திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

புணர்ச்சிப்பத்து அடி முடி காண்பான் அயன்மால் இருவர் படி கண்டிலர்" எனத் திருமந்திரத்தும் "இளங்கோ வினர்க ளிரண்டறி பெயரும் அன்னமும் பன்றியு மொல்லையி னெடுத்துப் பறத்தும் அகழ்ந்தும் படியிது வென்னா அறிவகன் றுயர்ந்த கழன்மணி முடியும்" எனக் கல்லாடத்தும் வருவன காண்க. 1007 (88) 67-26-9 அகழ்ந்தும் என்பது எதுகை நோக்கி அகழ எனத் திரிந்து நின் றது. நிகழ்தல் - விளங்குதல். ''வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட" (பதிற். 49-15) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. அஃது ஈண்டு உலகினர் அறிதல். ஆட்கொண்டு பணிகொண்டு என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. நீர்மை - தன்மை. "நினைத்தெருட்டு மென்னுடை நீர்மையிதென்னென்பதே" (கோவை 28). இயல்பாகிய குணம் எனினுமாம் (க்ஷை 28 உரை): 441 பரிந்து வந்து பரமா னந்தம் பண்டே அடியேற் கருள்செய்யப் பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றே னென்றென்று சொரிந்த கண்ணீர் சொரிய வுண்ணீர் உரோமம் சிலிர்ப்ப வுகந்தன்பாய்ப் புரிந்து நிற்ப தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே. பொல்லா மணியைப் புணர்ந்து அத்துவிதபாவனையில் நிற்பவர் கள் புகழப் பெறுதல் கூடாமையின் புகழ்ந்து என் பொல்லா மணி யைப் புணரப்பெறுவது என்று கொல்லோ என மாறிக் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது. இப்பதிகம் அத்து வித இலக்கணம் உரைத்தலின் இங்ஙனம் உரை கூறுவதே இரையுடைத்தாமென்க. இதன்கண், ''என் பொல்லா மணியைப் புணர்ந்து புகழப்பெறு வது என்று கொல்லோ" என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க. 5 ப-ரை. பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள் செய்ய - இறைவன் என்பால் இரக்கங்கொண்டு குருவாய் வலிய எழுந் தருளி வந்து மேலான இன்பத்தினை முன்னமே அடியேற்குத் தந்தருள வும், பிரிந்து போந்து மா பெரு நிலத்தில் அருமால் உற்றேன் என்று
புணர்ச்சிப்பத்து அடி முடி காண்பான் அயன்மால் இருவர் படி கண்டிலர் எனத் திருமந்திரத்தும் இளங்கோ வினர்க ளிரண்டறி பெயரும் அன்னமும் பன்றியு மொல்லையி னெடுத்துப் பறத்தும் அகழ்ந்தும் படியிது வென்னா அறிவகன் றுயர்ந்த கழன்மணி முடியும் எனக் கல்லாடத்தும் வருவன காண்க . 1007 ( 88 ) 67-26-9 அகழ்ந்தும் என்பது எதுகை நோக்கி அகழ எனத் திரிந்து நின் றது . நிகழ்தல் - விளங்குதல் . ' ' வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட ( பதிற் . 49-15 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . அஃது ஈண்டு உலகினர் அறிதல் . ஆட்கொண்டு பணிகொண்டு என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க . நீர்மை - தன்மை . நினைத்தெருட்டு மென்னுடை நீர்மையிதென்னென்பதே ( கோவை 28 ) . இயல்பாகிய குணம் எனினுமாம் ( க்ஷை 28 உரை ) : 441 பரிந்து வந்து பரமா னந்தம் பண்டே அடியேற் கருள்செய்யப் பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றே னென்றென்று சொரிந்த கண்ணீர் சொரிய வுண்ணீர் உரோமம் சிலிர்ப்ப வுகந்தன்பாய்ப் புரிந்து நிற்ப தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே . பொல்லா மணியைப் புணர்ந்து அத்துவிதபாவனையில் நிற்பவர் கள் புகழப் பெறுதல் கூடாமையின் புகழ்ந்து என் பொல்லா மணி யைப் புணரப்பெறுவது என்று கொல்லோ என மாறிக் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது . இப்பதிகம் அத்து வித இலக்கணம் உரைத்தலின் இங்ஙனம் உரை கூறுவதே இரையுடைத்தாமென்க . இதன்கண் ' ' என் பொல்லா மணியைப் புணர்ந்து புகழப்பெறு வது என்று கொல்லோ என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க . 5 - ரை . பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள் செய்ய - இறைவன் என்பால் இரக்கங்கொண்டு குருவாய் வலிய எழுந் தருளி வந்து மேலான இன்பத்தினை முன்னமே அடியேற்குத் தந்தருள வும் பிரிந்து போந்து மா பெரு நிலத்தில் அருமால் உற்றேன் என்று