திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

24. அடைக்கலப்பத்து பக்குவ நிண்ணயம் • 406 திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது திருப்பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடிகள் உடனே கதிபெறாமையின் வலிய ஆணவமுதலிய மலங்களின் பயிற்சி வயத்தால் உளவாகும் வாதனைகள் வந்து தம்மைத் தாக்கா வண் ணம் இறைவனது அடைக்கலத்தினை வேண்டி அருளிய பத்துத் திருப் பாடல்களையுடையதாகும். இதன் உட்பொருள் பக்குவ நிண்ணயம் என உள்ளது. பக்குவ நிண்ணயம் என்றது வீடுபேறு அடையும் பக்குவ காலத்தை நிர்ணயித்தல் எனப் பொருள்படும். நிர்ணயம் என்பது நிண்ணயம் என மருவியது. வித்து உரிய காலத்து உரிய நிலையையடை யும்போது முளையுடையதாவது போல பக்குவ காலத்து முத்தி கிடைக் குமென்பது. இப்பதிகத்தின் பாடல்கள் பல வகைப் பாடல்களும் அமைந்தமையின் கலவைப்பாட்டு எனப்பட்டன. கலவைப்பாட்டு திருச்சிற்றம்பலம் செழுக்க மலத்திர எனநின் சேவடி சேர்ந்தமைந்த பழுத்த மனத்தடி யருடன் போயினர்யான் பாவியேன் புழுக்க ணுடைப்டன் குரம்டைப்பொல் லாக்கல்வி ஞானமீலா அழுக்கு மனத்தடி பேன்உடை யாயுன் அடைக்கலமே. ப- ரை உடையாய் - என்னை ஆளாகவுடையவனே, செழுகம லம் திரள் அன்ன நின் சேவடி சேர்ந்து அமைந்த - செழுமையாகிய தாமரைமலர்த் தொகுதி போன்ற நின் செவ்விய திருவடிகளை அணு கித் தொண்டு செய்து தகுதி பெற்ற, பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் அன்பு கனிந்த மனத்தையுடைய மெய்யடியார்கள் உடனே கதியடையுமாறு சென்றனர், யான் பாவியேன் - யான் அவர் கள் போலக் சதி பெறும் பேறில்லாத பாவமுடையேனாயினேன், புழுக் கள் நுடை புன் குரம்பை - புழுக்கள் நெளிகின்ற இழிவான உடம்பை யுடைய, கல்வி ஞானம் இலா பொல்லா அழுக்கு மனத்து அடியேன் - வீடு பேற்றுக் கல்வியின் ஞானமில்லாத பொல்லாங்கினையுடைய வாசனாமல் அழுக்கு அமைந்த மனத்தையுடைய அடியேன், உன் அடைக்கலம் - உன் பாதுகாவலை வேண்டுகின்றேன்.
24. அடைக்கலப்பத்து பக்குவ நிண்ணயம் 406 திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது திருப்பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடிகள் உடனே கதிபெறாமையின் வலிய ஆணவமுதலிய மலங்களின் பயிற்சி வயத்தால் உளவாகும் வாதனைகள் வந்து தம்மைத் தாக்கா வண் ணம் இறைவனது அடைக்கலத்தினை வேண்டி அருளிய பத்துத் திருப் பாடல்களையுடையதாகும் . இதன் உட்பொருள் பக்குவ நிண்ணயம் என உள்ளது . பக்குவ நிண்ணயம் என்றது வீடுபேறு அடையும் பக்குவ காலத்தை நிர்ணயித்தல் எனப் பொருள்படும் . நிர்ணயம் என்பது நிண்ணயம் என மருவியது . வித்து உரிய காலத்து உரிய நிலையையடை யும்போது முளையுடையதாவது போல பக்குவ காலத்து முத்தி கிடைக் குமென்பது . இப்பதிகத்தின் பாடல்கள் பல வகைப் பாடல்களும் அமைந்தமையின் கலவைப்பாட்டு எனப்பட்டன . கலவைப்பாட்டு திருச்சிற்றம்பலம் செழுக்க மலத்திர எனநின் சேவடி சேர்ந்தமைந்த பழுத்த மனத்தடி யருடன் போயினர்யான் பாவியேன் புழுக்க ணுடைப்டன் குரம்டைப்பொல் லாக்கல்வி ஞானமீலா அழுக்கு மனத்தடி பேன்உடை யாயுன் அடைக்கலமே . ப- ரை உடையாய் - என்னை ஆளாகவுடையவனே செழுகம லம் திரள் அன்ன நின் சேவடி சேர்ந்து அமைந்த - செழுமையாகிய தாமரைமலர்த் தொகுதி போன்ற நின் செவ்விய திருவடிகளை அணு கித் தொண்டு செய்து தகுதி பெற்ற பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் அன்பு கனிந்த மனத்தையுடைய மெய்யடியார்கள் உடனே கதியடையுமாறு சென்றனர் யான் பாவியேன் - யான் அவர் கள் போலக் சதி பெறும் பேறில்லாத பாவமுடையேனாயினேன் புழுக் கள் நுடை புன் குரம்பை - புழுக்கள் நெளிகின்ற இழிவான உடம்பை யுடைய கல்வி ஞானம் இலா பொல்லா அழுக்கு மனத்து அடியேன் - வீடு பேற்றுக் கல்வியின் ஞானமில்லாத பொல்லாங்கினையுடைய வாசனாமல் அழுக்கு அமைந்த மனத்தையுடைய அடியேன் உன் அடைக்கலம் - உன் பாதுகாவலை வேண்டுகின்றேன் .