திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பாரொடு விண்ணாய்ப் பரந்த எங்கள் மேலோனே, நான் நின் பற்றன்றி வேறு உலகப்பற்று ஒன்றும் இல்லேன்; சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே. திருப்பெருந்துறையுறை சிவனே: என்னை ஆட் கொண்ட நீ வீடுபேற்றினை அருளாதொழிகுவையாயின் நின்னைத் தவிர வேறு யாரோடு நோவேன்; ஆர்க்கு எடுத்து உரைப்பேன்; ஆத லால் இங்கே வருக என்று என்னை அழைத்தருள்வாயாக என்பதாம். 1016 பாரொடு விண்ணாய்ப் பரத்தல் - பார்முதல் விண் ஈறாக உலக முழுவதையும் தன் வியாபகத்துள் அடக்கிக் கொள்ளுதல். எம்பரன் என்பதற்கு எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவன் எனி னுமாம்."அந்தியின் வா யெழிலம்பலத் தெம்பரன்" (திருக்கோவை 99) என்புழி, எம்பரன் என்பதற்கு "எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவன்" எனவுரையும், "எல்லாப் பொருளையுங் கடந்தானா யினும் எமக்கண்ணியனென்னும் கருத்தான் எம்பரனென்றார்" என விசேடவுரையும் பேராசிரியர் எழுதியிருத்தல் ஈண்டறியற்பாலன. நான் மற்று பற்று இலேன் என மாறிக்கூட்டிப் பொருளுரைக்க மற்று - பிறிது என்னும் பொருளது. அதனால் நின் பற்றன்றி வேறு புறப்பற்று ஒன்றுமிலேன் என்றவாறு. கண்டாய் இரண்டும் முன்னிலை அசை. சீர் - மிக்க புகழ். சீரொடு பொலிதல் - இயல்பாக என்று முள்ள மிக்க புகழோடு விளங்குதல், சிவபுரம் - சிவலோகம். நோகேன் என்றது என் துன்பத்தை எடுத்துச்சொல்லுவேன் என்றவாறு. நோவென் னும் முதனிலைத் தொழிற்பெயர் ஈண்டு அது சொல்லுதற்கணாயிற்று. ஆர்க்கு எடுத்து உரைப்பேன் என்றது எனக்கு வேண்டியதை யார்க்கு எடுத்துச் சொல்லுவேன் என்றவாறு. ஆண்ட நீ அருளாதொழிந்தால் எனது துன்பத்தைச் சொல்லவும் என் குறையினைப் பெறவும் முடியா தென்றவாறு. வாழ்கிலேன் என்றது உலகவாழ்க்கையில் உளதாகும் வாதனைகளைச் சகிக்கும் ஆற்றலுடையேனல்லேன் என்றவாறு வருக வென்றருள் புரியாய் என்றது எனது நிலையினை அறிந்த நீ என்னைப் பார்த்து இங்கே வருக என்று அருள்செய்வாயாக என்றவாறு. ve à o te wo la 1100 இதன்சண்,பற்றிவேன்; உலகில் வாழ்கிலேன் ஆதலால் "வருக வென்றருள்புரியாய்" என்பதனால் முத்தி உபாயம் என்னும் பதிக நுத லிய பொருள் புலப்படுமாறு காண்க. 1 447 வம்மனேன் றன்னை பாண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரு மறியா வொருவனே யிருவர்க் குணர்விறந் துலகமூ டுருவும் செம்பெரு மானே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எம்பெரு மானே பென்னையாள் வானே யென்னை நீ கூவிக்கொண் டருளே. 105113
திருவாசக ஆராய்ச்சியுரை பாரொடு விண்ணாய்ப் பரந்த எங்கள் மேலோனே நான் நின் பற்றன்றி வேறு உலகப்பற்று ஒன்றும் இல்லேன் ; சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே . திருப்பெருந்துறையுறை சிவனே : என்னை ஆட் கொண்ட நீ வீடுபேற்றினை அருளாதொழிகுவையாயின் நின்னைத் தவிர வேறு யாரோடு நோவேன் ; ஆர்க்கு எடுத்து உரைப்பேன் ; ஆத லால் இங்கே வருக என்று என்னை அழைத்தருள்வாயாக என்பதாம் . 1016 பாரொடு விண்ணாய்ப் பரத்தல் - பார்முதல் விண் ஈறாக உலக முழுவதையும் தன் வியாபகத்துள் அடக்கிக் கொள்ளுதல் . எம்பரன் என்பதற்கு எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவன் எனி னுமாம் . அந்தியின் வா யெழிலம்பலத் தெம்பரன் ( திருக்கோவை 99 ) என்புழி எம்பரன் என்பதற்கு எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவன் எனவுரையும் எல்லாப் பொருளையுங் கடந்தானா யினும் எமக்கண்ணியனென்னும் கருத்தான் எம்பரனென்றார் என விசேடவுரையும் பேராசிரியர் எழுதியிருத்தல் ஈண்டறியற்பாலன . நான் மற்று பற்று இலேன் என மாறிக்கூட்டிப் பொருளுரைக்க மற்று - பிறிது என்னும் பொருளது . அதனால் நின் பற்றன்றி வேறு புறப்பற்று ஒன்றுமிலேன் என்றவாறு . கண்டாய் இரண்டும் முன்னிலை அசை . சீர் - மிக்க புகழ் . சீரொடு பொலிதல் - இயல்பாக என்று முள்ள மிக்க புகழோடு விளங்குதல் சிவபுரம் - சிவலோகம் . நோகேன் என்றது என் துன்பத்தை எடுத்துச்சொல்லுவேன் என்றவாறு . நோவென் னும் முதனிலைத் தொழிற்பெயர் ஈண்டு அது சொல்லுதற்கணாயிற்று . ஆர்க்கு எடுத்து உரைப்பேன் என்றது எனக்கு வேண்டியதை யார்க்கு எடுத்துச் சொல்லுவேன் என்றவாறு . ஆண்ட நீ அருளாதொழிந்தால் எனது துன்பத்தைச் சொல்லவும் என் குறையினைப் பெறவும் முடியா தென்றவாறு . வாழ்கிலேன் என்றது உலகவாழ்க்கையில் உளதாகும் வாதனைகளைச் சகிக்கும் ஆற்றலுடையேனல்லேன் என்றவாறு வருக வென்றருள் புரியாய் என்றது எனது நிலையினை அறிந்த நீ என்னைப் பார்த்து இங்கே வருக என்று அருள்செய்வாயாக என்றவாறு . ve à o te wo la 1100 இதன்சண் பற்றிவேன் ; உலகில் வாழ்கிலேன் ஆதலால் வருக வென்றருள்புரியாய் என்பதனால் முத்தி உபாயம் என்னும் பதிக நுத லிய பொருள் புலப்படுமாறு காண்க . 1 447 வம்மனேன் றன்னை பாண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரு மறியா வொருவனே யிருவர்க் குணர்விறந் துலகமூ டுருவும் செம்பெரு மானே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எம்பெரு மானே பென்னையாள் வானே யென்னை நீ கூவிக்கொண் டருளே . 105113