திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

946 திருவாசக ஆராய்ச்சியுரை றங்களை மாளச்செய்து, குரைகழல் காட்டி - வீரக்கழல் ஒலிக்கின்ற தின் திருவடிகளைக் காட்டியருளி, குறிக்கொள்க என்று நின்தொண் டரின் கூட்டாய் - அத்திருவடிகளைக் குறிக்கொள்வாயாக அருள் செய்த நீ நின் அணுக்கன் தொண்டர்களுடன் என்னைச் சேர்த் என்னைச் சேர்த்து தருள்வாயாக. என்று திருப்பெருந்துறை மேவிய சிவனே, நின்னை அடைவதற்கு யாது செய்வது என்று வருந்தியிருந்தேன். அடியனேன் இடர்ப்படுவதும் நின் பெருமைக்கு நன்றாமோ? பிரமன் திருமால் இந்திரன் முதலீய தேவர்கள் நின் திருவருளை வேண்டி நிற்க, என்னை ஆட்கொள்ள வலிய வந்தருளிய நீ என் குற்றங்களை ஒழித்து உன் திருவடியைக் காட்டிக், குறிப்பினைக் கைக்கொள்கவென்று அருள் செய்த நீ உன் தொண்டரோடு சேர்த்தருள்வாயாக என்பதாம். அயன் பொரு கடற் கிடத்தோன் புரந்தராதிகள் நிற்க என்றது தேவத்தலைவர்களும் தேவர்களும் நின் அருளை வேண்டி நிற்க என் பது. அருள் வேண்டி நிற்கவும் அவர்க்கருளாமை பக்குவமின்மை பற்றியாகும். கோது-குற்றம். மாட்டி - மாள்வித்து; அழித்து என்றவாறு. குரைகழல் - ஒலிக்கும் கழல், திருவடிக்கு ஆகு பெயர் குரைகழல் காட்டிக் குறிக்கொள்க என்றது இறைவன் அடிகளை ஆட்கொண்டருளி மறைந்தருளு முன் இவ்விடத்தில் பீடம் அமைத்து அதன்மீது திருவடிச் சுவட்டினைச் சேர்த்து மற்ற அடியார்களோடு அதனை வழிபாடு செய்து வருவாயாகவென அருளிச் செய்தமை பைக் குறித்தது. குறிக்கொள்க - "கூறிய வாதார மற்றுங் குறிக் கொண்மின்'" (திருமந் 1709) என வருவன காண்க. நின் தொண்ட ரிற் கூட்டாய் என எதிர்காலத்தாற் கூறுதலின் மாட்டி காட்டி கொள்க என்பதன்பின் 'என்று அருளிச் செய்த நீ' எனச் சில சொற் கள் வருவித்துரைக்கப்பட்டது. அங்ஙன மன்றி, கோதுமாட்டி நின் குரைகழல் காட்டி குறிக்கொள் கென்று நின் தொண்டரிற் கூட்டாய் எனக் கிடந்தவாறே இயைத்துப் பொருள் கூறின், கோது மாட்டுத லும் குரைகழல் காட்டுதலும் குறிக்கொள்கென்று கூறுதலும் இனிச் செய்யுமாறு அடிகள் இறைவன் பால் வேண்டிக் கொள்வனவாகும். அவை முன்னர் அடிகளை ஆட்கொண்ட போதே நிகழ்ந்தமையின் அவற்றை வேண்டிக்கொள்ள வேண்டா; வேண்டிக் கோடல் மரபு மன்று. ஆதலால், என்று என்பதற்கு என்று அருள் செய்த நீ என சில சொற்கள் வருவித்துப் பொருள் உரைக்க வேண்டியது இன்றிய மையாததாயிற்றென்க. கொள்க என்று கொள்கென்று என வியங் கோள் ஈறுகெட்டது. தொண்டர் என்றது அணுக்கன் தொண்டரை. நின் தொண்டரிற் கூட்டாய் - நின் தொண்டரோடு சேர்ப்பாயாக. "அடியேன் உன் அடி யார் நடுவுளிருக்கும் அருளைப் புரியாய்" (கோயில் மூத், 1) என அடி
946 திருவாசக ஆராய்ச்சியுரை றங்களை மாளச்செய்து குரைகழல் காட்டி - வீரக்கழல் ஒலிக்கின்ற தின் திருவடிகளைக் காட்டியருளி குறிக்கொள்க என்று நின்தொண் டரின் கூட்டாய் - அத்திருவடிகளைக் குறிக்கொள்வாயாக அருள் செய்த நீ நின் அணுக்கன் தொண்டர்களுடன் என்னைச் சேர்த் என்னைச் சேர்த்து தருள்வாயாக . என்று திருப்பெருந்துறை மேவிய சிவனே நின்னை அடைவதற்கு யாது செய்வது என்று வருந்தியிருந்தேன் . அடியனேன் இடர்ப்படுவதும் நின் பெருமைக்கு நன்றாமோ ? பிரமன் திருமால் இந்திரன் முதலீய தேவர்கள் நின் திருவருளை வேண்டி நிற்க என்னை ஆட்கொள்ள வலிய வந்தருளிய நீ என் குற்றங்களை ஒழித்து உன் திருவடியைக் காட்டிக் குறிப்பினைக் கைக்கொள்கவென்று அருள் செய்த நீ உன் தொண்டரோடு சேர்த்தருள்வாயாக என்பதாம் . அயன் பொரு கடற் கிடத்தோன் புரந்தராதிகள் நிற்க என்றது தேவத்தலைவர்களும் தேவர்களும் நின் அருளை வேண்டி நிற்க என் பது . அருள் வேண்டி நிற்கவும் அவர்க்கருளாமை பக்குவமின்மை பற்றியாகும் . கோது - குற்றம் . மாட்டி - மாள்வித்து ; அழித்து என்றவாறு . குரைகழல் - ஒலிக்கும் கழல் திருவடிக்கு ஆகு பெயர் குரைகழல் காட்டிக் குறிக்கொள்க என்றது இறைவன் அடிகளை ஆட்கொண்டருளி மறைந்தருளு முன் இவ்விடத்தில் பீடம் அமைத்து அதன்மீது திருவடிச் சுவட்டினைச் சேர்த்து மற்ற அடியார்களோடு அதனை வழிபாடு செய்து வருவாயாகவென அருளிச் செய்தமை பைக் குறித்தது . குறிக்கொள்க - கூறிய வாதார மற்றுங் குறிக் கொண்மின் ' ( திருமந் 1709 ) என வருவன காண்க . நின் தொண்ட ரிற் கூட்டாய் என எதிர்காலத்தாற் கூறுதலின் மாட்டி காட்டி கொள்க என்பதன்பின் ' என்று அருளிச் செய்த நீ ' எனச் சில சொற் கள் வருவித்துரைக்கப்பட்டது . அங்ஙன மன்றி கோதுமாட்டி நின் குரைகழல் காட்டி குறிக்கொள் கென்று நின் தொண்டரிற் கூட்டாய் எனக் கிடந்தவாறே இயைத்துப் பொருள் கூறின் கோது மாட்டுத லும் குரைகழல் காட்டுதலும் குறிக்கொள்கென்று கூறுதலும் இனிச் செய்யுமாறு அடிகள் இறைவன் பால் வேண்டிக் கொள்வனவாகும் . அவை முன்னர் அடிகளை ஆட்கொண்ட போதே நிகழ்ந்தமையின் அவற்றை வேண்டிக்கொள்ள வேண்டா ; வேண்டிக் கோடல் மரபு மன்று . ஆதலால் என்று என்பதற்கு என்று அருள் செய்த நீ என சில சொற்கள் வருவித்துப் பொருள் உரைக்க வேண்டியது இன்றிய மையாததாயிற்றென்க . கொள்க என்று கொள்கென்று என வியங் கோள் ஈறுகெட்டது . தொண்டர் என்றது அணுக்கன் தொண்டரை . நின் தொண்டரிற் கூட்டாய் - நின் தொண்டரோடு சேர்ப்பாயாக . அடியேன் உன் அடி யார் நடுவுளிருக்கும் அருளைப் புரியாய் ( கோயில் மூத் 1 ) என அடி