திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அதிசயப்பத்து செய்யுங்கால் சங்காரக்கிரமமாக நிவிர்த்தி பிரதிட்டை வித்தியை சாந்தி சாந்தியதீதை என்னும் முறையில் வைத்துச் சுத்தி செய்யப் படும். இங்குச் சொல்லப்பட்ட கலாசோதனை கலாசுத்தி என்னும் இரண் டினையும் அடக்கியே அடிகள் தூக்கி என அருளிச் செய்தார். எனவே தூக்கி என்றதாற் கூறப்பட்டது பஞ்சகலா சோதனையையும் பஞ்ச கலாசுத்தியையுமுடைய நிருவாண தீக்கையாகும். 993 'முறையானே இம்மூன்றும் முற்றிஅருள் பதிந்துவினை ஒப்புவாய்ந்து, நிறைவாய பருவத்தின் உயிர்க்குயிராய் நின்றருளும் யாமே தோன்றி, மறைவாய்மை நிருவாண விதியாற்றால் வழிஆறும் தூய்மை செய்து, குறையாத பேரருளின் அறிவுறுக்கும் அஞ்செழுத்தின் கொள்கை தேற்றி" காஞ்சி. தழுவக். 58 என வருவனவுங் காண்க. முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து ஆக்கி ஆண்டு என்றத னால், நிருவாணதீக்கை செய்தமையால் இறைவனது உபதேசத்தில் அடிகள் பராமுகமாயிருந்த குற்றம் நீங்கிப்போக உயிரின் கணுள்ள மும்மலக்குற்றங்களையும் நீக்கித் தூய்மையடையச் செய்து ஆட்கொண் டமை அறியப்படும். துகள் - குற்றம். "துகள்தாவையுந் துரும்பும் நீக்கி" பெரும்பாண். 238-9 u எழுதரு சுடர்ச்சோதி என்பது ஆக்கி என்பதனோடு இயைதற்கு மிகவும் இயைபுடைத்தாக இருப்பினும் இதன் பதிகத்து ஒவ்வொரு பாட்டினும், ''திருப்பாதத் தப்பன்'' (1) "நிரந்தரமாய் நின்ற ஆதி" (2) "முடிதனில் இளமதியது வைத்த அன்னை" (3) "அத்தன்" (4) "சடை மிளிர்கின்ற அரவன்' (5) "அண்ணல்" (6)"முழுச்சோதி அத்தன்'' (7) ''அத்தன்'' (8) ''அருளுமெய்ந்நெறி' என இறைவன் குறிக்கப்படுதலால் இத்திருப்பாட்டிலும் 'எழுதரு சுடர்ச்சோதி' என இறைவனையே குறிப்பதாகக்கொள்க. hang "தூயமேனிச் சுடர்விடு சோதி" எனத் திருவாசகத்தும், கீர்த்தி: 112 'சொற்பொருளுங் கடந்த சுடர்ச்சோதி ''துஞ்சும்போதும் சுடர்விடு சோதியை" எனத் தேவாரத்தும் வருவனகாண்க. அப். 288-1 அப். 206-8 நிருவாண தீக்கையால் துகளறுக்கப்பட்ட ஆன்மா தூய பளிங்கு மணியின் ஒளியுடைத்தாகும் என ஆகமத்திற் கூறப்படுதலின் எழு
அதிசயப்பத்து செய்யுங்கால் சங்காரக்கிரமமாக நிவிர்த்தி பிரதிட்டை வித்தியை சாந்தி சாந்தியதீதை என்னும் முறையில் வைத்துச் சுத்தி செய்யப் படும் . இங்குச் சொல்லப்பட்ட கலாசோதனை கலாசுத்தி என்னும் இரண் டினையும் அடக்கியே அடிகள் தூக்கி என அருளிச் செய்தார் . எனவே தூக்கி என்றதாற் கூறப்பட்டது பஞ்சகலா சோதனையையும் பஞ்ச கலாசுத்தியையுமுடைய நிருவாண தீக்கையாகும் . 993 ' முறையானே இம்மூன்றும் முற்றிஅருள் பதிந்துவினை ஒப்புவாய்ந்து நிறைவாய பருவத்தின் உயிர்க்குயிராய் நின்றருளும் யாமே தோன்றி மறைவாய்மை நிருவாண விதியாற்றால் வழிஆறும் தூய்மை செய்து குறையாத பேரருளின் அறிவுறுக்கும் அஞ்செழுத்தின் கொள்கை தேற்றி காஞ்சி . தழுவக் . 58 என வருவனவுங் காண்க . முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து ஆக்கி ஆண்டு என்றத னால் நிருவாணதீக்கை செய்தமையால் இறைவனது உபதேசத்தில் அடிகள் பராமுகமாயிருந்த குற்றம் நீங்கிப்போக உயிரின் கணுள்ள மும்மலக்குற்றங்களையும் நீக்கித் தூய்மையடையச் செய்து ஆட்கொண் டமை அறியப்படும் . துகள் - குற்றம் . துகள்தாவையுந் துரும்பும் நீக்கி பெரும்பாண் . 238-9 u எழுதரு சுடர்ச்சோதி என்பது ஆக்கி என்பதனோடு இயைதற்கு மிகவும் இயைபுடைத்தாக இருப்பினும் இதன் பதிகத்து ஒவ்வொரு பாட்டினும் ' ' திருப்பாதத் தப்பன் ' ' ( 1 ) நிரந்தரமாய் நின்ற ஆதி ( 2 ) முடிதனில் இளமதியது வைத்த அன்னை ( 3 ) அத்தன் ( 4 ) சடை மிளிர்கின்ற அரவன் ' ( 5 ) அண்ணல் ( 6 ) முழுச்சோதி அத்தன் ' ' ( 7 ) ' ' அத்தன் ' ' ( 8 ) ' ' அருளுமெய்ந்நெறி ' என இறைவன் குறிக்கப்படுதலால் இத்திருப்பாட்டிலும் ' எழுதரு சுடர்ச்சோதி ' என இறைவனையே குறிப்பதாகக்கொள்க . hang தூயமேனிச் சுடர்விடு சோதி எனத் திருவாசகத்தும் கீர்த்தி : 112 ' சொற்பொருளுங் கடந்த சுடர்ச்சோதி ' ' துஞ்சும்போதும் சுடர்விடு சோதியை எனத் தேவாரத்தும் வருவனகாண்க . அப் . 288-1 அப் . 206-8 நிருவாண தீக்கையால் துகளறுக்கப்பட்ட ஆன்மா தூய பளிங்கு மணியின் ஒளியுடைத்தாகும் என ஆகமத்திற் கூறப்படுதலின் எழு