திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கரத்தைக் குறிப்பதாகும். நுண்ணிய - நுட்பமான; சூக்குமமான. நொடியன - நொடித்தானுக்குரியன. நொடித்தான் - சங்கார கார ணனாகிய இறைவன். 'நொடித்தான் மலையுத்தமனே' என ஆளுடை நம்பி தேவாரத்து வருதலுங் காண்க. நொடியன எனப் பன்மை கூறி யது அப்பஞ்சாக்கரத்திலுள்ள ஐந்தெழுத்துப்பற்றியாகும். நொடித் தல் - சொல்லுதல். நொடிவார் - சொல்லுவாராயிருந்தார் (கோவை 139 உரை) சொற் செய்தல் - அம் மந்திரத்தைச் செவிப் புலன்களின் வழியே சென்று சிந்தையுறத் திருவாய் மலர்தல். 992 விளாக் கைத்தல் - உழுதல். ''பாழ்ச்செய் விளாவிப் பயனிலி யாய்க் கிடப்பேற்கு - (குலாப். 8) என்புழியும் இப்பொருட்டாதல் காண்சு. நுகமின்றி விளாக்கைத்து என்றதனால் கருவிகள் புறத்தே யின்றிக் காரியம் செய்வதாகிய ஞானவதியாகிய நிருவாணதீக்கை குறிக்கப்பட்டது. தூக்கி - ஆராய்ந்து; என்றது மந்திரம் பதினொன்றும், பதம் எண் பத்தொன்றும் வன்னங்கள் ஐம்பத்தொன்றும். புவனம் இருநூற் றிருபத்து நான்கும், தத்துவம் முப்பத்தாறும் ஆகிய *அத்துவாக் கள் ஐந்தனுள்ளும் தத்தமக்கு உரியனவற்றைக் கொண்டுள்ளன வான நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தியை, சாந்தி, சாந்தியதீதை என்னும் கலாத்துவாக்கள் ஐந்தினையும் ஆராய்தலை. அதனை ஆராயுங் கால் நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தியை, சாந்தி, சாந்தியதீதை என்னும் ஐந்து கலைகளிலும் அவ்வவற்றிற்குரிய மந்திரங்கள் பதங் கள் வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் என்னும் ஐந்திலும் எவ் வெவை எவ்வெக்கலைகளில் அமையத்தக்கனவோ அவ்வாறாக அவற்றை அமைத்துச் சோதித்தல் கலாசோதனையாகும். இக்கலாசோதனை சிருட்டிக் கிரமமாகச் சாந்தியத்தை சாந்திவித் தியை பிரதிட்டை நிவிர்த்தி என்னும் முறையில் வைத்து அவ்வவற் றிற்குரிய மந்திர அத்துவா முதலிய ஐந்து அத்துவாக்களையும் அமைத் துச் செய்யப்படும். அதன்பின்னர் அவ்வத்துவாக்கள் வழியாக ஆன்மா அனுபவிக்க வேண்டிய சுகதுக்கங்களை ஒருசேர அனுபவிப்பித்துச் சுத்திசெய்து வீடு பேற்றிற்குத் தகுதியடையச் செய்தல் கலாசுத்தி எனப்படும். இச்சுத்தி * அத்துவா -உயிர்கள் போகங்களை அனுபவித்தற்குரிய வழிகள். அவை மந்திர அத்துவா, பத அத்துவா, வன்ன அத்துவா, புவன அத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா என்பன. இந்த ஆறு அத்துவாக்களிலும் மந்திரம், பதம், வன்னம் ஆகிய மூன்றும் ஒலி வடி டிவினவாகவும், புவனம், தத்துவம். கலை என்னும் மூன்றும் பொருள்வடிவாகவும் உள்ளன.
திருவாசக ஆராய்ச்சியுரை கரத்தைக் குறிப்பதாகும் . நுண்ணிய - நுட்பமான ; சூக்குமமான . நொடியன - நொடித்தானுக்குரியன . நொடித்தான் - சங்கார கார ணனாகிய இறைவன் . ' நொடித்தான் மலையுத்தமனே ' என ஆளுடை நம்பி தேவாரத்து வருதலுங் காண்க . நொடியன எனப் பன்மை கூறி யது அப்பஞ்சாக்கரத்திலுள்ள ஐந்தெழுத்துப்பற்றியாகும் . நொடித் தல் - சொல்லுதல் . நொடிவார் - சொல்லுவாராயிருந்தார் ( கோவை 139 உரை ) சொற் செய்தல் - அம் மந்திரத்தைச் செவிப் புலன்களின் வழியே சென்று சிந்தையுறத் திருவாய் மலர்தல் . 992 விளாக் கைத்தல் - உழுதல் . ' ' பாழ்ச்செய் விளாவிப் பயனிலி யாய்க் கிடப்பேற்கு - ( குலாப் . 8 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்சு . நுகமின்றி விளாக்கைத்து என்றதனால் கருவிகள் புறத்தே யின்றிக் காரியம் செய்வதாகிய ஞானவதியாகிய நிருவாணதீக்கை குறிக்கப்பட்டது . தூக்கி - ஆராய்ந்து ; என்றது மந்திரம் பதினொன்றும் பதம் எண் பத்தொன்றும் வன்னங்கள் ஐம்பத்தொன்றும் . புவனம் இருநூற் றிருபத்து நான்கும் தத்துவம் முப்பத்தாறும் ஆகிய * அத்துவாக் கள் ஐந்தனுள்ளும் தத்தமக்கு உரியனவற்றைக் கொண்டுள்ளன வான நிவிர்த்தி பிரதிட்டை வித்தியை சாந்தி சாந்தியதீதை என்னும் கலாத்துவாக்கள் ஐந்தினையும் ஆராய்தலை . அதனை ஆராயுங் கால் நிவிர்த்தி பிரதிட்டை வித்தியை சாந்தி சாந்தியதீதை என்னும் ஐந்து கலைகளிலும் அவ்வவற்றிற்குரிய மந்திரங்கள் பதங் கள் வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் என்னும் ஐந்திலும் எவ் வெவை எவ்வெக்கலைகளில் அமையத்தக்கனவோ அவ்வாறாக அவற்றை அமைத்துச் சோதித்தல் கலாசோதனையாகும் . இக்கலாசோதனை சிருட்டிக் கிரமமாகச் சாந்தியத்தை சாந்திவித் தியை பிரதிட்டை நிவிர்த்தி என்னும் முறையில் வைத்து அவ்வவற் றிற்குரிய மந்திர அத்துவா முதலிய ஐந்து அத்துவாக்களையும் அமைத் துச் செய்யப்படும் . அதன்பின்னர் அவ்வத்துவாக்கள் வழியாக ஆன்மா அனுபவிக்க வேண்டிய சுகதுக்கங்களை ஒருசேர அனுபவிப்பித்துச் சுத்திசெய்து வீடு பேற்றிற்குத் தகுதியடையச் செய்தல் கலாசுத்தி எனப்படும் . இச்சுத்தி * அத்துவா -உயிர்கள் போகங்களை அனுபவித்தற்குரிய வழிகள் . அவை மந்திர அத்துவா பத அத்துவா வன்ன அத்துவா புவன அத்துவா தத்துவாத்துவா கலாத்துவா என்பன . இந்த ஆறு அத்துவாக்களிலும் மந்திரம் பதம் வன்னம் ஆகிய மூன்றும் ஒலி வடி டிவினவாகவும் புவனம் தத்துவம் . கலை என்னும் மூன்றும் பொருள்வடிவாகவும் உள்ளன .