திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 499 ப - ரை ஒள் நித்தில நகையாய் - ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களையுடைய பெண்ணே, இன்னம் புலர்ந்தின்றோ-உனக்கு இன்னமும் விடிந்ததில்லையோ? (எனத் துயிலெழுப்ப வந்த மகளிர் கேட்டலும் எழவேண்டியவள் படுக்கையிற் கிடந்தவாறே ) வண்ணம் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ? - அழகிய கிளி மொழி போலும் மொழியினையுடைய பெண்கள் எல்லாரும் இங்கு வந்த னரோ? ( என்று எதிர் வினாவுதலும் துயிலெழுப்ப வந்தோர்) எண்ணிக்கொடு உள்ள ஆ சொல்லுகோம் - வந்தவர்களை எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டு உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அவ்வளவும் - அத்துணை நேரமளவும், விண்ணுக்கு ஒரு மருந்தை- விண்ணுலகத்தவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, வேத விழுப்பொருளை - வேதத்திற் சொல்லப்படுகின்ற மேலான பெருமை யுள்ளவனை ; கண்ணுக்கு இனியானை - ஆகம அளவையால் அண்ணித் துக் காண்பார் கண்களுக்கு இனிமையாயிருப்பவனை, யாம் பாடிக் கசிந்து உள்ளம் உள் நெக்கு நின்று உருகமாட்டோம் - நாங்கள் புகழ்ந்து பாடிக் குழைந்து மனம் உள்ளே நெகிழ்ந்து நின்று உருக மாட்டாதவர்களாவோம்.ஆதலால், கண்ணைத் துயின்று காலத்தை அவமே போக்காது - நீ கண்ணை மூடிக்கொண்டு உறங்குவதுபோலப் பாசாங்கு செய்து இறைவன் புகழைப் பாடுதற்குரிய காலத்தை வீணே கழியாமல், நீயே வந்து எண்ணிக் குறையில் துயில் - நீயே எழுந்து வந்து கணக்கிட்டுக் குறைந்தால் மீண்டும் துயில்வாயாக; (என்றுசொல்லி ) எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவை யாகிய பார்வதிதேவி, இவள் நிலைமை இது, இவள் எழுந்து எங்க ளுடன் வர அருள் செய்வாயாக ( என வேண்டுதலும் நாணத்துடன் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு என்பதாம். புறப்பட்டனர் ஒண்ணித்தில நகையாய்! உனக்கு இன்னம் விடிந்ததில்லையோ? (எனத் துயிலெழுப்ப வந்த மகளிர் கேட்டலும் எழ வேண்டியவன் படுக்கையிற் கிடந்தவாறே ) வண்ணக் கிளிமொழியையுடைய பெண் கள் எல்லோரும் வந்து விட்டனரோ? (என்று எதிர் வினாவுதலும் துயிலெழுப்ப வந்தோர்) வந்தவர்களை எண்ணிக்கொண்டு உள்ள படியே சொல்லுவோம்; ஆனால் அத்துணை நேரமளவும் விண்ணுல கத்தவர்களுக்கு ஒப்பற்ற மருந்தானவனும் வேத விழுப்பொருளா யுள்ளவனும் கண்ணுக்கினியானுமாகிய இறைவனை நாங்கள் புகழ்ந்து பாடி மனமுருகமாட்டாதவர்களாவோம். கண்ணுறங்கி இறைவன் புகழைப்பாடுதற்குரிய காலத்தை வீணே கழியாமல் நீயே வந்து எண்ணிக்குறையுமாயின் மீண்டும் துயில்வா யாக. என்று சொல்லி, எம்பாவாய், இவள் நிலைமை இது, இவள் ஆதலால்,
திருவெம்பாவை 499 - ரை ஒள் நித்தில நகையாய் - ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களையுடைய பெண்ணே இன்னம் புலர்ந்தின்றோ - உனக்கு இன்னமும் விடிந்ததில்லையோ ? ( எனத் துயிலெழுப்ப வந்த மகளிர் கேட்டலும் எழவேண்டியவள் படுக்கையிற் கிடந்தவாறே ) வண்ணம் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ ? - அழகிய கிளி மொழி போலும் மொழியினையுடைய பெண்கள் எல்லாரும் இங்கு வந்த னரோ ? ( என்று எதிர் வினாவுதலும் துயிலெழுப்ப வந்தோர் ) எண்ணிக்கொடு உள்ள சொல்லுகோம் - வந்தவர்களை எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டு உள்ளபடியே சொல்லுவோம் ; ஆனால் அவ்வளவும் - அத்துணை நேரமளவும் விண்ணுக்கு ஒரு மருந்தை விண்ணுலகத்தவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை வேத விழுப்பொருளை - வேதத்திற் சொல்லப்படுகின்ற மேலான பெருமை யுள்ளவனை ; கண்ணுக்கு இனியானை - ஆகம அளவையால் அண்ணித் துக் காண்பார் கண்களுக்கு இனிமையாயிருப்பவனை யாம் பாடிக் கசிந்து உள்ளம் உள் நெக்கு நின்று உருகமாட்டோம் - நாங்கள் புகழ்ந்து பாடிக் குழைந்து மனம் உள்ளே நெகிழ்ந்து நின்று உருக மாட்டாதவர்களாவோம்.ஆதலால் கண்ணைத் துயின்று காலத்தை அவமே போக்காது - நீ கண்ணை மூடிக்கொண்டு உறங்குவதுபோலப் பாசாங்கு செய்து இறைவன் புகழைப் பாடுதற்குரிய காலத்தை வீணே கழியாமல் நீயே வந்து எண்ணிக் குறையில் துயில் - நீயே எழுந்து வந்து கணக்கிட்டுக் குறைந்தால் மீண்டும் துயில்வாயாக ; ( என்றுசொல்லி ) எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவை யாகிய பார்வதிதேவி இவள் நிலைமை இது இவள் எழுந்து எங்க ளுடன் வர அருள் செய்வாயாக ( என வேண்டுதலும் நாணத்துடன் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு என்பதாம் . புறப்பட்டனர் ஒண்ணித்தில நகையாய் ! உனக்கு இன்னம் விடிந்ததில்லையோ ? ( எனத் துயிலெழுப்ப வந்த மகளிர் கேட்டலும் எழ வேண்டியவன் படுக்கையிற் கிடந்தவாறே ) வண்ணக் கிளிமொழியையுடைய பெண் கள் எல்லோரும் வந்து விட்டனரோ ? ( என்று எதிர் வினாவுதலும் துயிலெழுப்ப வந்தோர் ) வந்தவர்களை எண்ணிக்கொண்டு உள்ள படியே சொல்லுவோம் ; ஆனால் அத்துணை நேரமளவும் விண்ணுல கத்தவர்களுக்கு ஒப்பற்ற மருந்தானவனும் வேத விழுப்பொருளா யுள்ளவனும் கண்ணுக்கினியானுமாகிய இறைவனை நாங்கள் புகழ்ந்து பாடி மனமுருகமாட்டாதவர்களாவோம் . கண்ணுறங்கி இறைவன் புகழைப்பாடுதற்குரிய காலத்தை வீணே கழியாமல் நீயே வந்து எண்ணிக்குறையுமாயின் மீண்டும் துயில்வா யாக . என்று சொல்லி எம்பாவாய் இவள் நிலைமை இது இவள் ஆதலால்