திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1020 திருவாசக ஆராய்ச்சியுரை எல்லை மூ துறையில் எழுந்தருளிய சிவபெருமானே, அன்று இருவர் காணும் நாள் - பழையகாலத்தில் திருமாலும் பிரமனும் நினது அடி யினதும் முடியினதும் எல்லையைக் காணத் தொடங்கிய நாளில், உலகும் உருவி ஆதி ஈறு இன்மை வல்லையாய் வளர்ந்தாய் - பூமி அந் தரம் சுவர்க்கம் என்னும் மூன்றுலகங்களையும் ஊடுருவிக் கீழும் மேலும் சென்று முதலும் முடிவும் இல்லாதிருக்கும் தன்மையில் வலிமையை யுடையையாய் வளர்ந்தவனே, வாழ்கிலேன் - இவ்வுலகில் யான் வாழு மாற்றலுடையேனல்லேன், வருக என்று அருள் புரியாயே-இங்கே வருக என்று அழைத்தருள்வாயாக. அரக்கர்புரம் எரித்தானே, நான் நின் பற்றன்றிப் பிறிதொரு பற்று உடையேனல்லேன். தில்லை வாழ் கூத்தா, சிவபுரத்து அரசே. திருப்பெருந்துறையுறை சிவனே, அன்று இருவர் எல்லை காணும் நாள் மூன்றுலகங்களையும் ஊடுருவிக் கீழும் மேலும் சென்று முதலும் முடிவும் இல்லாதிருக்கும் தன்மையில் வல்லையாய் வளர்ந்தாய், இவ்வுலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன் வருக என்று அருள்புரியாய் என்பதாம். வல்லை - விரைவு என்றது உடனே, இமைப்பொழுதின், நொடிப் பொழுதில் என்றபடி. 'வல்லையே இடர்தீர்த்திங்கடிமை கொண்ட" (216-10) என அப்பரடிகள் வாக்காலறிக. புரம் வல்லை எரித்த கோனே என்பது "புரமூன்று உடனே வேவக் கண்டானை" "மதில் மூன்றுமொருகணையால், எரித்தாராம் ஞான.149-6 20120204 இமைப்பளவில்' ஞான.322 - 6 ''மும்மதிலும் நொடியளவிற் பொடி செய்த முதல்வன்" (ஞான. 131-4) எனத் தேவாரத்தும் வருவன காண்க 011 அரக்கரும் அசுரரும் பெரும்பாலும் ஒரு தன்மையராதலின் அரக் கர்புரம் என்றாராயினும் அசுரர்புரம் என்பது கருத்தாகக்கொள்க. "முத்தா வசுரர்கள் மொய்த்த முப்புரம்" "வல்லசுரர் புரங்கள் மூன்றும்'' F என வருவனவற்றாலுமறிக. எல்லை - அடியினதும்முடியினதும் எல்லை. எல்லை காணும் நாள் எனக் கூட்டிப் பொருள் கொள்க. அன்று என்றது பண்டறிசுட்டு. திருமாலும் பிரமனும் இறைவனது அக்கினிப்பிழம்பின் அடியையும் அன்று முடியையும் தேடத்தொடங்கிய காலத்தைக் குறித்தது. இருவர் எல்லை காணும் நாள் மூவுலகும் உருவி ஆதியீறின்மை வல்லை யாய் வளர்ந்தாய் எனக் கூட்டிப் பொருள் கொள்க. எல்லை மூவுலகும் உருவி அதியீறின்மையாய் வளரும் ஆற்றல் இறைவன் ஒருவனுக்கே யன்றிப் பிறருக்கின்மையின் "வல்லையாய் வளர்ந்தாய்' என்றார். ஞான.271-10 நாவு. 232-1
1020 திருவாசக ஆராய்ச்சியுரை எல்லை மூ துறையில் எழுந்தருளிய சிவபெருமானே அன்று இருவர் காணும் நாள் - பழையகாலத்தில் திருமாலும் பிரமனும் நினது அடி யினதும் முடியினதும் எல்லையைக் காணத் தொடங்கிய நாளில் உலகும் உருவி ஆதி ஈறு இன்மை வல்லையாய் வளர்ந்தாய் - பூமி அந் தரம் சுவர்க்கம் என்னும் மூன்றுலகங்களையும் ஊடுருவிக் கீழும் மேலும் சென்று முதலும் முடிவும் இல்லாதிருக்கும் தன்மையில் வலிமையை யுடையையாய் வளர்ந்தவனே வாழ்கிலேன் - இவ்வுலகில் யான் வாழு மாற்றலுடையேனல்லேன் வருக என்று அருள் புரியாயே - இங்கே வருக என்று அழைத்தருள்வாயாக . அரக்கர்புரம் எரித்தானே நான் நின் பற்றன்றிப் பிறிதொரு பற்று உடையேனல்லேன் . தில்லை வாழ் கூத்தா சிவபுரத்து அரசே . திருப்பெருந்துறையுறை சிவனே அன்று இருவர் எல்லை காணும் நாள் மூன்றுலகங்களையும் ஊடுருவிக் கீழும் மேலும் சென்று முதலும் முடிவும் இல்லாதிருக்கும் தன்மையில் வல்லையாய் வளர்ந்தாய் இவ்வுலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன் வருக என்று அருள்புரியாய் என்பதாம் . வல்லை - விரைவு என்றது உடனே இமைப்பொழுதின் நொடிப் பொழுதில் என்றபடி . ' வல்லையே இடர்தீர்த்திங்கடிமை கொண்ட ( 216-10 ) என அப்பரடிகள் வாக்காலறிக . புரம் வல்லை எரித்த கோனே என்பது புரமூன்று உடனே வேவக் கண்டானை மதில் மூன்றுமொருகணையால் எரித்தாராம் ஞான.149-6 20120204 இமைப்பளவில் ' ஞான .322 - 6 ' ' மும்மதிலும் நொடியளவிற் பொடி செய்த முதல்வன் ( ஞான . 131-4 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க 011 அரக்கரும் அசுரரும் பெரும்பாலும் ஒரு தன்மையராதலின் அரக் கர்புரம் என்றாராயினும் அசுரர்புரம் என்பது கருத்தாகக்கொள்க . முத்தா வசுரர்கள் மொய்த்த முப்புரம் வல்லசுரர் புரங்கள் மூன்றும் ' ' F என வருவனவற்றாலுமறிக . எல்லை - அடியினதும்முடியினதும் எல்லை . எல்லை காணும் நாள் எனக் கூட்டிப் பொருள் கொள்க . அன்று என்றது பண்டறிசுட்டு . திருமாலும் பிரமனும் இறைவனது அக்கினிப்பிழம்பின் அடியையும் அன்று முடியையும் தேடத்தொடங்கிய காலத்தைக் குறித்தது . இருவர் எல்லை காணும் நாள் மூவுலகும் உருவி ஆதியீறின்மை வல்லை யாய் வளர்ந்தாய் எனக் கூட்டிப் பொருள் கொள்க . எல்லை மூவுலகும் உருவி அதியீறின்மையாய் வளரும் ஆற்றல் இறைவன் ஒருவனுக்கே யன்றிப் பிறருக்கின்மையின் வல்லையாய் வளர்ந்தாய் ' என்றார் . ஞான.271-10 நாவு . 232-1