திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அடைக்கலப்பத்து உடையானே! நின்னை அடையும் பொருட்டு உன் அருளாரமு தத்தை விழுங்காநின்றேன்; என் நல்ல விதி இன்மையால் வினையேன் விக்கினேன்; எனக்குத் தண்ணீர் பருகத் தந்து உய்யக்கொண்டருள வேண்டும்; அழுங்குகின்றேன்; அடியேன் உன் அடைக்கலம் பாது காத்தருள்க என்பதாம். வழங்குகின்றாய்க்கு விழுங்குகின்றேன் எனக் கூட்டி அருளாரமு தத்தை வழங்குகின்ற நின்னை அடைதற்பொருட்டு அதனை விழுங்குகின் றேன் எனவுரைக்க. இறைவன் ஏற்பார் மாட்டு ஒன்றுங்கருதாது கொடுத்தலின் 'வழங்குகின்றாய்க்கு" என்றார் (கோவை 127 உரை). அருள் அமுதம் ஆர் அமுதம் எனத் தனித்தனி இயையும். அருள் அமுதம் - அருளாகிய அமுதம். ''அருளமுதம் புரியாயேல்" (சத 3) நின்னரு ளாரமு தூட்ட" (நீத், 5 "புயங்கன் அருளமுதம் ஆரப் பருகி" (யாத். 9) எனப் பிறாண்டும் அருளை அமுதம் என்றல் காண்க. விக்குதல் - தொண்டையில் தடைப்படுதல். விக்கினேன் என்றது அருளை முழுவதும் உட்கொள்ளமாட்டாமையை உணர்த்தியது.தழங் கும் தண்ணீர், தேனன்ன தண்ணீர் என இயையும் தழங்குதல் - ஒலித்தல். அருளாரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்கினமையால் விக் கினமையின் அவ்விக்கலை நீக்குதற்கு நின்னிடத்துச் செய்யும் அன்பா கிய தண்ணீரினைப் பருகத் தந்து அவ்விக்கலை நீக்கி உய்யக் கொள்ளு மாறு வேண்டுவாராயினர். அழுங்குதல் - விக்கல் நீங்காமையால் வருந்துதல். 4 965 ‘‘ இதன் கண் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன், என் விதி இன்மையினால் விக்கினேன், தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய் அடியேன் உன் அடைக்கலமே" என்றமையால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 10
அடைக்கலப்பத்து உடையானே ! நின்னை அடையும் பொருட்டு உன் அருளாரமு தத்தை விழுங்காநின்றேன் ; என் நல்ல விதி இன்மையால் வினையேன் விக்கினேன் ; எனக்குத் தண்ணீர் பருகத் தந்து உய்யக்கொண்டருள வேண்டும் ; அழுங்குகின்றேன் ; அடியேன் உன் அடைக்கலம் பாது காத்தருள்க என்பதாம் . வழங்குகின்றாய்க்கு விழுங்குகின்றேன் எனக் கூட்டி அருளாரமு தத்தை வழங்குகின்ற நின்னை அடைதற்பொருட்டு அதனை விழுங்குகின் றேன் எனவுரைக்க . இறைவன் ஏற்பார் மாட்டு ஒன்றுங்கருதாது கொடுத்தலின் ' வழங்குகின்றாய்க்கு என்றார் ( கோவை 127 உரை ) . அருள் அமுதம் ஆர் அமுதம் எனத் தனித்தனி இயையும் . அருள் அமுதம் - அருளாகிய அமுதம் . ' ' அருளமுதம் புரியாயேல் ( சத 3 ) நின்னரு ளாரமு தூட்ட ( நீத் 5 புயங்கன் அருளமுதம் ஆரப் பருகி ( யாத் . 9 ) எனப் பிறாண்டும் அருளை அமுதம் என்றல் காண்க . விக்குதல் - தொண்டையில் தடைப்படுதல் . விக்கினேன் என்றது அருளை முழுவதும் உட்கொள்ளமாட்டாமையை உணர்த்தியது.தழங் கும் தண்ணீர் தேனன்ன தண்ணீர் என இயையும் தழங்குதல் - ஒலித்தல் . அருளாரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்கினமையால் விக் கினமையின் அவ்விக்கலை நீக்குதற்கு நின்னிடத்துச் செய்யும் அன்பா கிய தண்ணீரினைப் பருகத் தந்து அவ்விக்கலை நீக்கி உய்யக் கொள்ளு மாறு வேண்டுவாராயினர் . அழுங்குதல் - விக்கல் நீங்காமையால் வருந்துதல் . 4 965 இதன் கண் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் என் விதி இன்மையினால் விக்கினேன் தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய் அடியேன் உன் அடைக்கலமே என்றமையால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 10