திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ஆசைப்பட்டேன் - இரங்கி அருள் செய்யத்தக்க தன்மையுடையேன் என்று நீ என்னைக் கருதி அருள் செய்ய விரும்புகின்றேன். 972 விடையாய், பொடியாடீ, எளிதாக வலிய வந்து ஆண்டு கொண்ட என் அமுது போன்றவனேயோ, அம்மானே, அடியேனுடைய உடம் பின் கண் புளியம்பழத்தைப் போலப் பற்றற்று இருந்தேன்; அப்படி இருந்தும் அளியேன் என்று நீ என்னைக் கருதி அருள் செய்ய விரும்பு கின்றேன் என்பதாம். எளிதாக வந்து என்பது எளிவந்து என ஈறு கெட்டது. அமு தேயோ என்பதில் ஓகாரம் ஒலம் என இரங்கி அழைக்கும் அழைப்புப் பொருளில் வந்தது. அளி புண்ணகத்து என்றது பதங் கெட்டு அளிந்த புண் போல உடம்பின் உட்புறம் இரத்தம் நிணம் முதலியன உடைத் தாதல் பற்றியாகும். மூடி என்பதற்கு மூடி அமைக்கப்பட்ட என ஒரு சொல் வருவித்து யாக்கை என்பதனோடு முடிக்க. யாக்கைக் கண் என ஏழாவது விரிக்க. புளியம்பழம் ஒத்து இருந்தேன் என்றது காயாகிய பருவத்து ஓடும் பழமும் ஒன்றியிருப்பினும் புளியம்பழம் நன்றாகப் பழுத்த பரு வத்து ஓடு வேறாகவும் பழம் வேறாகவும் பிரிந்திருத்தல் போல நின் னருள் பெறு முன்னர் அடியேனுடைய உடம்பின்கண் பற்றுடையனா யிருந்த யான் அதனைப் பெற்ற பின்னர் பற்றற்றிருக்கின்றேன் என்ற வாறு. இருந்தும் அளியேன் என்ன ஆசைப்பட்டேன் எனக் கூட்டி. அங்ங னம் பற்றற்று இருந்தாலும், உடம்பினுள் இருத்தல் எனக்குத் துன்பம் தருகின்றதாதலின் இரங்கியருள் செய்யத்தக்க தன்மையுடையேன் என்று நீ என்னைக் கருதி அருள் செய்ய விரும்புகின்றேன் என வுரைக்க. அடிகள் உடம்போடு கூடியிருத்தலை வெறுத்தமை, "எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்க கில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய்" ஆசை. 6 என வருதலானுமறிக. அளியேன் - அளிக்கத்தக்கேன். அளித்தல்- அருள் செய்தல். "அளியன்றானே முதுவாயிரவலன்'' என்பது திரு முருகாற்றுப்படை. (284) இதன்கண் 'புளியம்பழமொத் திருந்தேன் இருந்தும் அளியே னென்ன ஆசைப்பட்டேன்" என்பதனால் ஆத்தும இலக்கணம் என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க. 5 421 எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்க இல்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோ ரறியா மல ச்சே வடியானே
திருவாசக ஆராய்ச்சியுரை ஆசைப்பட்டேன் - இரங்கி அருள் செய்யத்தக்க தன்மையுடையேன் என்று நீ என்னைக் கருதி அருள் செய்ய விரும்புகின்றேன் . 972 விடையாய் பொடியாடீ எளிதாக வலிய வந்து ஆண்டு கொண்ட என் அமுது போன்றவனேயோ அம்மானே அடியேனுடைய உடம் பின் கண் புளியம்பழத்தைப் போலப் பற்றற்று இருந்தேன் ; அப்படி இருந்தும் அளியேன் என்று நீ என்னைக் கருதி அருள் செய்ய விரும்பு கின்றேன் என்பதாம் . எளிதாக வந்து என்பது எளிவந்து என ஈறு கெட்டது . அமு தேயோ என்பதில் ஓகாரம் ஒலம் என இரங்கி அழைக்கும் அழைப்புப் பொருளில் வந்தது . அளி புண்ணகத்து என்றது பதங் கெட்டு அளிந்த புண் போல உடம்பின் உட்புறம் இரத்தம் நிணம் முதலியன உடைத் தாதல் பற்றியாகும் . மூடி என்பதற்கு மூடி அமைக்கப்பட்ட என ஒரு சொல் வருவித்து யாக்கை என்பதனோடு முடிக்க . யாக்கைக் கண் என ஏழாவது விரிக்க . புளியம்பழம் ஒத்து இருந்தேன் என்றது காயாகிய பருவத்து ஓடும் பழமும் ஒன்றியிருப்பினும் புளியம்பழம் நன்றாகப் பழுத்த பரு வத்து ஓடு வேறாகவும் பழம் வேறாகவும் பிரிந்திருத்தல் போல நின் னருள் பெறு முன்னர் அடியேனுடைய உடம்பின்கண் பற்றுடையனா யிருந்த யான் அதனைப் பெற்ற பின்னர் பற்றற்றிருக்கின்றேன் என்ற வாறு . இருந்தும் அளியேன் என்ன ஆசைப்பட்டேன் எனக் கூட்டி . அங்ங னம் பற்றற்று இருந்தாலும் உடம்பினுள் இருத்தல் எனக்குத் துன்பம் தருகின்றதாதலின் இரங்கியருள் செய்யத்தக்க தன்மையுடையேன் என்று நீ என்னைக் கருதி அருள் செய்ய விரும்புகின்றேன் என வுரைக்க . அடிகள் உடம்போடு கூடியிருத்தலை வெறுத்தமை எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்க கில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் ஆசை . 6 என வருதலானுமறிக . அளியேன் - அளிக்கத்தக்கேன் . அளித்தல் அருள் செய்தல் . அளியன்றானே முதுவாயிரவலன் ' ' என்பது திரு முருகாற்றுப்படை . ( 284 ) இதன்கண் ' புளியம்பழமொத் திருந்தேன் இருந்தும் அளியே னென்ன ஆசைப்பட்டேன் என்பதனால் ஆத்தும இலக்கணம் என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க . 5 421 எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்க இல்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோ ரறியா மல ச்சே வடியானே