திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கசிந்து என்பதனால் உள்ளம் நிலைத்து நின்று இறைவனை நினைத் தல் பெறப்படுதலின் உள்ளம் நின்று எனக்கூட்ட வேண்டா வென்க. உள்ளவா சொல்லுதற்கு எண்ணுங்கால் உள்ளம் ஆண்டு நிற்றலின் அவ்வளவும் நின்றுருக மாட்டோம் என்றனர். இதனால் எழுப்பியவர் எப்பொழுதும் பாடிக் கசிந்து நெக்குருகும் உள்ளம் உடையார் என்பது பெறப்படும். நீயே வந்து எண்ணிக் குறையில் துயில் என்றது எண்ணி லும் குறையாது ஆதலால் நீ துயிலாது எங்களுடன் வரவேண்டி யவை என்பது பட நின்றது. இத்திருப்பாட்டு பலவிகரணி, கலவிகரணியைத் துயிலுணர்த் துவதாகக் கூறப்பட்டது. இதன்கண் விண்ணுக்கொரு மருந்தை வேதவிழுப்பொருளை கண் ணுக்கினியானை என்பதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகம் நுதலிய பொருள் புலப்படுவது காண்க. 4 502 159. மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான் கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சிலமும் பாடிச் சிவனே சிவனேயென் றோல் மிடினும் உணரா யுணராய்காண் ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய். ப-ரை: மால் அறியா நான் முகனும் காணா மலையினை - திருமா லும் அறியாத அடியினையும் பிரமனும் காணமுடியாத முடியினையு முடைய மலையுருவாய் நின்ற இறைவனை, நாம்போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்- நாங்களா அறியும் தகுதி யுடையோம் என்று பணிவுடைமை தோன்றுமாறுள்ள பொய்மொழி யினையே பேசுகின்ற, பால் தேன் ஊறு வாய் படிறீ - பாலும் தேனும் போலும் இனிய சொற்றொடர்கள் ஊற்றெடுத்து வருகின்ற வாயையுடைய வஞ்சகீ, கடை திறவாய்-உன் இல்லின் புறவாயிற் கதவினையாவது திறவாமலிருக்கின்றாயே, ஞாலமே விண்ணே பிறவே அறிவு அரியான் கோலமும் - மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்த வரும், பிறவுலகத்தவரும் ஆகிய யாவரும் அறிதற்கரிய இறைவ னது திருவடிவத்தையும், நம்மை ஆட்கொண்டருளி கோதாட்டும் சீலமும் பாடி ஆட்கொள்ளுதற்குத் தகுதியில்லாத எளியேமையும்
திருவாசக ஆராய்ச்சியுரை கசிந்து என்பதனால் உள்ளம் நிலைத்து நின்று இறைவனை நினைத் தல் பெறப்படுதலின் உள்ளம் நின்று எனக்கூட்ட வேண்டா வென்க . உள்ளவா சொல்லுதற்கு எண்ணுங்கால் உள்ளம் ஆண்டு நிற்றலின் அவ்வளவும் நின்றுருக மாட்டோம் என்றனர் . இதனால் எழுப்பியவர் எப்பொழுதும் பாடிக் கசிந்து நெக்குருகும் உள்ளம் உடையார் என்பது பெறப்படும் . நீயே வந்து எண்ணிக் குறையில் துயில் என்றது எண்ணி லும் குறையாது ஆதலால் நீ துயிலாது எங்களுடன் வரவேண்டி யவை என்பது பட நின்றது . இத்திருப்பாட்டு பலவிகரணி கலவிகரணியைத் துயிலுணர்த் துவதாகக் கூறப்பட்டது . இதன்கண் விண்ணுக்கொரு மருந்தை வேதவிழுப்பொருளை கண் ணுக்கினியானை என்பதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகம் நுதலிய பொருள் புலப்படுவது காண்க . 4 502 159. மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான் கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சிலமும் பாடிச் சிவனே சிவனேயென் றோல் மிடினும் உணரா யுணராய்காண் ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய் . - ரை : மால் அறியா நான் முகனும் காணா மலையினை - திருமா லும் அறியாத அடியினையும் பிரமனும் காணமுடியாத முடியினையு முடைய மலையுருவாய் நின்ற இறைவனை நாம்போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்- நாங்களா அறியும் தகுதி யுடையோம் என்று பணிவுடைமை தோன்றுமாறுள்ள பொய்மொழி யினையே பேசுகின்ற பால் தேன் ஊறு வாய் படிறீ - பாலும் தேனும் போலும் இனிய சொற்றொடர்கள் ஊற்றெடுத்து வருகின்ற வாயையுடைய வஞ்சகீ கடை திறவாய் - உன் இல்லின் புறவாயிற் கதவினையாவது திறவாமலிருக்கின்றாயே ஞாலமே விண்ணே பிறவே அறிவு அரியான் கோலமும் - மண்ணுலகத்தவரும் விண்ணுலகத்த வரும் பிறவுலகத்தவரும் ஆகிய யாவரும் அறிதற்கரிய இறைவ னது திருவடிவத்தையும் நம்மை ஆட்கொண்டருளி கோதாட்டும் சீலமும் பாடி ஆட்கொள்ளுதற்குத் தகுதியில்லாத எளியேமையும்