திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

980 திருவாசக ஆராய்ச்சியுரை பாதி மாதோடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற ஆதி யாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ப-ரை: நீதியாவன யாவையும் நினைக்கிலேன் - சைவ நீதிகளா யுள்ள எவற்றையும் எண்ணுகின்றிலேன்; நினைப்பவரொடும் கூடேன் - அவற்றை எண்ணுகின்றவர்களோடும் கூடேன். ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை - குற்றம் செய்யும் பொருட்டே பிறந்தும் இறந்தும் துன்புறுகின்ற என்னை, பாதிமாதொடும் கூடிய பரம்பரன்- திருமேனியிற் பாதி பெண்ணுருவோடு கூடிய மிக மேலானவனும், நிரந்தரமாய் நின்ற ஆதி - இடையீடின்றி என்றுமுள்ள முதல்வனு மாகிய இறைவன், என் அடியான் என்று - இவன் என் அணுக்கன் தொண்டன் என்று கருதி, ஆண்டு-ஆட்கொண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாம் - தம் அடியவர்களோடு கூடிடத்தரு ளிய அதிசயம் கண்டோம். நீதியாவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவரொடும் கூடேன்; ஏதமே பிறந்து இறந்து உழல்கின்ற என்னை இறைவன் என் அடியானென்று கருதி ஆட்கொண்டு தன் அடியாரோடுங் கூட் டிய அதிசயத்தைக் கண்டாம் என்பதாம். என்பன நீதியாவன யாவையும் நினைக்கிலேன் என்றது இறை, உயிர், உலகு; நல்வினை தீவினை, சுவர்க்கம் நரகம்; கட்டு வீடு வற்றை எண்ணுகின்றிலன் என்பது. தாம் நினையாவிடினும் நினைப் பவரோடும் கூடல் அவர் வாயிலாக இவற்றை அறிந்து மேனிலை யெய்துதற்கேதுவாகவும் அவரோடும் கூடாமையின் நினைப்பவரோ டும் கூடேன் என்றார். ஏதம் - குற்றம். என் அடியானென்று ஆண்டு எனக் கூட்டுக. "நின்மல மேனி நிமலன் பிறப்பிலி திருமந். 2584 என்னுளம் வந்திவன் என்னடி யானென்று'' 'அடியார் அருளால் அவனடி கூட திருமந். 2624 அடியா னிவனென் றடிமை கொண்டானே'' என வருவனவற்றாலுமறிக. பாதிமாதொடுங் கூடிய பரம்பரன் என் றது இறைவனது அர்த்தநாரீஸ்வர வடிவத்தைக் குறிப்பதாகும். நிரந்தரம் - நிர் + அந்தரம் - இடையீடின்மை; என்றது என்றுமுளதா தல். இதன்கண் 'பரம்பரன் ஆதி என் அடியானென்று ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே" என்பதனால் முத்தி இலக்கணம் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்சு. 2
980 திருவாசக ஆராய்ச்சியுரை பாதி மாதோடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற ஆதி யாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே . - ரை : நீதியாவன யாவையும் நினைக்கிலேன் - சைவ நீதிகளா யுள்ள எவற்றையும் எண்ணுகின்றிலேன் ; நினைப்பவரொடும் கூடேன் - அவற்றை எண்ணுகின்றவர்களோடும் கூடேன் . ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை - குற்றம் செய்யும் பொருட்டே பிறந்தும் இறந்தும் துன்புறுகின்ற என்னை பாதிமாதொடும் கூடிய பரம்பரன் திருமேனியிற் பாதி பெண்ணுருவோடு கூடிய மிக மேலானவனும் நிரந்தரமாய் நின்ற ஆதி - இடையீடின்றி என்றுமுள்ள முதல்வனு மாகிய இறைவன் என் அடியான் என்று - இவன் என் அணுக்கன் தொண்டன் என்று கருதி ஆண்டு - ஆட்கொண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாம் - தம் அடியவர்களோடு கூடிடத்தரு ளிய அதிசயம் கண்டோம் . நீதியாவன யாவையும் நினைக்கிலேன் ; நினைப்பவரொடும் கூடேன் ; ஏதமே பிறந்து இறந்து உழல்கின்ற என்னை இறைவன் என் அடியானென்று கருதி ஆட்கொண்டு தன் அடியாரோடுங் கூட் டிய அதிசயத்தைக் கண்டாம் என்பதாம் . என்பன நீதியாவன யாவையும் நினைக்கிலேன் என்றது இறை உயிர் உலகு ; நல்வினை தீவினை சுவர்க்கம் நரகம் ; கட்டு வீடு வற்றை எண்ணுகின்றிலன் என்பது . தாம் நினையாவிடினும் நினைப் பவரோடும் கூடல் அவர் வாயிலாக இவற்றை அறிந்து மேனிலை யெய்துதற்கேதுவாகவும் அவரோடும் கூடாமையின் நினைப்பவரோ டும் கூடேன் என்றார் . ஏதம் - குற்றம் . என் அடியானென்று ஆண்டு எனக் கூட்டுக . நின்மல மேனி நிமலன் பிறப்பிலி திருமந் . 2584 என்னுளம் வந்திவன் என்னடி யானென்று ' ' ' அடியார் அருளால் அவனடி கூட திருமந் . 2624 அடியா னிவனென் றடிமை கொண்டானே ' ' என வருவனவற்றாலுமறிக . பாதிமாதொடுங் கூடிய பரம்பரன் என் றது இறைவனது அர்த்தநாரீஸ்வர வடிவத்தைக் குறிப்பதாகும் . நிரந்தரம் - நிர் + அந்தரம் - இடையீடின்மை ; என்றது என்றுமுளதா தல் . இதன்கண் ' பரம்பரன் ஆதி என் அடியானென்று ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே என்பதனால் முத்தி இலக்கணம் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்சு . 2