திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

970 திருவாசக ஆராய்ச்சியுரை வார்ந்து, மொய்த்து என்னும் செய்தெனெச்சங்களை வடியப்பெற்று, மொய்க்கப்பெற்று எனப் பொருள் கொண்டு, திரியும் என்னும் முதல் வினையொடு முடிக்க. குருமணி -ஆசாரியரத்தினம். பரமாசாரியன் என்றபடி. தேவா தேவர்க்கரியானே" என்றது 'வானவன் காண் வானவர்க்கு மேலானான் காண்" என்பதை நினைவூட்டும். சிறிது என் முக நோக்கி என்றது நினது சிறிய கடைக்கண் பார்வை எனக்கும் பெரும்பேறு அருளும் என்ற கருத்துப் பற்றி.ஆவா என்ன என்பன இரக்கக் குறிப்பு ஆ ஆ என்று இரங்கியருள என்றவாறு. இதன் சண் "சிறு குடிலிது சிதையக் கூவாய் சிறிது என் முக நோக்கி ஆவாவென்ன ஆசைப்பட்டேன்" என்பவற்றால் ஆத்தும இலக் கணம் புலப்படும். 3 419 மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தமெம் பெருமானே உடைந்துநைந் துருகி யுன்னொளி நோக்கி உன்றிரு மலர்ப்பாதம் அடைந்துநின் றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ப - ரை. எம்பெருமானே - எங்கள் தலைவனே, எலும்பு மிடைந்து - எலும்புகள் நெருங்கப்பெற்று, ஊத்தை மிக்கு -ஊத்தை மிகப்பெற்று, அழுக்கு ஊறல் - ஒன்பது வாயில்களிலும் அழுக்கு ஊறு தலையுடைய, வீறு இலி நடை கூடம் - பெருமை இல்லாத நடமாடும் வீடாகிய இவ்வுடம்பு, தொடர்ந்து எனை நலிய துயர் உறுகின்றேன்- இடைவிடாமல் என்னை வருத்த அதனால் துன்பமடைகின்றேன், சோத்தம் - இழிவுடைய எனது வணக்கம் நினக்குரியது, உடைந்து நைந்து உருகி - மனம் அன்பினால் உடைந்து நெகிழ்ந்து உருகி, உன் ஒளி நோக்கி - உன்னை உணரும் அருள்ஞானத்தைத் தரிசித்து, உன் திருமலர் பாதம் அடைந்து நின்றிடுவான் -உனது தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகளை அடைந்து நிலைபெறும் பொருட்டு. ஆசைப்பட்டேன் - ஆசைப்படுகின்றேன். எம்பெருமானே, நடைக்கூடமாகிய இவ்வுடம்பு தொடர்ந்து என்னை வருத்த அதனால் துன்பமடைகின்றேன். இழிவுடைய எனது வணக்கம் நினக்குரியது; அன்பினால் மனமுடைந்து நெகிழ்ந்து உருகி உன் திருமலர்ப்பாதம் அடைந்து நிலைபெறும் பொருட்டு ஆசைப்படு கின்றேன் என்பதாம்.
970 திருவாசக ஆராய்ச்சியுரை வார்ந்து மொய்த்து என்னும் செய்தெனெச்சங்களை வடியப்பெற்று மொய்க்கப்பெற்று எனப் பொருள் கொண்டு திரியும் என்னும் முதல் வினையொடு முடிக்க . குருமணி -ஆசாரியரத்தினம் . பரமாசாரியன் என்றபடி . தேவா தேவர்க்கரியானே என்றது ' வானவன் காண் வானவர்க்கு மேலானான் காண் என்பதை நினைவூட்டும் . சிறிது என் முக நோக்கி என்றது நினது சிறிய கடைக்கண் பார்வை எனக்கும் பெரும்பேறு அருளும் என்ற கருத்துப் பற்றி.ஆவா என்ன என்பன இரக்கக் குறிப்பு என்று இரங்கியருள என்றவாறு . இதன் சண் சிறு குடிலிது சிதையக் கூவாய் சிறிது என் முக நோக்கி ஆவாவென்ன ஆசைப்பட்டேன் என்பவற்றால் ஆத்தும இலக் கணம் புலப்படும் . 3 419 மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தமெம் பெருமானே உடைந்துநைந் துருகி யுன்னொளி நோக்கி உன்றிரு மலர்ப்பாதம் அடைந்துநின் றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே . - ரை . எம்பெருமானே - எங்கள் தலைவனே எலும்பு மிடைந்து - எலும்புகள் நெருங்கப்பெற்று ஊத்தை மிக்கு -ஊத்தை மிகப்பெற்று அழுக்கு ஊறல் - ஒன்பது வாயில்களிலும் அழுக்கு ஊறு தலையுடைய வீறு இலி நடை கூடம் - பெருமை இல்லாத நடமாடும் வீடாகிய இவ்வுடம்பு தொடர்ந்து எனை நலிய துயர் உறுகின்றேன் இடைவிடாமல் என்னை வருத்த அதனால் துன்பமடைகின்றேன் சோத்தம் - இழிவுடைய எனது வணக்கம் நினக்குரியது உடைந்து நைந்து உருகி - மனம் அன்பினால் உடைந்து நெகிழ்ந்து உருகி உன் ஒளி நோக்கி - உன்னை உணரும் அருள்ஞானத்தைத் தரிசித்து உன் திருமலர் பாதம் அடைந்து நின்றிடுவான் -உனது தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகளை அடைந்து நிலைபெறும் பொருட்டு . ஆசைப்பட்டேன் - ஆசைப்படுகின்றேன் . எம்பெருமானே நடைக்கூடமாகிய இவ்வுடம்பு தொடர்ந்து என்னை வருத்த அதனால் துன்பமடைகின்றேன் . இழிவுடைய எனது வணக்கம் நினக்குரியது ; அன்பினால் மனமுடைந்து நெகிழ்ந்து உருகி உன் திருமலர்ப்பாதம் அடைந்து நிலைபெறும் பொருட்டு ஆசைப்படு கின்றேன் என்பதாம் .