திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

செத்திலாப்பத்து "கணங்க ளார அழல் வலங்கொண்ட கையான் 'வலங் கைத்தலத்துள் அனலுங் கண்டேன்" என அப்பரடிகள் அருளியவற்றாலுமறிக. மாலும் ஓலமிட்டலறுதல் இறைவனது ஒளிவடிவின் அடியினைத் தேடிச் சென்று அடைய முடியாத திருமால் செருக்கற்று உண்மை உணர்ந்து அடைக்கலம் வேண்டி ஓலமிட்டு அத்திருவடியைக் காட்டி யருள்க என்று கதறுதல். மலர்க்கு என்னும் நான்காவது ஏழாவதன் பொருளில் வந்தது. மரக் கண் - புலனற்ற கண் எனினுமாம். நீலம்- கருங் குவளை மலர். 405 இதன் கண் 'எனை நயந்தினிதாண்டாய் அம்மலாக்கே மரக் கணேனையும் வந்திடப் பணியாய்" என்பதனால் சிவானந்தம் அளவறுக் கொணாமை என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 9 (86 949 ஈறுக அளித்து வந்தெனக் காவவென் றருளி 53-1 290-10 அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகென் திருப்பெருந்துறை மேவிய சிவனே வளைக்கை யானொடு மலரவன் அறியா வான வாமலை மாதொரு பாகா களிப்பெ லாமிகக் கலங்கிடு கின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே. u-ரை திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறை யில் எழுந்தருளிய சிவபெருமானே, வளைக்சையானொடு மலரவன் அறியாவானவா- சங்கை ஏந்திய கையையுடைய திருமாலொடு தாமரைமலரிலிருக்கின்ற பிரமனும் அறியமுடியாத தேவனே, மலை மாது ஒருபாகா - இமய மலையரசன் மகளாகிய உமையம்மையை இடப்பாகத்திலுடையவனே, மா கயிலை மலை மேவிய கடலே - பெரிய சயிலாயமலையின் கண் எழுந்தருளியிருக்கின்ற கருணைக்க டலே, ஆ அ என்று வந்து எனக்கு அளித்து அருளி - இரக்கங் கொண்டு குருவடிவாய் எழுந்தருளிவந்து எனக்கு அருள் செய்து, அச்சம் தீர்த்த நின் அருள் பெருங்கடலில் - பாச் பந்தத்தின் பயத்தினை நீக்கிய நின் திருவருட் பெருங்கடலிலே, திளைத் தும் தேக்கியும் பருகியும் உருகேன் - முழுகியும் உள்ளத்தில் நிறைத் தும் குடித்தும் மனம் உருகிற்றிலேன், களிப்பு எலாம் மிக கலங்கி டுகின்றேன் - நிள்னருளைப் பெற்ற மகிழ்ச்சிச் செருக்கு மிகுதலால் வீடுபேறு கிடையா தொழியுமோ என அஞ்சி மனக் கலக்கமடை கின்றேன்.
செத்திலாப்பத்து கணங்க ளார அழல் வலங்கொண்ட கையான் ' வலங் கைத்தலத்துள் அனலுங் கண்டேன் என அப்பரடிகள் அருளியவற்றாலுமறிக . மாலும் ஓலமிட்டலறுதல் இறைவனது ஒளிவடிவின் அடியினைத் தேடிச் சென்று அடைய முடியாத திருமால் செருக்கற்று உண்மை உணர்ந்து அடைக்கலம் வேண்டி ஓலமிட்டு அத்திருவடியைக் காட்டி யருள்க என்று கதறுதல் . மலர்க்கு என்னும் நான்காவது ஏழாவதன் பொருளில் வந்தது . மரக் கண் - புலனற்ற கண் எனினுமாம் . நீலம் கருங் குவளை மலர் . 405 இதன் கண் ' எனை நயந்தினிதாண்டாய் அம்மலாக்கே மரக் கணேனையும் வந்திடப் பணியாய் என்பதனால் சிவானந்தம் அளவறுக் கொணாமை என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 9 ( 86 949 ஈறுக அளித்து வந்தெனக் காவவென் றருளி 53-1 290-10 அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகென் திருப்பெருந்துறை மேவிய சிவனே வளைக்கை யானொடு மலரவன் அறியா வான வாமலை மாதொரு பாகா களிப்பெ லாமிகக் கலங்கிடு கின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே . u- ரை திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறை யில் எழுந்தருளிய சிவபெருமானே வளைக்சையானொடு மலரவன் அறியாவானவா- சங்கை ஏந்திய கையையுடைய திருமாலொடு தாமரைமலரிலிருக்கின்ற பிரமனும் அறியமுடியாத தேவனே மலை மாது ஒருபாகா - இமய மலையரசன் மகளாகிய உமையம்மையை இடப்பாகத்திலுடையவனே மா கயிலை மலை மேவிய கடலே - பெரிய சயிலாயமலையின் கண் எழுந்தருளியிருக்கின்ற கருணைக்க டலே என்று வந்து எனக்கு அளித்து அருளி - இரக்கங் கொண்டு குருவடிவாய் எழுந்தருளிவந்து எனக்கு அருள் செய்து அச்சம் தீர்த்த நின் அருள் பெருங்கடலில் - பாச் பந்தத்தின் பயத்தினை நீக்கிய நின் திருவருட் பெருங்கடலிலே திளைத் தும் தேக்கியும் பருகியும் உருகேன் - முழுகியும் உள்ளத்தில் நிறைத் தும் குடித்தும் மனம் உருகிற்றிலேன் களிப்பு எலாம் மிக கலங்கி டுகின்றேன் - நிள்னருளைப் பெற்ற மகிழ்ச்சிச் செருக்கு மிகுதலால் வீடுபேறு கிடையா தொழியுமோ என அஞ்சி மனக் கலக்கமடை கின்றேன் .