திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அதிசயப்பத்து பொய் அற துகள் அறுத்து ஆக்கி - தன்னை யான் பிரிதற்கேதுவாக முன்னே யான் செய்த பொய்யாகிய குற்றம் நீங்கிப்போக மலகன்ம மாயைகளின் குற்றங்களை நீக்கித் தூய்மையடையச்செய்து ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாம் - ஆட்கொண்டு தன் மெய்யடியார் கூட்டத்தில் சேர்த்தருளிய அதிசயத்தைக் கண்டோம் இறைவன் என்னைத் தன்னொடு நில்லாவகை முதலில் நீக்கி இக்குரம்பையிற் புகப்பெய்து பக்குவ காலத்தில் திருவருட் கண்ணாற் பார்த்து நயனதீக்கை செய்து நுகமின்றி விளாக்கைத்து நுண்ணி யனவும் நொடித்தானாகிய சிவபெருமானுக்குரியனவுமாகிய திருவைந் தெழுத்தை உபதேசித்து மனத்திற் பதியவைத்துத் தூக்கி முன்செய்த பொய்யாகிய குற்றம் நீங்கிப்போக துகள் அறுத்துத் தூய்மையடை யச் செய்து ஆட்கொண்டு தன் மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தரு ளிய அதிசயத்தைக் கண்டோம் என்பதாம். 991 தன்னொடு அணுக்கன் தொண்டனாகநின்ற அடிகளை இறைவன் நீக்கியமைக்குக்காரணம் அடிகள் உள்ளிட்ட அணுக்கன் தொண் டர் பலர்க்கும் திருவுத்தரகோசமங்கையின் கண் தத்துவஞானத்தினை உபதேசிக்குங்கால் ஆகாயவீதியில் வந்த இந்திரன் பவனியைக் கண்டு அடிகள் அதனில் ஈடுபட்டு உபதேசத்தினை அலட்சியம் செய்தனராக அக்குற்றம் நீங்குமாறு அ களைப் பூமியிற் பிறக்கும் வண்ணம் பணித் தமையாகும். இந்திர பவனியை அடிகள் விரும்பிப் பார்த்தமை யால் அவனைப்போன்ற செல்வச் சிறப்பு அவர்க்கு உளதாகுமாறு இறைவன் செய்திருக்க வேண்டும் என்னும் குறிப்பினை, "இந்திரச் செல்வம்போல வியைந்துள வின்பமெய்தி மந்திரத் தலைமை பூண்ட வண்புகழ் வாதவூரர்'' மந்திரி.16 எனத் திருவாதவூரர் புராணத்து வருதலானுமறிக. அடிகளை இறை வன் குரம்பையிற் புகச்செய்தமை, 'மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்தீவ் வூனே புகவென் றனைநூக்கி உழல்பனணு வித்திட்டாய்" "மண்ணகத் தேநின்று வாழச்செய் தானே'' "பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனை'' என அடிகள் அருளியவாற்றானு மறியலாம். குழைத்த. 4 திருப்பள்ளி.9 ஏசறவு 8 நோக்கி என்பது இறைவன் செய்த நயன தீக்கையினைக் குறிப்ப தாகும். நுண்ணிய நொடியன சொல் என்றது நொடித்தான் எனப்ப டும் இறைவனுக்குரிய ஐந்தெழுத்து மந்திரமாகிய சூட்சும பஞ்சாக்
அதிசயப்பத்து பொய் அற துகள் அறுத்து ஆக்கி - தன்னை யான் பிரிதற்கேதுவாக முன்னே யான் செய்த பொய்யாகிய குற்றம் நீங்கிப்போக மலகன்ம மாயைகளின் குற்றங்களை நீக்கித் தூய்மையடையச்செய்து ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாம் - ஆட்கொண்டு தன் மெய்யடியார் கூட்டத்தில் சேர்த்தருளிய அதிசயத்தைக் கண்டோம் இறைவன் என்னைத் தன்னொடு நில்லாவகை முதலில் நீக்கி இக்குரம்பையிற் புகப்பெய்து பக்குவ காலத்தில் திருவருட் கண்ணாற் பார்த்து நயனதீக்கை செய்து நுகமின்றி விளாக்கைத்து நுண்ணி யனவும் நொடித்தானாகிய சிவபெருமானுக்குரியனவுமாகிய திருவைந் தெழுத்தை உபதேசித்து மனத்திற் பதியவைத்துத் தூக்கி முன்செய்த பொய்யாகிய குற்றம் நீங்கிப்போக துகள் அறுத்துத் தூய்மையடை யச் செய்து ஆட்கொண்டு தன் மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தரு ளிய அதிசயத்தைக் கண்டோம் என்பதாம் . 991 தன்னொடு அணுக்கன் தொண்டனாகநின்ற அடிகளை இறைவன் நீக்கியமைக்குக்காரணம் அடிகள் உள்ளிட்ட அணுக்கன் தொண் டர் பலர்க்கும் திருவுத்தரகோசமங்கையின் கண் தத்துவஞானத்தினை உபதேசிக்குங்கால் ஆகாயவீதியில் வந்த இந்திரன் பவனியைக் கண்டு அடிகள் அதனில் ஈடுபட்டு உபதேசத்தினை அலட்சியம் செய்தனராக அக்குற்றம் நீங்குமாறு களைப் பூமியிற் பிறக்கும் வண்ணம் பணித் தமையாகும் . இந்திர பவனியை அடிகள் விரும்பிப் பார்த்தமை யால் அவனைப்போன்ற செல்வச் சிறப்பு அவர்க்கு உளதாகுமாறு இறைவன் செய்திருக்க வேண்டும் என்னும் குறிப்பினை இந்திரச் செல்வம்போல வியைந்துள வின்பமெய்தி மந்திரத் தலைமை பூண்ட வண்புகழ் வாதவூரர் ' ' மந்திரி .16 எனத் திருவாதவூரர் புராணத்து வருதலானுமறிக . அடிகளை இறை வன் குரம்பையிற் புகச்செய்தமை ' மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்தீவ் வூனே புகவென் றனைநூக்கி உழல்பனணு வித்திட்டாய் மண்ணகத் தேநின்று வாழச்செய் தானே ' ' பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனை ' ' என அடிகள் அருளியவாற்றானு மறியலாம் . குழைத்த . 4 திருப்பள்ளி .9 ஏசறவு 8 நோக்கி என்பது இறைவன் செய்த நயன தீக்கையினைக் குறிப்ப தாகும் . நுண்ணிய நொடியன சொல் என்றது நொடித்தான் எனப்ப டும் இறைவனுக்குரிய ஐந்தெழுத்து மந்திரமாகிய சூட்சும பஞ்சாக்