திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அதிசயப்பத்து 'அகத்தொளி மிளிரும் புற்றில வாளரவன்" கோவை.97 “புற்றில வாளரவன்” கோவை. 320 என அருளியவாறுங் காண்க. அரவம் வேள்வித் தீயிற் பிறந்த பாம்பு. (கோவை 97 உரை) 987 இதன்கண் ''குடி கெடுகின்றேனை எம்மிறை அரவன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாம்" என்பதனால் முத்தி இலக்கணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 5 431 எண்ணி லேன்றிரு நாமவஞ் செழுத்துமென் ஏழைமை யதனாலே நண்ணி லேன்கலை ஞானிக டம்மொடு நல்வினை நயவாதே மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற் கொருப்படு கின்றேனை அண்ண லாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ப-ரை. என் ஏழைமையதனாலே - என் அறியாமை காரணமாக, திருநாமம் அஞ்சு எழுத்தும் எண்ணிலேன் - இறைவன் திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் செபித்து உருவேற்றுகின்றிலேன், கலைஞானி கள்தம்மொடு நண்ணிலேன் - உண்மைநூல் அறிவினையுடைய மெய் யடியார்களோடு சேர்ந்திலேன், நல்வினை நயவாதே- திருநாமம் ஐந் தெழுத்து எண்ணுதல் முதலிய நல்வினைகளை விரும்பாமல், மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவதற்கு ஒருப்படுகின்றேன் - மண்ணுலகத் திற் பிறந்து இறந்து மண்ணாய்ப்போவதற்கு இயையும் தன்மை யுடைய என்னை, அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாம் - பெருமையிற் சிறந்தோனாகிய இறைவன் ஆட்கொண்டு தன் மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளிய அதிசயத்தினைக் கண் டோம். என் அறியாமை காரணமாக இறைவன் திருநாமமாகிய திரு வைந்தெழுத்தைச் செபித்து உருவேற்றுகின்றிலேன், உண்மை நூல் அறிவினையுடைய ஞானிகளோடும் கூடேன், மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாய்ப் போவதற்கு ஒருப்படுகின்ற என்னை இறைவன் ஆட்கொண்டு தன் மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளிய அதிசயத் தினைக் கண்டோம் என்பதாம். எண்ணுதல் - செபித்து உருவேற்றுதல். அஞ்செழுத்து - பஞ்சாக் கரம். இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவியாதலின் அஞ்செழுத் தும் என உம்மை சொடுக்கப்பட்டது. இனி, அஞ்செழுத்தும் எண்
அதிசயப்பத்து ' அகத்தொளி மிளிரும் புற்றில வாளரவன் கோவை .97 புற்றில வாளரவன் கோவை . 320 என அருளியவாறுங் காண்க . அரவம் வேள்வித் தீயிற் பிறந்த பாம்பு . ( கோவை 97 உரை ) 987 இதன்கண் ' ' குடி கெடுகின்றேனை எம்மிறை அரவன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாம் என்பதனால் முத்தி இலக்கணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 5 431 எண்ணி லேன்றிரு நாமவஞ் செழுத்துமென் ஏழைமை யதனாலே நண்ணி லேன்கலை ஞானிக டம்மொடு நல்வினை நயவாதே மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற் கொருப்படு கின்றேனை அண்ண லாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே . - ரை . என் ஏழைமையதனாலே - என் அறியாமை காரணமாக திருநாமம் அஞ்சு எழுத்தும் எண்ணிலேன் - இறைவன் திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் செபித்து உருவேற்றுகின்றிலேன் கலைஞானி கள்தம்மொடு நண்ணிலேன் - உண்மைநூல் அறிவினையுடைய மெய் யடியார்களோடு சேர்ந்திலேன் நல்வினை நயவாதே- திருநாமம் ஐந் தெழுத்து எண்ணுதல் முதலிய நல்வினைகளை விரும்பாமல் மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவதற்கு ஒருப்படுகின்றேன் - மண்ணுலகத் திற் பிறந்து இறந்து மண்ணாய்ப்போவதற்கு இயையும் தன்மை யுடைய என்னை அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாம் - பெருமையிற் சிறந்தோனாகிய இறைவன் ஆட்கொண்டு தன் மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளிய அதிசயத்தினைக் கண் டோம் . என் அறியாமை காரணமாக இறைவன் திருநாமமாகிய திரு வைந்தெழுத்தைச் செபித்து உருவேற்றுகின்றிலேன் உண்மை நூல் அறிவினையுடைய ஞானிகளோடும் கூடேன் மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாய்ப் போவதற்கு ஒருப்படுகின்ற என்னை இறைவன் ஆட்கொண்டு தன் மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளிய அதிசயத் தினைக் கண்டோம் என்பதாம் . எண்ணுதல் - செபித்து உருவேற்றுதல் . அஞ்செழுத்து - பஞ்சாக் கரம் . இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவியாதலின் அஞ்செழுத் தும் என உம்மை சொடுக்கப்பட்டது . இனி அஞ்செழுத்தும் எண்