திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வெறுக்கத்தக்க தீச்செயல்களைச் செய்கின்ற என் சிறுமையை நின் பெருந்தன்மையால் பொறுப்பவனே, அராப்பூண்பவனே, கங்கை யைச் சடையின்கண் அடக்கினவனே, நின் திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே, என்னை ஆளாக உடையவனே, அடி யேன் உன் அடைக்கலமாதலாற் பாதுகாத்தருள்க என்பதாம். 954 அடிகள் தம்மைச் சிறுமையுடையராகக் கூறினமையின் ''வெறுப் பனவே செய்யும் என்' என்றார். சிறுமை - இழிந்த இயல்பு. சிறுமை யைப் பெருமையினாற் பொறுப்பவன் என்க. "சிறியேன் பிழை பொறுக்கும் கோனே" (சத. 85) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறு தல் காண்க. இறைவன் அராப் பூணுதலை, ''பூண்பதுவும் பொங்கரவம்'' (சாழல் 1) "பொறிவிரவு சதநாகம்..... பூண்டவன் காண்" (நாவு. 289-7) "பூணரவு" (ஞான. 336-3) 'கொந்தணைந்த பொன்கண் டாற் பூணாதே கோள்நாகம் பூண்டானே" (11-ம் திரு: திரு விரட்டை 4) கொண்டு தானணியுங் கலம் பணிகொண்டு'" (கோவை. 54) என வருவனவற்றிலுங் காண்க. செறுத்தல் - அடக்குதல். செறுத்த - அடக்கிய (புற. 53-11 உரை.) சடைச் செறுப்பவன் - சடையின் கண் அடக்குபவன். ''அலை வளர் தண்புனல் வார்சடை மேலடக்கி’ (ஞான. 359-3) எனவும் வருதல் காண்க, கங்கை சடைச் செறுப்பவன் என்பதனை, 'அணிநீர்க்கை செறுத்தான் காண்" ''கங்கை செஞ்சடை மேல் செறுத்தான்" என அப்பரடிகளும் அருளியமையாலுமறிக. 2015) 277-11 84-5 பிறவியை வேர் அறுப்பவனே என்ற ஏகதேச உருவகத்தால் திருவ ருளை வாளாகவும், பிறவியை மாமரமாகவும் விரித்துரைக்கப்பெற்றது. "மாமரம் வேர் பறித்தது" என வருதல் காண்க. வேரறுத்தல் - நிர் மூலமாக்குதல். ''அவர் வேரறுப்பென் வெருவன்மின் என்றான்'' (கம்ப. அகத்தியப். 22). இனி, பிறவியை வேர் அறுப்பவனே என்ப தற்கு பிறவியாகிய மரத்தின் மூலவேரினை அறுப்பவனே எனினுமாம். 'பிறவி வேரறுத்தென் குடிமுழுதாண்ட" (பிடித். 6) "என் பிறவிக் கருவேரறுத்த" (தெள். 2) எனவுங் காண்க. பிறவியை வேரோடும் களைந்து எனினுமாம். "பிறவியை வேரொடுங் களைந்து" நீத், விண். 19) என வருதல் காண்க. இதன் கண் "என் சிறுமையை நின் பெருமையினாற் பொறுப்ப வனே, என் பிறவியை வேரறுப்பவனே உடையாய்" என்பவற்றால் பக் இவ றீண்ணம் என்னும் பதிசப்பொருள் புலப்பட்டவாறு காண்க. 2
திருவாசக ஆராய்ச்சியுரை வெறுக்கத்தக்க தீச்செயல்களைச் செய்கின்ற என் சிறுமையை நின் பெருந்தன்மையால் பொறுப்பவனே அராப்பூண்பவனே கங்கை யைச் சடையின்கண் அடக்கினவனே நின் திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே என்னை ஆளாக உடையவனே அடி யேன் உன் அடைக்கலமாதலாற் பாதுகாத்தருள்க என்பதாம் . 954 அடிகள் தம்மைச் சிறுமையுடையராகக் கூறினமையின் ' ' வெறுப் பனவே செய்யும் என் ' என்றார் . சிறுமை - இழிந்த இயல்பு . சிறுமை யைப் பெருமையினாற் பொறுப்பவன் என்க . சிறியேன் பிழை பொறுக்கும் கோனே ( சத . 85 ) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறு தல் காண்க . இறைவன் அராப் பூணுதலை ' ' பூண்பதுவும் பொங்கரவம் ' ' ( சாழல் 1 ) பொறிவிரவு சதநாகம் ..... பூண்டவன் காண் ( நாவு . 289-7 ) பூணரவு ( ஞான . 336-3 ) ' கொந்தணைந்த பொன்கண் டாற் பூணாதே கோள்நாகம் பூண்டானே ( 11 - ம் திரு : திரு விரட்டை 4 ) கொண்டு தானணியுங் கலம் பணிகொண்டு ' ( கோவை . 54 ) என வருவனவற்றிலுங் காண்க . செறுத்தல் - அடக்குதல் . செறுத்த - அடக்கிய ( புற . 53-11 உரை . ) சடைச் செறுப்பவன் - சடையின் கண் அடக்குபவன் . ' ' அலை வளர் தண்புனல் வார்சடை மேலடக்கி ( ஞான . 359-3 ) எனவும் வருதல் காண்க கங்கை சடைச் செறுப்பவன் என்பதனை ' அணிநீர்க்கை செறுத்தான் காண் ' ' கங்கை செஞ்சடை மேல் செறுத்தான் என அப்பரடிகளும் அருளியமையாலுமறிக . 2015 ) 277-11 84-5 பிறவியை வேர் அறுப்பவனே என்ற ஏகதேச உருவகத்தால் திருவ ருளை வாளாகவும் பிறவியை மாமரமாகவும் விரித்துரைக்கப்பெற்றது . மாமரம் வேர் பறித்தது என வருதல் காண்க . வேரறுத்தல் - நிர் மூலமாக்குதல் . ' ' அவர் வேரறுப்பென் வெருவன்மின் என்றான் ' ' ( கம்ப . அகத்தியப் . 22 ) . இனி பிறவியை வேர் அறுப்பவனே என்ப தற்கு பிறவியாகிய மரத்தின் மூலவேரினை அறுப்பவனே எனினுமாம் . ' பிறவி வேரறுத்தென் குடிமுழுதாண்ட ( பிடித் . 6 ) என் பிறவிக் கருவேரறுத்த ( தெள் . 2 ) எனவுங் காண்க . பிறவியை வேரோடும் களைந்து எனினுமாம் . பிறவியை வேரொடுங் களைந்து நீத் விண் . 19 ) என வருதல் காண்க . இதன் கண் என் சிறுமையை நின் பெருமையினாற் பொறுப்ப வனே என் பிறவியை வேரறுப்பவனே உடையாய் என்பவற்றால் பக் இவ றீண்ணம் என்னும் பதிசப்பொருள் புலப்பட்டவாறு காண்க . 2