திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

400 RP செத்திலாப்பத்து ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால் ஐய னேயென்றுன் னருள்வழி பிருப்பேன் நாட்டுத் தேவரு நாடரும் பொருளே நாத னேயுனைப் பிரிவு அருளைக் காட்டித் தேவநின் கழலிணை காட்டிக் காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய் சேட்டைத் தேவர்தந் தேவர்பி ரானே s திருப்பெருந்துறை மேவிய சிவனே. 941 ப - ரை சேட்டை தேவர் தம் தேவர் பிரானே - உலகினைத் தொழிற்படுத்தும் தேவர்களுக்குத் தலைவர்களான காரணேசுரர்க ளுக்கும் தலைவனே, திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, ஆட்டு தேவர் தம் விதி ஒழித்து -என் வினைக்கு ஏற்ப என்னை ஆட்டுகின்ற தேவர்களது கட்டளையினை நீக்கி, அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப் பேன் -அன்பினாலே தலைவனே என்று உன்னைத் தியானித்துக் கொண்டு உன் திருவருள் வழியின் கண் எப்பொழுதும் இருக்கப் பெறுவேன், நாட்டு தேவரும் நாடு அரும் பொருளே - பதநாடுகளிலுள்ள பிரமன் திருமால் முதலிய தேவர்களும் தேடி அறிதற்கரிய பொருளே, நாதனே - முதல்வனே, தேவ - தேவனே, உனை பிரிவுறா அருளை காட்டி - நின்னைப் பிரியாமைக்கேதுவாகிய திருவருளை எனக்குக் காண் பித்தருவி,நின் கழல் இணை காட்டி - நினது வீரக்கழலணிந்த திருவடி கள் இரண்டனையும் காண்பித்தருளி, மாய காயத்தை கழித்து அருள் செய்யாய் - மயக்கத்தைச் செய்கின்ற உடம்பினை நீக்கி அருள் செய் வாயாக. சேட்டைத் தேவர்களுக்கும் தலைவர்களான தேவர்களுக்கும் தலை வனே, திருப்பெருந்துறை மேவிய சிவனே, என் வினைக்கு ஏற்ப என்னை ஆட்டுகின்ற தேவர்தம் கட்டளையினை நீக்கி, ஐயனே என்று உன்னைத் தியானித்து நின் திருவருள் வழியின்கண் நிற்கப் பெறுவேன். நின்னைப் பிரிவுறாமைக்கேதுவாகிய திருவருளை எனக்குக் காண்பித்து, நின் கழல் இணையைக் காட்டி எனது மயக்கத்தைச் செய்கின்ற உடலினை நீக்கி அருள் செய்வாயாக என்பதாம் ஆட்டுத் தேவர் - என் வினைக்கு ஏற்ப இன்ப துன்பங்களை ஊட்டி ஆடச் செய்கின்ற தேவர் என்றது கூற்றுவன் முதலியோரை. விதி - கட்டளை. ஆட்டுத் தேவர் விதி ஒழித்தல்-ஆட்டுத் தேவர்களின் விதியை அகற்றி, அன்பால் அருள்வழி இருப்பேன் என இயையும். நாட்டுத் தேவர் என்றது சத்தியலோகம் வைகுந்தம் முதலிய பத நாடுகளிலுள்ள பிரமன் திருமால் முதலியோரை.
400 RP செத்திலாப்பத்து ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால் ஐய னேயென்றுன் னருள்வழி பிருப்பேன் நாட்டுத் தேவரு நாடரும் பொருளே நாத னேயுனைப் பிரிவு அருளைக் காட்டித் தேவநின் கழலிணை காட்டிக் காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய் சேட்டைத் தேவர்தந் தேவர்பி ரானே s திருப்பெருந்துறை மேவிய சிவனே . 941 - ரை சேட்டை தேவர் தம் தேவர் பிரானே - உலகினைத் தொழிற்படுத்தும் தேவர்களுக்குத் தலைவர்களான காரணேசுரர்க ளுக்கும் தலைவனே திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே ஆட்டு தேவர் தம் விதி ஒழித்து -என் வினைக்கு ஏற்ப என்னை ஆட்டுகின்ற தேவர்களது கட்டளையினை நீக்கி அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப் பேன் -அன்பினாலே தலைவனே என்று உன்னைத் தியானித்துக் கொண்டு உன் திருவருள் வழியின் கண் எப்பொழுதும் இருக்கப் பெறுவேன் நாட்டு தேவரும் நாடு அரும் பொருளே - பதநாடுகளிலுள்ள பிரமன் திருமால் முதலிய தேவர்களும் தேடி அறிதற்கரிய பொருளே நாதனே - முதல்வனே தேவ - தேவனே உனை பிரிவுறா அருளை காட்டி - நின்னைப் பிரியாமைக்கேதுவாகிய திருவருளை எனக்குக் காண் பித்தருவி நின் கழல் இணை காட்டி - நினது வீரக்கழலணிந்த திருவடி கள் இரண்டனையும் காண்பித்தருளி மாய காயத்தை கழித்து அருள் செய்யாய் - மயக்கத்தைச் செய்கின்ற உடம்பினை நீக்கி அருள் செய் வாயாக . சேட்டைத் தேவர்களுக்கும் தலைவர்களான தேவர்களுக்கும் தலை வனே திருப்பெருந்துறை மேவிய சிவனே என் வினைக்கு ஏற்ப என்னை ஆட்டுகின்ற தேவர்தம் கட்டளையினை நீக்கி ஐயனே என்று உன்னைத் தியானித்து நின் திருவருள் வழியின்கண் நிற்கப் பெறுவேன் . நின்னைப் பிரிவுறாமைக்கேதுவாகிய திருவருளை எனக்குக் காண்பித்து நின் கழல் இணையைக் காட்டி எனது மயக்கத்தைச் செய்கின்ற உடலினை நீக்கி அருள் செய்வாயாக என்பதாம் ஆட்டுத் தேவர் - என் வினைக்கு ஏற்ப இன்ப துன்பங்களை ஊட்டி ஆடச் செய்கின்ற தேவர் என்றது கூற்றுவன் முதலியோரை . விதி - கட்டளை . ஆட்டுத் தேவர் விதி ஒழித்தல் - ஆட்டுத் தேவர்களின் விதியை அகற்றி அன்பால் அருள்வழி இருப்பேன் என இயையும் . நாட்டுத் தேவர் என்றது சத்தியலோகம் வைகுந்தம் முதலிய பத நாடுகளிலுள்ள பிரமன் திருமால் முதலியோரை .