திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "அன்பு நின்கழற்கணே, புணர்ப்பதாக அங்கணாள்" "தென்னன் பெருந்துறையான் அங்கணன்" அங்கணன் எங்கள் அமரர் பெருமான்" "குருந்த மேவிய சீர் அங்கணா" என அடிகள் அருளியவாற்றானுங் காண்க. 962 சதகம் 71 அம்மானை 1 திருவார்.10 அருட், 3 என் கணிலே யமு இதன் கண், "புரளாமற் புகுந்தருளி தூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும் அங்கண னேயுடையாய் அடி யேன் உன் அடைக்கலமே" என்பதனால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 7 413 மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன் பாவிடை யாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம் ஆகெடு வேனுடை யாய்அடி யேனுன் அடைக்கலமே. ப - ரை. மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா -மாம் பிஞ்சின் பிளவு போன்ற கண்களையுடைய உமைபாகனே, நின்மலர் அடிக்கே கூவிடுவாய் - நினது தாமரை மலர்போன்ற திருவடிகளுக்கே என்னை அழைத்துக்கொள்வாயோ, கும்பிக்கே இடுவாய் - அன்றிக் கும்பி பாகம் என்னும் நரகத்திற்கே செலுத்துவாயோ, நின் குறிப்பு அறி யேன் - நினது திருவுள்ளக் கருத்து அறிகின்றிலேன், பா இடை ஆடு குழல் போல் - நெசவு நூற்பரப்பிலே குறுக்கே அங்கும் இங்கும் ஓடு கின்ற உள்ளே நூலையுடைய குழலைப் போல, உள்ளம் கரந்து பரந்தது- என் உள்ளம் உலகப்பற்றிலே, மறைந்து விரிந்து திரிவதாயிற்று,ஆ கெடுவேன் - நின்பால் என் உள்ளம் ஒருவழிப்பட்டு நில்லாமையால் அந்தோ கெட்டொழிவேன், உடையாய் - என்னை ஆளாக உடைய வனே, அடியேன் உன் அடைக்கலம் - அடியேன் உன் அடைக்கலம் கெட்டொழியாமற் பாதுகாத்தருள்க. உமையம்மைபாகனே, என்னை உன் திருவடிக்கே அழைத்துக் கொள்வாயோ; அன்றி நரகத்திற்கே செலுத்துவாயோ நின் திருவுள் ளக் குறிப்பை அறிகின்றிலேன் நூற்பாவினிடத்து ஆடுகின்ற குழல் போல என் உள்ளம் அலையாறின்றது நின்பால் என் உள்ளம் ஒருவழிப் பட்டு நில்லாமையின் ஆ கெடுவேன், என்னை ஆளாகவுடையவனே, அடியேன் உன் அடைக்கலம். கெட்டொழியாமற் பாதுகாத்தருள்வா யாக என்பதாம். வடு - பிஞ்சு. வகிர் - பிளவு.மாம்பிஞ்சின் பிளவு மாதர் கண்க ளுக்கு வடிவு உவமையாகும் ஆதலின் ''மாவடு வகிரன்ன கண்ணி பங்கா" என்றார்.
திருவாசக ஆராய்ச்சியுரை அன்பு நின்கழற்கணே புணர்ப்பதாக அங்கணாள் தென்னன் பெருந்துறையான் அங்கணன் அங்கணன் எங்கள் அமரர் பெருமான் குருந்த மேவிய சீர் அங்கணா என அடிகள் அருளியவாற்றானுங் காண்க . 962 சதகம் 71 அம்மானை 1 திருவார் .10 அருட் 3 என் கணிலே யமு இதன் கண் புரளாமற் புகுந்தருளி தூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும் அங்கண னேயுடையாய் அடி யேன் உன் அடைக்கலமே என்பதனால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 7 413 மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன் பாவிடை யாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம் ஆகெடு வேனுடை யாய்அடி யேனுன் அடைக்கலமே . - ரை . மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா -மாம் பிஞ்சின் பிளவு போன்ற கண்களையுடைய உமைபாகனே நின்மலர் அடிக்கே கூவிடுவாய் - நினது தாமரை மலர்போன்ற திருவடிகளுக்கே என்னை அழைத்துக்கொள்வாயோ கும்பிக்கே இடுவாய் - அன்றிக் கும்பி பாகம் என்னும் நரகத்திற்கே செலுத்துவாயோ நின் குறிப்பு அறி யேன் - நினது திருவுள்ளக் கருத்து அறிகின்றிலேன் பா இடை ஆடு குழல் போல் - நெசவு நூற்பரப்பிலே குறுக்கே அங்கும் இங்கும் ஓடு கின்ற உள்ளே நூலையுடைய குழலைப் போல உள்ளம் கரந்து பரந்தது என் உள்ளம் உலகப்பற்றிலே மறைந்து விரிந்து திரிவதாயிற்று கெடுவேன் - நின்பால் என் உள்ளம் ஒருவழிப்பட்டு நில்லாமையால் அந்தோ கெட்டொழிவேன் உடையாய் - என்னை ஆளாக உடைய வனே அடியேன் உன் அடைக்கலம் - அடியேன் உன் அடைக்கலம் கெட்டொழியாமற் பாதுகாத்தருள்க . உமையம்மைபாகனே என்னை உன் திருவடிக்கே அழைத்துக் கொள்வாயோ ; அன்றி நரகத்திற்கே செலுத்துவாயோ நின் திருவுள் ளக் குறிப்பை அறிகின்றிலேன் நூற்பாவினிடத்து ஆடுகின்ற குழல் போல என் உள்ளம் அலையாறின்றது நின்பால் என் உள்ளம் ஒருவழிப் பட்டு நில்லாமையின் கெடுவேன் என்னை ஆளாகவுடையவனே அடியேன் உன் அடைக்கலம் . கெட்டொழியாமற் பாதுகாத்தருள்வா யாக என்பதாம் . வடு - பிஞ்சு . வகிர் - பிளவு.மாம்பிஞ்சின் பிளவு மாதர் கண்க ளுக்கு வடிவு உவமையாகும் ஆதலின் ' ' மாவடு வகிரன்ன கண்ணி பங்கா என்றார் .