற்றது . ' பராய்த்துறை மேவிய பரனே போற்றி போற்றி 153 ) என வருதல் காண்க இதன் கண் ' ' இங்கு எனை எற்றினுக் காண்டாய் என்பதனால் சிவானந்தம் அளவறுக்கெ‘ணாமை என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க 4