திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

செத்திலாப்பத்து 947 கள் பிறிதோரிடத்தும் வேண்டுதல் காண்க. அடிகள் அடியார் கூட் டத்தை வேண்டியது வாசனாமல நீக்கத்தினைப் பெற்று நற்கதி அடை தற்கு அடியார் கூட்டம் இன்றியமையாததாதல் பற்றி என்க. பற்றாங்கவை யற்றீர் பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோமெனிற் நெடுவீரோடி வம்மின் தெற்றார் சடை முடிபான் மன்று திருப்பெருந் துறை யிறைசீர் கற்றங்கவன் கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்தே ?> உயிருண். 5 என அடிகள் அருளியவாறுங் காண்க. தொண்டரோடு கூடுதலைப் பெற்றவருக்கு எல்லாப் பேறுகளும் கிடைக்கும் என்பது 'நற்றவத் தொண்டர் கூட்டம் பெற்றவர்க் குண்டோ" (சிதம்பர மும்மணி. 11-27 - 8) எனவும் "அன்பர்பணி செய்யவெனை யாளாக்கி விட்டு விட்டால், இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே (தாயுமான வர் பாடல்) எனவும் வருவனவற்றால் அறிக. தொண்டர் சார்பு உய்த லுக்கு ஏதுவாதல் "தேவ ரகண்ட தெய்வநாயக நிானடித் தொழும்பி னிலைமையின் றேனுநின்,றன்னடித் தொழும்பர் சார்பு பெற்றுங்த லிற்'' (திருவாரூர் நான்மணி. 17- 12 - 4) என வருவனவற்றாலுமறிக. இதன்கண் "கோது மாட்டி குரைகழல் காட்டிக் குறிக்கொள் கென்று கூறியமையால்' சிவானந்தம் அளவறுக்கொணாமை என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 401 ஞால மிந்திரன் நான்முகன் வானவர் நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் கால னாருயிர் கொண்டபூங் கழலாய் கங்கை யாயங்கி தங்கிய கையாய் மாலு மோலமிட் டலறுமம் மலர்க்கே மரக்க ணேனையும் வந்திடப் பணியாய் ரேலு நீலமும் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. ப - ரை. சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே - சேல் மீன்களும் நீலமலர்களும் நிலைபெற்ற வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே, காலன் ஆர் உயிர் கொண்ட பூ கழலாய் - யமனது அரிய உயிரைக் கவர்ந்த தாமரை மலர் போலும் திருவடியையுடையவனே, கங்கையாய். கங்கையைச் சடையிற் கொண்டவனே, அங்கி தங்கிய கையாய் - நெருப்புத் தங்கிய திருக்கரத்தையுடையவனே, ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் நிற்க - உலகத்தில் உயர்ந்தவர்களும் இந்திரனும்
செத்திலாப்பத்து 947 கள் பிறிதோரிடத்தும் வேண்டுதல் காண்க . அடிகள் அடியார் கூட் டத்தை வேண்டியது வாசனாமல நீக்கத்தினைப் பெற்று நற்கதி அடை தற்கு அடியார் கூட்டம் இன்றியமையாததாதல் பற்றி என்க . பற்றாங்கவை யற்றீர் பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோமெனிற் நெடுவீரோடி வம்மின் தெற்றார் சடை முடிபான் மன்று திருப்பெருந் துறை யிறைசீர் கற்றங்கவன் கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்தே ? > உயிருண் . 5 என அடிகள் அருளியவாறுங் காண்க . தொண்டரோடு கூடுதலைப் பெற்றவருக்கு எல்லாப் பேறுகளும் கிடைக்கும் என்பது ' நற்றவத் தொண்டர் கூட்டம் பெற்றவர்க் குண்டோ ( சிதம்பர மும்மணி . 11-27 - 8 ) எனவும் அன்பர்பணி செய்யவெனை யாளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே ( தாயுமான வர் பாடல் ) எனவும் வருவனவற்றால் அறிக . தொண்டர் சார்பு உய்த லுக்கு ஏதுவாதல் தேவ ரகண்ட தெய்வநாயக நிானடித் தொழும்பி னிலைமையின் றேனுநின் றன்னடித் தொழும்பர் சார்பு பெற்றுங்த லிற் ' ' ( திருவாரூர் நான்மணி . 17- 12 - 4 ) என வருவனவற்றாலுமறிக . இதன்கண் கோது மாட்டி குரைகழல் காட்டிக் குறிக்கொள் கென்று கூறியமையால் ' சிவானந்தம் அளவறுக்கொணாமை என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 401 ஞால மிந்திரன் நான்முகன் வானவர் நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் கால னாருயிர் கொண்டபூங் கழலாய் கங்கை யாயங்கி தங்கிய கையாய் மாலு மோலமிட் டலறுமம் மலர்க்கே மரக்க ணேனையும் வந்திடப் பணியாய் ரேலு நீலமும் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே . - ரை . சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே - சேல் மீன்களும் நீலமலர்களும் நிலைபெற்ற வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே காலன் ஆர் உயிர் கொண்ட பூ கழலாய் - யமனது அரிய உயிரைக் கவர்ந்த தாமரை மலர் போலும் திருவடியையுடையவனே கங்கையாய் . கங்கையைச் சடையிற் கொண்டவனே அங்கி தங்கிய கையாய் - நெருப்புத் தங்கிய திருக்கரத்தையுடையவனே ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் நிற்க - உலகத்தில் உயர்ந்தவர்களும் இந்திரனும்